நீள் வழியில்

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

சத்யானந்தன் தேடிச் சென்றவன் விருப்ப விடை உரிமையை நிலை நாட்ட இயலும் மடிக்கணினி கைபேசி இங்கித விதிவிலக்குப் பெற்றவை வரவேற்பு அறை பாதுகாப்பின் இறுதிக் கோடு தலையசைப்புடன் எழுந்தேன் குழாயில் தண்ணீர் வரவில்லை என்றாள் சமாதானமாய் நின்ற இடம் திகைத்த புள்ளி நீள்வழியில் தொலைந்து போகும் இனி தன் அறைக்குள் அவள் புகலாகலாம் பெருக்கு வறட்சி இரண்டும் தண்ணீர்க் குழாயின் வீச்சுக்கு வெளியே

ரோல் மாடல் என்னுடைய பார்வையில்.:-

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

வாழ்க்கையில் சாதிக்கத்துடிக்கும் அனைவருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் யாராவது ஒருத்தர் ரோல் மாடலாக இருந்திருப்பார்கள். சிலருக்கு அவர்கள் குடும்பங்களில் இருப்பவர்களே ரோல்மாடல்களாக இருப்பார்கள். சிலருக்கு சாதனை புரிந்தவர்கள். வெற்றிபெற்ற ஒவ்வொருவரின் பின்னும் ரோல்மாடல்களின் பங்கு கட்டாயம் இருக்கும். இந்நூலில் தம் உழைப்பால் உயர்ந்து முன்னுக்கு வந்த 21 பேரின் சாதனைக் கதைகள் ரோல்மாடல்களாக விரிகின்றன நம் கண்முன்னே. முன்மாதிரிகள் என்பவர்கள் எப்படியும் இருக்கலாம்தானே. அது போல் இந்நூல் பலதரப்பட்ட மனிதர்களையும் அவர்களின் வெற்றிக்கதைகளையும் கூறுகிறது. சூழ்நிலையைக் கடந்து […]

பெரு நகர மக்களின் வாழ்வியல் நிஜந்தனின் ” பேரலை “ நாவலை முன் வைத்து….

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

சுப்ரபாரதிமணியன் ஏழு நாவல்களை இதுவரை எழுதி வெளியிட்டிருக்கிறார் நிஜந்தன். “ பேரலை “ நிஜந்தனின் ஆறாவது நாவல்.முந்தின நாவல்களைப் போலவே இதிலும் பெரு நகர மக்களின் வாழ்க்கையைச் சித்தரித்திருக்கிறார்.இவரின் முதல் நாவல் “ மேக மூட்டம்” ரமணி, மீனலோசனி தம்பதிகளின் பிணக்கையும் மீனலோசினியின் முன்னாள் காதலன் பீட்டரின் குறுக்கீட்டால் சிதையும் அவர்களின் தாம்பத்திய வாழ்க்கையையும் விவரித்தது. மனநலவியாதியில் எதிர் விளைவு இல்லாத மருந்தைக் கண்டு பிடிக்கும் மனநல வைத்தியர் முயற்சிகளையும், சாவு பற்றிய மனக்குழப்பங்களையும் விவரித்தது. “ […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 79 ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

  (1819-1892)   ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Here the Frailest Leaves of Me) & [No Labour Saving Machine]   எனது நொறுங்கிய இலைகள் வேலைப் பளு குறைக்கும் யந்திரம்   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா        எனது நொறுங்கிய இலைகள்     இந்த நொறுங்கிய இலைகள்தான் எனக்குரியவை ! ஆயினும் இவைதான் எனக்கு வலு தருபவை என்னுடன் நீடித்து […]

நிலை மயக்கம்

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

ஸ்வரூப் மணிகண்டன்  நிலா தெரியாத இரவில் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தோம். பின் நிலவு தெரிந்த பொழுதில், எண்ணி முடித்த நட்சத்திரங்களைப் பறித்து நமது தோட்டத்தில் நட்டு வைத்தோம். விரிந்து நிற்கும் நட்சத்திரங்களின் வாசத்தில் மயங்கி நின்றது நிலவும்.

