மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியருக்கும், ஆசிரியக் குழுவினருக்கும் வாசகர்களுக்கும் வணக்கம் எல்லோருக்கும் இனிய பொஙகல் வாழ்த்துக்கள் சில அலுவல்களுக்காகவும் சிகிச்சைக்காகவும் இம்மாதம் சென்னைக்குச் செல்கின்றேன். ஜனவர் 25 முதல் மூன்று மாதங்கள் சென்னையில் இருப்பேன். என் அலைபேசி எண் 9940213031 என்னுடன் பேச நினைப்பவர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் கணினியில் குழுமங்களீல், இணைய இதழ்களீல் 12 வருடங்கள் உறவு. பல குழுமங்கள் உங்களின் அன்பு எனக்கு சக்தியைக் கொடுத்து எழுத வைத்தது அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் […]
வணக்கம் நண்பரே மலைகள் இணைய இதழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதமிருமுறை ஒவ்வொரு 3 மற்றும் 18 தேதிகளில் சரியான நேரத்திற்கு வருவதையும் , அதில் பல முக்கியமான படைப்புகள் வெளிவருவதையும் அறிவீர்கள். தற்போது மலைகள் தன் அடுத்த அடியைப் பதிப்பகத் துறையில் எடுத்து வைக்கிறது. மலைகள் பதிப்பகம் சார்பில் இந்த வருடம் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு இரண்டு புத்தகங்களைக் கொண்டு வருகிறது. வழக்கம்போல மலைகள் பதிப்பகம் வெளியிடும் இரண்டு புத்தகங்களையும் வாங்கி உங்கள் ஆதரவை நல்க […]
வணக்கம் திண்ணையில் எழுத்துக்கள் பழைய வடிவமைப்பில் குறியீட்டில் இருப்பதை மாற்றமுடியாதா.? இன்றைய தலைமுறையில் பல பேருக்கு விளங்காமல் போகலாம் உதாரணமாக ணை, னை, லை, மற்றும் றா, னா,ணா, நன்றியுடன் யூசுப் ராவுத்தர் ரஜித்
அன்புடையீர், எதிர்வரும் 10-ஜனவரி-2014 அன்று சென்னையில் நந்தனம் மைதானத்தில் புத்தகத்திருவிழா துவங்க இருக்கிறது. காவ்யா பதிப்பகம் வாயிலாக எனது இரண்டு நாவல்கள் ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ மற்றும் ‘முடிச்சு’ தொகுக்கப்பட்டு நாவல் தொகுப்பென வெளியாக இருக்கிறது. எனது நாவல் தொகுப்பு கிடைக்கும் இடம் காவ்யா பதிப்பகம், ஸ்டால் 491 & 492. எனது நாவல் புத்தகத்தின் முன் & பின் அட்டைகளையும், காவ்யா பதிப்பகம் சார்பில் விழா அழைப்பிதழையும் இங்கே இணைத்திருக்கிறேன். 2009 ல் எனது முதல் கவிதை […]
அன்பு நண்பர்களே, எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் பெருமைக்குரிய , ‘கோனார் மாளிகை’ பழனியப்பா பிரதர்ஸ்’ நிறுவனத்தின் மூலமாக என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’, பிரபல எழுத்தாளரான, அன்பிற்கினிய, சிவசங்கரி அம்மையார் அவர்களின் வாழ்த்துரையுடன் வெளிவந்திருக்கிறது. — ஓயாத மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கிற இந்த உலகத்தில் ஏதேதோ நடந்து கொண்டுதானிருக்கிறது. அடடா.. இப்படியும்கூட நடக்குமா? அறிவியல் வெகு தூரம் முன்னேறிவிட்ட இந்த காலகட்டத்தில்கூட இப்படியெல்லாம் நடக்கிறதா? இது எந்த அளவிற்கு […]
