மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 30

This entry is part 36 of 43 in the series 17 ஜூன் 2012

« . நீ தெரிவிப்பது உண்மையெனில் வெங்கடாம்பாள் தமது மகனென்று விஜயநகர பேரரசுக்கு வாரிசாக அறிவித்திருக்க்கிற சிக்கம நாயக்கன் என்பவன், உண்மையில் அந்தணர் குழந்தையல்ல, செண்பகத்தின் மகன் » 33. சித்ராங்கி கண்விழித்தபோது பொழுது நன்றாக புலர்ந்திருந்தது. விடிந்து இருநாழிகை கழிந்தபிறகும் உறங்கியதை நினைக்க வெட்கமாக இருந்தது. அலுப்பாக உணர்ந்தாள் இருபதுவயதை இன்னும் முழுதாகக்கூடக் கடக்கவில்லை, வாழ்க்கை கசந்துவிட்டது. புறக்கடைக்குச்சென்று பல் துலக்கி காலைக்கடன்களை முடித்து உள்ளே வந்தாள். எண்ணெய் குப்பி¨யை எடுத்தாள். உள்ளே ஒன்றுமில்லை. கவிழ்த்து […]

முள்வெளி அத்தியாயம் -13

This entry is part 31 of 43 in the series 17 ஜூன் 2012

“டாக்டரு.. டாக்டரு” ன்னு நீங்க அதுலயே நிக்கிறீங்கம்மா…” பொறுமையிழந்தவளாக பொன்னம்மளைப் பார்த்துக் கிட்டத் தட்ட கத்தினாள் மஞ்சுளா. “டாக்டரு இவரு பப்ளிக்ல தவறாகவோ தொந்தரவாகவோ நடந்துக்கலேன்னாக்க நார்மல் அப்படீங்கறாரு… ஆனா இவரை வீட்டுக்குள்ளே அடைச்சு வைக்கறது பெரும் பாடா இருக்கு. ரெண்டு நாளைக்கி மின்னாடி வேலைக்காரி செக்யூரிட்டி எல்லாருக்கும் டிமிக்கி கொடுத்திட்டு இவரு வீட்டுக்கு வெளியிலேயே போயிட்டாரு…நாலு இடத்தில பேந்தப் பேந்த முளிச்சிக்கிட்டு நின்னா அக்கம்பக்கத்தில இருக்குறவங்க வம்பு பேசறாங்க .. என்னைத்தானே விசாரிக்கறாங்க… நீங்க கொஞ்ச […]

பஞ்சதந்திரம் தொடர் 48

This entry is part 22 of 43 in the series 17 ஜூன் 2012

பொன் எச்சமிட்ட பறவை ஒரு மலைக்கருகில்  பெரிய மரம் ஒன்று இருந்தது. அதில் ஒரு பறவை இருந்து வந்தது. அதன் எச்சத்திலிருந்து தங்கம் உற்பத்தியாகி வந்தது. ஒருநாள் அந்த இடத்துக்கு ஒரு  வேடன் வந்தான். அந்தப் பறவை அவன் எதிரிலேயே எச்சம் இட்டது. அது விழுகையிலேயே தங்கமாக மாறுவதை வேடன் கண்டான். ஆச்சரியமடைந்து போனான். ‘’ஆஹா, குழந்தைப் பருவத்திலிருந்து நான் பறவைகளைப் பிடித்து எட்டு வருஷங்கள் ஆகின்றனவே! ஒரு நாளாவது பறவையின் எச்சத்தில் பொன்னைக் கண்டதில்லையே!’’ என்று […]

தாய்மையின் தாகம்……!

This entry is part 19 of 43 in the series 17 ஜூன் 2012

வீதி உலா சுற்றி வந்து களைத்த சூரியன் அலுப்புத் தீர கடலுள் முங்கிக் குளிப்பதை வெட்கப் புன்னகையில் பட்டு மேகங்கள் கன்னம் சிவக்கக் கண்டு மயங்கிக் கொண்டிருக்கும் அந்தி சாயும் மாலை நேரம். அந்த ரம்மியமான மாலைக் காட்சியைத் தன் வீட்டு  பால்கனியில் நின்று கொண்டு ரசித்துக் கொண்டிருந்த உமாவின் கவனத்தை கீழே விளையாட்டுத் திடலில் இருக்கும்  ஊஞ்சல்களிலும் சறுக்கலிலும்  ஆரவாரமாக விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் தங்கள் பக்கமாக இழுத்தனர். இயற்கையோடு இணைந்திருந்த மனம் திரும்பி  கீழே விளையாடும் […]

ஆசை அறுமின்!

This entry is part 17 of 43 in the series 17 ஜூன் 2012

  சாம்பிராணிப் புகையின் மணம், மேக மூட்டமாய் வீடு முழுவதும் நிறைத்திருக்க, வெங்கடேசுவர சுப்ரபாதம் இதமாய் ஒலிக்க, விடியலில் எழுந்து குளித்து, மஞ்சள் பூசி, குங்குமமிட்ட மங்கலகரமான முகத்துடன், நுனியில் முடிந்த கூந்தலில் கொஞ்சமாக முல்லைப் பூவும் சூடி, விளக்கேற்றி, பூஜை முடித்து, மணக்க, மணக்க பில்டர் காபியுடன் மகனை எழுப்ப வந்தாள் மங்களம். கணவர் பூஜை அறையில் இருக்கிறார். பூஜை முடிய எப்படியும் இன்னும் 20 நிமிடமாவது ஆகும். மகன் குளிக்காமல் காபி சாப்பிடுவதற்கு திட்டி […]

