சென்னை புத்தகக் கண்காட்சியில் வல்லினம் பதிப்பக நூல்கள்

This entry is part 10 of 40 in the series 8 ஜனவரி 2012

சென்னை புத்தகக் கண்காட்சி கடை எண் : 119 ‘கறுப்பு பிரதிகள்’ பதிப்பகத்தோடு வல்லினமும் இணைந்து மலேசிய படைப்பிலக்கியங்களை தமிழகத்திற்கு அறிமுகம் செய்யும் திட்டத்தை முதலில் வகுத்துக்கொடுத்தவர் ஷோபா சக்திதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இத்திட்டம் குறித்து தோழர் நீலகண்டனிடம் பேசியபோது அவரும் உற்சாகமாக ஆமோதித்தார். முதலில் சீ. முத்துசாமியின் சிறுகதை தொகுப்பை வெளிகொணர்வதென முடிவானது. அதற்கான அடிப்படை வேலைகளையெல்லாம் செய்துமுடித்துவிட்ட நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் அத்திட்டம் கைவிடப்பட்டது. கடந்த ஆண்டு தமிழகப்பயணத்தின் போது தோழர் […]

மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள் (துருக்கி நாட்டுச் சிறுகதை)

This entry is part 9 of 40 in the series 8 ஜனவரி 2012

அஸீஸ் நேஸின் தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை அவர் இறுதியாக சிறையில் கழித்த காலம் மிகவும் கொடுமையானது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு மிகவும் தொலைதூரத்திலிருந்த ஒரு பிரதேசத்திற்கு அவர் நாடுகடத்தப்பட்டார். அந்தப் பிரதேசத்துக்கும் அம் மக்களுக்கும் அவரொரு புதியவராக இருந்தார். அவர் சிறையிலிருந்த போது அவரது மனைவியால் அவர் விவாகரத்து செய்யப்பட்டிருந்தார். அவரது எல்லா எதிர்பார்ப்புக்களும் சிதறுண்டு போயிருந்தன. வாழ்க்கையைக் கொண்டு செல்லப் போதுமான பணம் கூட அவரிடமிருக்கவில்லை. வேலையொன்றைத் தேடிக் கொண்டு, அமைதியான […]

இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை

This entry is part 8 of 40 in the series 8 ஜனவரி 2012

நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள் புத்தாண்டில் முதல் முயற்சியாக புற்றுநோய்விழிப்புணர்வு குறித்த இந்த போட்டிகளுடன் நேசம் தன் பணியை துவங்குகிறது.  மார்பகம், கர்ப்பபைவாய், ரத்தம், எலும்பு, நரம்பு, தொண்டை, நுரையீரல் என்று உடம்பில் எந்த பாகத்திலும் புற்றுநோய் வரலாம். இதை கண்டறிவது என்பது கொஞ்சம் சிரமமான காரியம் என்றாலும் சில சோதனை அல்லது அறிகுறிகள் மூலம் ஸ்க்ரீனிங் எனப்படும் புற்றுநோய்கண்டறிதல் சோதனையை செய்வது நல்லது. 40 வயதுக்கு மேல் […]

ஜெயமோகனுக்கு “முகம் “ விருது

This entry is part 7 of 40 in the series 8 ஜனவரி 2012

திருப்பூர் கோதபாளையம் காதுகேளாதோர் பள்ளியில் குக்கூ இயக்கம் சார்பில் “முகம்” விருது ஜெயமோகனுக்கு 27/12/11 அன்று அளிக்கப்பட்டது திருப்பூரில் காதுகேளாதோர் பள்ளி முருங்கப்பாளையும், கோதாபாளையம் பகுதிகளில் 300 மாணவர்களைக்கொண்டு 15 ஆண்டுகளாக இயங்கிவருகிறது. அதன் நிர்வாகி முருகசாமியும் காது கேளாத விளிம்பு நிலை மனிதரே. குக்கூ இயக்கம் குழந்தைகளின் மத்தியில் கல்வி, விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காக சிவராஜின் தலைமையில் இயங்கி வருகிறது. அதன் சார்பில் “ முகம் “ விருது இயற்கைவேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார், பழங்குடியினமக்கள் தலைவர் […]

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை –

This entry is part 6 of 40 in the series 8 ஜனவரி 2012

தாங்கள் அறுவடை செய்த செல்வத்தை தான தருமம் செய்வதைக் காட்டிலும் தாசிக்கு தருவதனூடாக தங்கள் ஆண்மையை வெளியுலகிற்கு உறுதிபடுத்து நினைக்கிறார்கள், அவ்வளவுதான். 10. சீர்காழியிலிருந்து திரும்பிய முதல் நாள் இரவு தூக்கமின்றி கழிந்தது. உப்பரிகையின் கைப்பிடி சுவரிலமர்ந்து வானத்தை வெகு நேரம்பார்த்தாள். நட்சத்திரங்களில் இளைஞனைத் தேடினாள். விரல்கொண்டு அவளது முழங்கையையை தடவிப்பார்த்துக்கொண்டாள் இளைஞைனின் விரல் தீண்டிய இடங்களில் வெது வெதுப்பினை உணர்ந்தாள். மயிற்கால்கள் சிலிர்த்தன. ஓர் ஆணின் ஸ்பரிஸம் இதற்கும் முன்பும் சித்ராங்கிக்கு நேர்ந்துள்ளது. இவள் வயது […]

ஜென் ஒரு புரிதல் -26

This entry is part 5 of 40 in the series 8 ஜனவரி 2012

பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த “யுவான் மெய்” யின் கவிதைகள் இவை: (கொள்கை என்னும் கவிதை ஜென் தத்துவத்தின் தனிச்சிறப்பை உணர்த்துவது ) மலை ஏறுகையில் ——————– நான் ஊதுபத்தி ஏற்றினேன் நிலத்தைப் பெருக்கினேன் ஒரு கவிதை வருவதற்காகக் காத்திருந்தேன் பிறகு நான் சிரித்தேன் மலையின் மீது என் உதவியாளர்கள் மீது ஊன்றியபடி ஏறினேன் மேகத்தின் பிசுறுகளை எவ்வளவு அப்பக்கம் தள்ளி விட்டது பார் நீல வானம் அதன் கலையில் என்னால் ஆசானாக முடியுமா? மீண்டும் நீர்வீழ்ச்சி அவதானிப்பில் […]

காதறுந்த ஊசி

This entry is part 4 of 40 in the series 8 ஜனவரி 2012

_____ குருசு.சாக்ரடீஸ் நேற்று பெய்தது பாலைவனத்து மழை விரட்டி சேகரிக்கிறது என் பால்யம் சிரட்டையில் நிரம்புகிறது மழை ஏக்கத்தில் ததும்பும் துளிகளாய் நீ கொண்டுதந்த ஈரத்தில் வெக்கையின் உதிர்ந்த சிறகுகள் பூப்பெய்திய பெண்ணின் தொடக்க பருவத்திலிருக்கிறது பாலை நான் புரண்ட மணல்வெளிகளில் ஈரம் தருவித்த பெண்ணின் வாசம் வந்துபோன தடங்களற்ற பாலைமழையை கொண்டாட நீ அனுப்பி தந்த பைரிகள் உச்சந்தலையை கொத்துகின்றன தப்பித்தோடும் மணல்வெளியில் தனிமையின் கதவுகளை என் மரணத்தின் முன் தட்டுவேன் அது தன் முகங்களை […]

அகநானூறு உணர்த்தும் வாழ்வியல் அறன்கள்

This entry is part 3 of 40 in the series 8 ஜனவரி 2012

முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனித வாழ்க்கை உயர்வானது, அரிதானது. வாழ்தல் என்பது இயற்கை மனிதனுக்கு அளித்த பெருங்கருணை. காற்றும் நீரும், வெப்பமும் அள்ளக் குறையாமல் காலம் காலமாக வழங்கிவரும் இயற்கைப் பேராற்றல்கள். அவற்றின் வழி அனைத்து வசதிகளும் பெற்ற மானுடரிடம், இவ்வியற்கை ஆற்றலைச் சமமாகப் பகிர்ந்து வாழ்வை அனுபவித்து வாழாமல், தங்களுக்குள் சமயம், மொழி, இனம். சாதி போன்றவற்றால் வேறுபட்டு மனித உறவுகளைப் பிரித்தனர். வாழ்தல்; என்பதன் பொருள் […]

சில்லறை நோட்டு

This entry is part 2 of 40 in the series 8 ஜனவரி 2012

சந்துருவுக்கு பெரும் பணக்காரனாக வேண்டும் என்று ஆசை! எப்படி பணக்காரனாக ஆவது? உழைத்துச் சம்பாதிப்பதென்றால் – அது அன்றாட உணவுக்குக்கூடப் போதாது! லட்சம் லட்சமாக – கோடி கோடியாகச் சிலரிடம் பணம் இருக்கிறதே – அவர்களெல்லாம் உழைத்துத்தான் சம்பாதிக்கிறார்களா? அவனுக்கென்னவோ நம்பிக்கையில்லை! அவனுக்குத்தான் நன்றாக தெரியுமே – உழைத்து உழைத்துக் களைத்ததுதான் மிச்சம்! கோடீசுவரனாக வேண்டாம் – ஒரு நூறீசுவரனாகவாவது அவனால் ஆக முடிந்ததா? இல்லையே! பின் ஏன் உழைத்து உழைத்து ஓடாகப் போக வேண்டும்? சந்துருவின் […]

அள்ளும் பொம்மைகள்

This entry is part 1 of 40 in the series 8 ஜனவரி 2012

ஏக்கக்கண்கள் விளையாட்டுப் பொருட்களின் மீதே அம்மாவின் தோள்களில் கனவைச் சுமந்துகொண்டே ஊமையாகிறாள் ரத்தம் கசியும் தொடையின் கிள்ளலுக்கு அஞ்சியபடியே குழந்தை கோ.புண்ணியவான் Ko.punniavan@gmail.com