இலங்கையின் கலை இலக்கிய வரலாற்றில் முதன் முறையாக ‘அகரம்’ கலை இலக்கிய ஊடக நிலையத்தினால் புதிய தலைமுறை கலைஞர்களை ,படைப்பாளிகளை உருவாக்கும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக திரைப்பட பாடலாசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறையினை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. மிகவிரைவில் கொழும்பில் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ள இப் பயிற்சிப்பட்டறையில் திரைப்படத்தில் பாடல் எழுதும் நுட்பங்களையும் தன் அனுபவங்களையும் பிரபல கவிஞரும் திரைப்பட பாடலாசிரியரும் வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான பொத்துவில் அஸ்மின் வழங்க இருக்கின்றார். இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் தென்னிந்திய சினிமாவில் கால்பதிப்பதற்கான […]
லீனா மணிமேகலை ஜனவரி 3, 4 தேதிகளில் சென்னை பல்கலைகழகமும் பெண்கள் சந்திப்பும் இணைந்து நடத்திய பெண்ணிய உரையாடலின் அழைப்பிதழ் எனக்கு கிடைத்தது. அதன் கவிதைக்கான பொது நிகழ்வில் ஊடறு.காம் றஞ்சி தலைமையில், ஆழியாளின் கவிதைத்தொகுதியை மதுசூதனன் வெளியிட சுகிர்தராணி பெற்றுக்கொள்வதான நிகழ்வின் அறிவிப்பும் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் தான் அண்மையில், இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றி நான் எடுத்த White Van Stories குறித்த பொய்யான அறிக்கையை ஊடறு.காம் வெளியிட்டிருந்தது. அந்தப் பொய் அறிக்கையை […]
அன்புடை திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, திண்ணையின் எழுத்துருக்கள் பழைய முறைக்கு மாறிவிட்டது வியப்பாக இருக்கிறது. ஏன் இந்த மாற்றம்? பிற்போக்காக இருக்கிற்தே! இந்த மாற்றம் பற்றிய அறிவிப்பு எதனையும் நீங்கள் வெளியிட்டிருந்தால் நான் கவனிக்காமல் விட்டிருக்கலாம். சுட்டிக் காட்டுங்கள். இல்லையானால் இது பற்றிய விளக்கம் ஒன்று திண்ணையில் வெளியிடுவது நல்லது. ரெ.கா.
அன்புள்ள கோபால்சாமி சென்ற ஆண்டுக்கான விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் பெருமாள் முருகனை தேர்வு செய்திருக்கிறோம். உதிரிகளின் வாழ்நிலையை இலக்கியத்தில் சிறப்பாகப் பதிவு செய்திருப்பதற்காகவும்,ஒரு வட்டாரத்தன்மை குறித்த பார்வைக்கு அழுத்தம் கொடுத்திருப்பதற் காகவும்,வட்டாரச் சொல்லகராதி,வரலாற்றுக் கண்ணோட்டம்,இலக்கிய முன்னோடிகள் குறித்த மறுவாசிப்பு,கல்விப்புலத்தில் காத்திரமான இலக்கிய உரையாடல்களை முன்னெடுத்தது என இலக்கியச் செயல்பாடுகளை விரிவுபடுத் தியதிலும் அவர் பங்களிப்பு சிறப்பானது. விவாதத்தில் வந்த மற்ற படைப்பாளிகள்:சி.மோகன்,கோணங்கி,யூமா வாசுகி, ஆ.மாதவன். இத்துடன் பெருமாள்முருகனின் படைப்பு விவரங்கள் உள்ளன. வெளி ரங்கராஜன் 26.12.2013 பெருமாள் […]
தாயகம் கடந்த தமிழ் என்ற பொருளில், ஓர் அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நிகழவிருக்கிறது என்ற செய்தியினை மகிழ்வுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். (திண்ணை இதைக் குறித்து முன்னர் செய்து வெளியிட்டிருந்தது. நன்றி. ஆனால் இது Updated message. பேராளர் பதிவு, இணைய தள முகவரி எனச் சில மாற்றங்கள். இதை திண்ணையில் வெளியிடக் கோருகிறேன்) கோவையிலுள்ள தமிழ்ப் பண்பாட்டு […]