ஜாக்கி சான் 25. திறமையைக் கண்டு கொண்ட இயக்குநர்

This entry is part 8 of 18 in the series 26 ஜனவரி 2014

    சீசனல் பிலிம்ஸ் இம் சி யூன் ஆரம்பத்தில் ஷா சகோதரர்கள் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தவர்.  அவர் இளைய திறமைகளைக் கண்டு கொள்வதில் சமர்த்தர்.  இம் புரூஸ் லீயின் திறமையைக் கண்டு, ஷா நிறுவனத்தினரிடம் பெரிய ஒப்பந்தம் செய்யும் கருத்தை முன் வைத்தார்.  ஆனால் அதற்கு அவர்கள் ஒப்பவில்லை.  பெரிதும் போராடி தோல்வி கண்டதன் காரணமாக, மனக்கசப்பு ஏற்பட்டு, அந்த வேலையை விட்டு வெளியே வந்து, தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார்.  பல […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 59 ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 3 of 18 in the series 26 ஜனவரி 2014

  (Children of Adam) உருளும் கடலுக்கு அப்பால் மக்கள் ..! (Out of the Rolling Ocean, the Crowd)    (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா              உருளும் கடலுக்கு அப்பால் திரளும் மக்கள் ! மெதுவாய் விழும் துளிச் செய்தி அது முணுமுணுக்கும் : உன்னை நேசிப்பதாய்ச் சொல்வேன் என்னுயிர் நீங்கும் முன்பே ! வெகு தூரத்தி லிருந்து வருகிறேன் உன்னைக் […]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-19 ஸ்ரீ கிருஷ்ண தூது-இறுதிப் பகுதி.

This entry is part 2 of 18 in the series 26 ஜனவரி 2014

  ஸ்ரீ கிருஷ்ணர் கிளம்பும்பொழுது கர்ணனை தனது தேரினில் அழைத்துச் செல்கிறார். கர்ணன் ஸ்ரீ கிருஷ்ணரை சிறைப் பிடிக்க வந்த கூட்டத்தைச் சேர்ந்தவன். அவனை அவர் எதற்காக தேரினில் அழைத்துச் செல்லவேண்டும்? அதனை விரிவாக எடுத்துரைப்பது ஸ்ரீ கிருஷ்ணரின் நற்குனங்களைத் தெளிவாக எடுத்துரைக்கும். போர்த்திறங்களிலும் , சட்ட நுணுக்கங்களிலும் ஸ்ரீ கிருஷ்ணர் சிறந்தவர் என்று ஏற்கனவே பார்த்து விட்டோம்.. முரண்பாடுகளை முன் நிறுத்தி அவர் காரியங்களை எவ்வாறு சாதித்துக் கொள்கிறார் என்று பார்ப்போம். இதையும் சேர்த்து ஸ்ரீ […]

மருத்துவக் கட்டுரை கருப்பைக் கழுத்து புற்றுநோய் ( CERVICAL CANCER )

This entry is part 1 of 18 in the series 26 ஜனவரி 2014

” செர்விக்ஸ் ” அல்லது தமிழில் கருப்பையின் கழுத்து என்பது கருப்பையின் குறுகலான கழுத்துப் பகுதியாகும். இது பெண் குறியின் உட்பகுதி.           இதன் வழவழப்பான உட்சுவரில்தான் புற்றுநோய் செல்கள் ( Cancer Cells ) உருவாகின்றன. .சில பெண்களுக்கு இங்குள்ள ஆரோக்கியமான செல்கள் ( Healthy Cells ) உருமாறி அசாதாரமான செல்களாக ( Abnormal cells ) ஆகின்றன. இதை Displasia அல்லது உருமாற்றம் என்று அழைக்கின்றனர். இந்த உருமாறிய செல்கள் புற்றுநோய் செல்கள் […]

”ஆனைச்சாத்தன்”

This entry is part 4 of 18 in the series 26 ஜனவரி 2014

         கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத்தன், கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே, காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து, வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ, நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி, கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ, தேச முடையாய்! திறவேலோ ரெம்பாவாய் திருப்பாவையின் ஏழாவது பாசுரமான இதில் பகவானின் பெருமையை அறிந்திருந்தும் மறந்து கிடப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள். கதவைத் தட்டுகிறார்கள். அவளோ ”உள்ளிருந்தே பொழுது விடிந்துவிட்டதா?” என்று கேட்கிறாள்.                          “       […]

கட்டுரை வழங்க. கால நீட்டிப்பு – “துறைதோறும் கம்பன்’ சர்வதேசக் கருத்தரங்கம்

This entry is part 5 of 18 in the series 26 ஜனவரி 2014

“துறைதோறும் கம்பன்’ சர்வதேசக் கருத்தரங்கம்: மார்ச் 15-இல் காரைக்குடியில் தொடக்கம் 76ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் காரைக்குடி கம்பன் கழகம் இடையறாது கம்பன் திருநாள் நடத்திவருவதும். சென்ற ஆண்டு சிறப்பாக, காலந்தோறும் கம்பன் என்ற பொருண்மையில் உலக அளவில் கருத்தரங்கை நடத்தி, மூன்று பெருந்தொகுதிகளை வெளியிட்டதும் வரலாறு. இந்த ஆண்டு, பவள விழா நிறைவை ஒட்டி, மீண்டும் கூடுகிறது- பன்னாட்டுக்கருத்தரங்கம் கம்பன் தமிழ் ஆய்வு மையம் சார்பில் “துறைதோறும் கம்பன்’ என்ற தலைப்பில் வரும் மார்ச் 15-ஆம் தேதி […]

வளரும் அறிவியல் – மின் இதழ்

This entry is part 7 of 18 in the series 26 ஜனவரி 2014

அன்புடையீர், தங்கள் மின் இதழில் மற்றொரு இதழை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.  இந்த இதழ் தனித்தன்மை வாய்ந்து. ‘வளரும் அறிவியல்’.   நம் அறிவியல் அறிவை மேலும் விரிவுப்படுத்த தமிழ் அறிவியல் மின் இதழ்.  அதைப் பற்றி அறிய கீழ்கண்ட மின் முகவரியை அழுத்தவும். http://www.valarumariviyal.com/kaiyarikey_sevai.html உலகெங்கும் இருக்கும் அறிவியலாளர்கள் இதற்கு ஆதரவு தந்து, அதை மேன்மேலும் வளரச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

நீங்காத நினைவுகள் – 31

This entry is part 6 of 18 in the series 26 ஜனவரி 2014

         1996 இல் வைக்கப்பட்ட அமுதசுரபி மாத இதழின் நாவல் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் தலைமை தாங்கிய, அப்போது சென்னை நீதிமன்றத்தில் நடுவராய்ப் பணிபுரிந்து கொண்டிருந்த, மரியாதைக்குரிய திரு கற்பக விநாயகம் அவர்கள் ஆற்றிய உரையைச் செவிமடுத்தவர்கள் அதை மறந்திருக்க மாட்டார்கள். அவ்வளவு அருமையான சொற்பொழிவு அது.  தமக்கு முன்னால் அவ்விழாவில் பேசிய காவல்துறை அலுவலர் திரு ரவி. ஆறுமுகம் அவர்களின் பேச்சைப் பாராட்டிய பின், தாமும் அவரும் ஒன்றாய் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பதோடு […]