அலகிலா விளையாட்டு

This entry is part 6 of 6 in the series 16 ஜூன் 2024

வெங்கடேசன் நாராயணஸ்வாமி கம்பன் சொல்லுகிறார்…. உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டு உடையார்  அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே நம்மாழ்வார் சொல்லுகிறார்: துன்பமும் இன்பமுமாகிய செய்வினையா யுலகங்களுமாய், இன்பமில் வெந்நரகாகி இனியநல்வான் சுவர்க்கங்களுமாய், மன்பல்லுயிர்களுமாகிப் பலபல மாய மயக்குகளால், இன்புரும் இவ்விளையாட்டுடையானைப் பெற்றேதுமல்லலிலனே. படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூவகை  அருந்தொழில் பரமனுக்கு   மிக   மிக   எளிது   என்பதை  ‘விளையாட்டு’   என்ற சொல்லாட்சி குறிக்கிறது. ‘காத்தும்     படைத்தும்    கரந்தும்  […]

`கற்பகதரு – சுவைத்தேன்’ – சுவையுரை

This entry is part 5 of 6 in the series 16 ஜூன் 2024

திரு ஜெயராமசர்மா அவர்களின் கற்பகதரு’ நூலைப் படிக்கத் தொடங்கியவுடன், எனக்கு சிறுவயதில் பள்ளியில் ஆசிரியர் சொல்லித் தந்தநட்டாயிரம்,பட்டாயிரம்’ என்ற சொற்பதம் ஞாபகத்திற்கு வந்தது. பனை இருந்தாலும் நீண்டகாலம் பயன் கொடுக்கும், வெட்டியபின்னும் பல்வேறு பொருட்களாக நீண்டகாலம் பயன் கொடுக்கும் என்பதை நட்டாயிரம் வருடம் நானிலத்தில் காய்த்து நிற்கும் பட்டாயிரம் வருடம் பாழ்போகா’ என்பார்கள். பனையைப் பற்றிப் பலரும் எழுதிய புத்தகங்கள் – தரவுகள் சார்ந்ததாகவும், ஆராய்ச்சி நிமிர்த்தமும், பிரச்சார நோக்கிலும் அமைந்தவை. திரு.ஜெயராமசர்மா அவர்கள் எழுதியகற்பகதரு’ என்றஇந்தப் […]

வாசல் தாண்டும் வேளை

This entry is part 4 of 6 in the series 16 ஜூன் 2024

ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி இருள் அப்போதுதான் விலக ஆரம்பித்திருந்தது. வாசு போர்வையை நன்றாகஇழுத்து முகத்தை மூடிக் கொண்டான். மார்கழி மாதக் குளிருக்கு சுகமான தூக்கம்தொடர்ந்தது. வள்ளி  கதவைத் திறந்தாள். இரவு வெகு நேரம் கழித்து வந்து  திண்ணையில் உறங்கிக் கிடந்த முனியனைப் பார்த்தாள். வெறுப்பு முகத்தில் தொற்றியது.வாசல் தெளித்து கோலமிட்டு நிமிர்ந்தாள்.வேப்ப மரத்தடியில்  நின்றிருந்த ஆட்டோவில் பாட்டிலும், குப்பம்மா கிழவியிடம் வாங்கிவந்து தின்றது போக மீதமிருந்த மிளகாய் பஜ்ஜிகளும்  சிதறிக் கிடந்தன. பக்கத்து வீட்டுநாய் பின்புற இருக்கையில் சுருண்டிருந்தது. […]

கவலையில்லை

This entry is part 3 of 6 in the series 16 ஜூன் 2024

வேண்டும்போதுதண்ணீருண்டுமரத்துக்குக்கவலையில்லைமக்கியதுமண்ணிலுண்டுபுழுக்களுக்குக்கவலையில்லைபசிக்கும்போதுமான்களுண்டுபுலிகளுக்குக்கவலையில்லைதேடும்போதுகனிகளுண்டுகிளிகளுக்குக்கவலையில்லைஈனுவதுபால் தரும்குட்டிகளுக்குக்கவலையில்லைபுழுக்களைப் பூச்சி தின்னும்பூச்சிகளைத் தவளை தின்னும்தவளைகளைப் பாம்பு தின்னும்பாம்புகளைக் கருடன் தின்னும்கருடனை மண் தின்னும்எது எதைத் தின்றும்எதுவும் அழியவில்லைஎதற்கும் கவலையில்லைஎன்னில் முளைப்பதும்எனக்குள் கிடப்பதும்என்னுடையதல்ல வென்றமண்ணுக்கும்கவலையில்லைகொண்டுவந்த தொன்றுமிலைகொண்டுசெல்வ தொன்றுமில்லைஉணர்ந்தால் போதும்ஒருபோதும் கவலையில்லைஅமீதாம்மாள்

கனடாவில் தேசிய பழங்குடி மக்கள் தினக்கொண்டாட்டம்

This entry is part 2 of 6 in the series 16 ஜூன் 2024

குரு அரவிந்தன் தேசிய பழங்குடி மக்கள் தினம் என்பது கனடாவின் முதற்குடி மக்கள், இன்யூட் மற்றும் மெடிஸ் பழங்குடியின மக்கள் ஆகியோரின் கலாச்சாரங்கள் மற்றும் அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரித்து கொண்டாடும் ஒரு நாளாக யூன் மாதம் 21 ஆம் திகதி இருக்கின்றது. கனடாவின் கவர்னர் ஜெனரல் ரோமியோ லெப்லாங்க் அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், 1996 ஆம் ஆண்டில் இருந்து இந்த நாள் கொண்டாடப்படுகிறது. கனடிய பழங்குடி மக்கள் பாரம்பரியமாக தங்கள் கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடும் ஒரு நாள் […]

நீயும்- நானும்.

This entry is part 1 of 6 in the series 16 ஜூன் 2024

ஜெயானந்தன். அவரவர் வீட்டை திறக்க அவரவர் சாவி வேண்டும். எவர் மனம் திறக்கும் எவர் மனம் மூடும் எவருக்கும் தெரியாது. சில முகங்களில் – துன்ப ரேகைகள் ஓடும். பல முகங்களில் – இன்ப தூண்கள் தெரியும். யாரோடும் வீதியில் நடக்கலாம். வீதியெங்கும் காலடிச் சுவடுகள் ரேகையில் எத்தனை வாழ்க்கை கனவுகள். பேசிக்கொண்டே செல்லும் வழியில் நடைப்பிணங்கள் ஏராளம். இன்பமும் துன்பமும் நாடகம்தானே இதில் நீயும் நானும் விதிவிலக்கல்ல……………………..!