தொடுவானம்    20. மனதில் உண்டான வலி

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

                                                                                                                    டாக்டர் ஜி. ஜான்சன்           20.  மனதில் உண்டான வலி           கார்கள் கிரீச்சிட்டு நின்றதைக்  கண்ட இளைஞர்கள் அங்கு ஓடி அவரைத்  தூக்கினர்.நல்ல வேளையாக அவர் விபத்துக்குள்ளாகவில்லை. அங்கிருந்த சில பெரியவர்கள் சமாதானம் சொல்லி எங்களை அனுப்பி வைத்தனர். எனக்கு அவருடன் செல்ல பயமாக இருந்தது. அன்று இரவும் பயத்தால் விடிய விடிய  தூங்காமல் விழித்திருந்தேன்.            லதாவை காட்டுக்கு அழைத்துச் சென்றதைக் கண்டித்தது  சரிதான். ஆனால் நண்பனுடன் பந்து விளையாட்டுக்குச் சென்றதைக் கண்டிப்பபதா?           அவருடைய செய்கைகள் எல்லாம் எனக்கு வினோதமாகத் தெரிந்ததன.. அதோடு விபரீதமாகவும் புலப்பட்டது. அவரால் எனக்கு எதாவது ஆபத்து உண்டாகலாம் என்றும் என் […]

மல்லாங்கிணறு தந்த தமிழச்சி தங்கபாண்டியனும் கவிதையும்

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

  தமிழச்சி தங்கபாண்டியனின் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்த போது எனக்கு அவரை அவரை அறிமுகப்படுத்தியது கணையாழியில் அப்போது இருந்த யுகபாரதி. அதற்கு முன்னர் அவரை ஒரு இலக்கிய விழாவில் நிகழ்ச்சிகள் அறிவிப்பாளராகப் பார்த்தது நினைவுக்கு வந்தது. அவ்விழாவில் அவரது பிரசன்னம் அவருக்குத் தரப்பட்ட பொறுப்பிற்குள் அடங்கியதாக இருக்கவில்லை. எந்த கட்டத்துக்குள்ளும் அடங்காத ஆளுமை அவரது. காரணம் அவரது இயல்பான எப்போதும் காணத்தரும் சிரித்த முகம், தடையில்லாது சரளமாகப் பிரவாஹிக்கும்  வாசாலகம், துடி;ப்பான செயல் திறன் எல்லாம் […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : அகில ஈர்ப்பு விசை அலைகள்  இணைப் பிரபஞ்சங்கள் இருப்பைச்  சுட்டிக் காட்டும்

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_embedded&v=dhGRV8cD_tY  [Evidence of Gravitational Waves Points to Multiple Universes (VIDEO)] “வெறுமையிலிருந்து எதுவுமே உருவாக முடியாது.” லுகிரிடியஸ் ரோமானிய வேதாந்தி (Lucretius) கி.மு. (99-55) “நமது பிரபஞ்சம் பத்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெய்யாகவே வெறுமையிலிருந்து தோன்றியதாக நான் அனுமானம் செய்கிறேன் ! . . .ஏன் அவ்விதம் நிகழ்ந்தது என்னும் கேள்விக்கு எனது தாழ்மையான முன்னறிவிப்பு இதுதான் : எப்போதாவது ஒரு […]

தினம் என் பயணங்கள் -21 தேர்விற்கான நான்காம் நாள் பயணம்

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி (22.05.2014) வாழ்க்கையை ரசிப்பு வட்டத்திற்கு கொண்டு வர பல அனுபவங்களை கடந்து வர வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நிமிடத்தையும் ருசித்துப் பருகுவதான முயற்சிதான் என்னுடையது. வாழ்வோ சாவோ அதை ரம்மியத்தோடு கடந்து உயிர்ப்போடு வாழ்ந்து முடிக்க எத்தனிக்கும் ஒரு சாதாரணளின் வாழ்க்கையை எதிர்காலச் சந்ததிக்கு விட்டுச் செல்ல ஆசிக்கும் இலட்சிய நடை இந்த எழுத்து. சராசரி பெண்ணிற்கு மறுக்கப்படாத வாழ்வனுபவங்கள், பாசம், பாதுகாப்பு, இயலாமை என்று காரணம் காட்டி மறுக்கப்பட்ட போதும், அதை முனைந்து […]

எல்லா அப்பாக்களிலும் தெரியும் என் அப்பாவிற்காக !!!

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி குமிழ்ந்து தரை விழுந்த நீர்க் குமிழிப் பாதையின் குறுக்காக சர சர வெனக் கடந்த போது, வேகச் சீற்றத்துடன் தலை குத்தி வழிந்த போது, சாரல் மறைத்த பார்வையில் சாலை தெரியாக் குருடியாய் பயணித்த நொடி எங்கிருந்தோ வந்து இதயத்தைக் கீறிச் சென்றது உன் நினைவுகளின் உயிர் ! குடை தாங்கி நீளும் உன் கரங்கள் தரும் பாதுகாப்பின் உயிரலைகள் காற்றில் கரைந்துக் கொண்டிருக்கிறது நினைவுப் படுகையில். நனைந்து விழும் கூந்தல் நீர்ச் […]