சைத்ரா செய்த தீர்மானம்

This entry is part 10 of 43 in the series 17 ஜூன் 2012

கோமதி   சைதன்யனும் சைத்ராவும் காதலர்கள். அவன் தன் தங்கையின் திரு மணத்திற்காகவும் அவள் தன்னுடைய அக்காவின் கல்யாணத்திற் காகவும் காத்திருக்க வேண்டிவந்தது. மூன்றுவருடங்களும் ஓடிவிட் டன. இவர்களுடைய திருமணப்பேச்சு வந்தபோது இருகுடும்பங்க ளும் சற்று முறைத்துக்கொண்டன. பிறகு, காலத்திற்குத் தக்கபடி அடுத்ததலைமுறையின் நல்வாழ்வுகருதி விட்டுக்கொடுப்பதாக திரு மணத்திற்கு ஒப்புதல்கொடுத்தனர். எப்படியோ, அடுத்தமாதத்தில் திருநீர் மலையில் சிக்கனமாக மணமுடிப்பதற்கான ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தன.   அன்று, தன்னைக் காக்கவைத்துவிட்டு நேரங்கழித்து வந்த சைத்ராவுடன் சைதன்யன் பேசவில்லை. கோபமாக […]

தொங்கும் கைகள்

This entry is part 9 of 43 in the series 17 ஜூன் 2012

தலையை உடைத்து கொண்டிருந்த பிரச்சனை, தலை மேல் ஆடிக் கொண்டிருந்த கத்தி. கிருஸ்ணன் போல தேரை அழுத்தி தலையையும், தலைப்பாகையும் சேர்த்தே காப்பாற்றினாள் மிஸ். எலிசா கில்பெர்ட். அப்போது எலிசாவை அப்படியே பின்புறமாய் சென்று முத்தமிட்டு அழுத்தி ` என்ன சூப்பர் சொல்யூசன், கிளாசிக் ப்ரெசெண்டேசன் ` என்று சொல்லியவாறே அழுத்தி கட்டி கொள்ள வேண்டுமென்று தோன்றியது. எலிசா – எங்கள் நிறுவனம் அவுட் சோர்ச் செய்திருந்த நிறுவனத்தின் ஒரு பார்ட்னர். தேவைக்கு அதிகமாக பேசுபவள். தன் […]

வலியும் வன்மங்களும்

This entry is part 8 of 43 in the series 17 ஜூன் 2012

ஜாசின் ஏ.தேவராஜன் பட்டணத்தையொட்டியுள்ள சேவல் இழுத்துப் போர்த்தித் தூங்கிக்கொண்டிருக்கிறது. “ ‏இப்ப எந்திரிக்கப் போறியா இல்ல… தொடப்பக்கட்டையக் கொண்டாரவா!” “ எந்திரிக்கிறேன்னு சொல்றேன்ல…! யேம்மா காலங்காத்தாலே நாய் மாரி கத்திக்கிட்டிருக்க… நிம்மதியா தூங்கக்கூட முடியாதா?” “ ஓ அம்மாவையே நாயின்னு சொல்றீயா..! சொல்லுவடா சொல்லுவெ… சீனங்கடையில மங்கு கலுவி வேளா வேளைக்கிக் கொட்டுறேன்லெ… சொல்லுவெடா… நல்லா சொல்லு… இவ்வள நாளு ஒங்கப்பாதான் சொல்லிக்கிட்டிருந்திச்சு… இப்ப நீயுமா?” “பெசாம வாயெ மூடுமா ! எப்பப் பாத்தாலும் கிறுக்குப் புடிச்ச […]

பெட்டி மஹாத்மியம்

This entry is part 6 of 43 in the series 17 ஜூன் 2012

திடீரென இடீஇடியெனச் சிரித்தார், கவிஞர். அதுவரை நெற்றியில் கோடுகள் விழ யோசனையில் ஆழ்ந்திருந்தவர் திடுமென அப்படிச் சிரித்ததும் எருக்கூர் நீலகண்டனும் கடைய நல்லூர் சங்கர கிருஷ்ணனும் திடுக்கிட்டுப் போனார்கள். அறையில் கவிஞரைத் தவிர்த்து அவர்கள் இருவர் மட்டுமே இருந்தார்கள். மூன்றுபேர் சேர்ந்துட்டாலே அதுக்குக் கூட்டம்னு தான் பேரு. அதுவும் இந்த மாதிரி விஷயங்களுக்கு அவசியமான அளவுக்கு ஆட்கள் இருந்தாப் போதும் என்று சொல்லியிருந்தார், கவிஞர். பிரம்மச்சாரி, நீ வா என்று நீலகண்டனையும் சங்கரா, நீயும் வா. ஆரம்பிப்போம் […]

வேர்கள் (உருது மூலம்- இஸ்மத் சுக்தாய்)

This entry is part 3 of 43 in the series 17 ஜூன் 2012

தமிழில் ராகவன் தம்பி அனைவரின் முகங்களும் வெளுத்திருந்தன.  வீட்டில் அன்று சமையல் எதுவும் நடக்கவில்லை.   பள்ளிக்கூடங்களில் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்ட ஆறாவது நாள் அது.  குழந்தைகள் வீட்டை அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.   குழந்தைகள் வீடு முழுதும் அலைந்து திரிந்தார்கள்.  சிறுபிள்ளைத்தனமான சண்டைகள், கூச்சல்,  ஆரவாரம் என ரகளைகளில் ஈடுபட்டும் அங்கங்கு தாவித் தாவி குட்டிக்கரணங்கள் அடித்தும் வீட்டை இரண்டாக்கிக் கொண்டிருந்தார்கள்.    பதினைந்து ஆகஸ்டு வந்து போனதே தெரியாதது போலக் குதித்துக் கொண்டிருந்தார்கள்.   ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு […]