பெண்பால் ஒவ்வாமை

பசுவுக்குப் பூஜை பெண்சிசுவுக்கு கள்ளிப்பால் தொல்காப்பியன் அறியாத பால்வேற்றுமை என்று 11 வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கவிதை இப்போது நினைவுக்கு  வருகிறது. 26 ஜூன் 2011 ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான  பெண்பால் அழித்தல், பால் மாற்று அறுவைச்சிகிக்சை…

“கானுறை வேங்கை” விமர்சனம்

கடமா தொலைச்சிய கானுறை வேங்கை இடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும் - இடமுடைய வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர் மானம் அழுங்க வரின் என்ற நாலடியார் பாட்டில் இருந்து பெறப்பட்ட தலைப்பு "கானுறை வேங்கை". ஆங்கிலத்தில் கே.உல்லாஸ் காரந்த் எழுதிய "The Way…

வேடிக்கை

வீதியின் வழியே சென்ற பிச்சைக்காரனின் தேவை உணவாய் இருந்தது வழிப்போக்கனின் தேவை முகவரியாய் இருந்தது கடந்து சென்ற மாணவர்களின் கண்கள் மிரட்சியுடன் இருந்தது குறிசொல்பவள் தேடினாள் தனது பேச்சுக்குத் தலையாட்டும் ஒருத்தியை சோப்பு விற்பவள் யோசித்துக் கொண்டே வந்தாள் இன்று யார்…

பயணம்

ஹபீபுல்லா கிளம்பிக் கொண்டிருந்தார். பாத்திமுத்துவும் அவரோடு சேர்ந்து பொருட்களைப் பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அதை எடுத்து வச்சியா, இத வச்சியா என்று கேட்டுக் கொண்டே, மகனின் கனமான மௌனத்தையும் கவனிக்கத் தவறவில்லை. மகன் சலீமும் பேப்பர் படிப்பது போல இருந்தாலும்,…

வேஷங்கள்

முன்னிரவின் குளிர்ந்த காற்று உடலைத் தழுவிச் சென்றது. ஆனால் மனதில் படிந்திருந்த குமைச்சலை அதனால் அடக்க முடியவில்லை. வைதீஸ்வரன் பார்வை வானத்தில் படர்ந்தது. கொட்டிக் கிடந்த ஏகப் பட்ட நட்சத்திரங்களில் எது ரொம்பவும் அழகு என்று தேடிச் செல்வதைப் போல நிலவு…

முடிச்சிட்டுக் கொள்ளும் நாளங்கள்..

* ஒரு கறுமைப் பொழுதை ஊற்றிக் கொண்டிருக்கிறேன் இரவின் குடுவையில் வெளிச்சத் திரள் என சிந்துகிறாய் துயரத்தின் வாசலில் கைப்பிடியளவு இதயத்தில் அழுத்தும் நினைவு நாளங்களில் முடிச்சிட்டுக் கொள்கிறது எப்போதும் முடிவற்று விரியும் கோரிக்கை யாவும் **** --இளங்கோ 

இழவு வீடு

ஒவ்வொரு இழவு வீடும் பெருங்குரலோடுதான் துக்கத்தை வெளிப்படுத்த ஆரம்பிக்கின்றன.பெண்கள் ஒப்பாரி வைக்க ஆண்கள் அழுகையை அடக்கிக்கொண்டு வெளியில் போய் நிற்கிறார்கள் நாட்டமை போலும் ஒரு உறவினர் தொலைபேசி மூலம் தொலைதூர சொந்தங்களுக்கு செய்தி தருகிறார் அக்கம்பக்கம் முதலில் வந்து துக்கம் விசாரிக்க…

பகுப்பாய்வின் நிறைவு

கவனமற்று இருக்கின்ற அனைத்து இருப்பு கொள்கைகள் எழுகின்ற கேள்வியை பற்றிக்கொள்கிறது தன் முனைப்பு . கேள்விகள் அழகியல் தன்மை வாய்ந்தவை கூடுதலான மனத்திரை உடையவை முக்காலத்திலும் தொன்றுத்தொட்டு வழக்கம் உடையவை . அதன் விடையில் நிறைவு பெறாது அடுத்த நிலைக்கு ஆயுத்தப்படுத்தும்…