தங்கராஜ் வாத்தியார் பிரம்பு அடி
கருமேகத் திரளின் பின்னால்
ஊதும் காற்று அலைய
பூமி தகிக்க
மழை நீர் ஊரெங்கும் பொழிய
நடு நடுவே மின்னலொன்று
ஆறாம்வகுப்பு லால்குடி பள்ளியில்
அந்நாள் தங்கராஜ் வாத்தியார் பிரம்பு போல் தாக்க
நல்லவர் அல்லார்க்கும்
வணங்கினார்க்கும் வணங்காதார்க்கும்
அறிந்தார்க்கும் அறியாதார்க்கும்
நடுநின்று பெய்யும் மழை
வெட்டவெளியில் தனியே ஆடும் ஊஞ்சல் ஆமோதிக்க.
***