This entry is part 5 of 9 in the series 17 மே 2026

வசந்ததீபன்

 

_______

தனிமை சுரந்தொழுகும்

நடுநிசியில்

மெளனம் வீற்றிருக்கிறது

த்யானத்தில்.

கடிகார ராட்டினத்தின்

காலச் சுழலில் தொங்கியபடி

பென்டுலமாக

இடமும் வலமுமாக

நில்லாது அலைவுறுகிறேன்.

மணித்துளிகள் அருந்திய

இரவின் இறப்பானது

மெலிதான ஆற்றலாக

இனம் பிரிக்கவியலா 

ரீங்கார ஒலிப்பாகிறது.

கனவு மரத்தினடியில்

போதிசத்துவர்

துண்டுப்பகலை

ஏந்தியபடி நிற்கிறான்.

வசந்ததீபன் 

Series Navigationகவிதைஅட!