மாறியது நெஞ்சம்

This entry is part 14 of 28 in the series 3 ஜூன் 2012

கண்ணபிரான் குரூப் ஆஃப் கம்பெனிகள். ஊரைச்சுற்றி பல கிளைகள் இவர்களுக்கு. பலவிதமான தயாரிப்புகள்.. ஊசி முதல் கார் ஸ்பேர் பார்ட்ஸ் வரை அத்துனை சிறிய இரும்புப் பொருட்களும் தயார் செய்கிறார்கள். அம்பத்தூர் கிளையில் கட்டடங்கள் விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்ட நவீன தொழில் முறையில் இராட்சச இயந்திரங்கள் வெளிநாட்டிலிருந்து வந்து இறங்கியிருந்தன. இன்று புதிதாக கட்டப்படும் ஷெட்டிற்கு மேலே சிமெண்ட்டு அட்டை போடுவதற்காக இரும்பு கம்பி கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. 30 அடியில் நெடிதுயர்ந்த கட்டிடம். நெருப்பில் வேலை […]

நான் செத்தான்

This entry is part 12 of 28 in the series 3 ஜூன் 2012

  எப்போதும் இல்லாத முன்னிரவு… முடிவெடுப்பதுதான் இப்பொழுது முக்கியம் எனப்பட்டது எனக்கு. இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்காக எனக்கு நானே கூனிக்குறுகும் தருணம். எனக்குள்ளே திமிர்ந்த ஏகப்பட்ட கேள்விகள் வல்லாயுதங்களோடு வரிசைபிடித்து நின்றன. இருட்டுக் குகையிலிருந்து வெளிப்படும் பறவை வாயிலிலிருந்து உலகைத் தரிசிப்பதற்கு முன், அந்தத் திருப்பத்தில் புதிய உலகைக் குறித்து ஏற்கெனவே ஒரு கனவு கண்டிருக்குமே, அது போலத்தான். இப்பொழுது ஊரடங்கிய அர்த்த இராத்திரியில்… யாவும் வெறிச்சோடிக் கிடக்கின்ற இந்த நிசப்தத்தில்… எனது பழைய வாழ்க்கை ஞாபகத்திற்கு […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 4

This entry is part 11 of 28 in the series 3 ஜூன் 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா (Preface […]

காத்திருப்பு

This entry is part 6 of 28 in the series 3 ஜூன் 2012

முத்துராமன். வெளியே மழை தூறிக் கொண்டிருந்தது. சுகுணாவை அழைத்து வரவேண்டும். அவளாகவே வந்தாலும் வந்து விடுவாள். பஸ்ஸை எதிர்பார்த்து, காத்திருந்து காத்திருந்து, பொறுமை இழந்து நடந்தே வந்தாலும் வந்து விடுவாள். வீட்டுக்கு வந்து சேர முக்கால் மணி நேரம் ஆகும். வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் படுத்துக் கொள்வாள்.  கம்பெனியில் தையல் பவர் மிஷினை அழுத்தி அழுத்திச் சோர்ந்து போன கால் களுடன் முக்கால் மணி நேர நடை வேறு. வெளியே எட்டிப் பார்த்தான். மழை லேசாகத் தூறிக் […]

முள்வெளி அத்தியாயம் -11

This entry is part 2 of 28 in the series 3 ஜூன் 2012

பாட்டிலில் இருந்த குடிநீரை ஒரு மிடறு குடித்து, மறுபடி மூடி வைத்தான் ராஜேந்திரன். வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. மழை பெய்யும் நீரில் எந்த அளவு எங்கே போய்ச் சேருகிறது? மரத்தின் ஆணி வேர்கள் அருந்துவது எப்பொழுது மழை பொழிந்து நிலம் உள் வாங்கிய ஈரம்? இந்த பாட்டிலில் உள்ள நீரைப் போல அடை பட்டோ, நதி போல ஒழுங்கு பட்டோ, பொழிந்தோ, நிலத்துள் ஊடுருவியோ வெவேறு வடிவங்களில் குதூகலிக்கிறதா? ஈரமான காற்றில் தண்ணீர் காற்றுடன் கலந்ததும் […]

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 27

This entry is part 25 of 33 in the series 27 மே 2012

30. நள்ளிரவைக் கடந்து மூன்று சாமங்கள் கழிந்திருக்கலாம். செண்பகம் மொட்டைமாடியில் உறங்காமல் குட்டிபோட்ட பூனைபோல உலாத்தினாள். குளிர்ந்தகாற்றுடன் கரிய இருளும் உடலைத் தொட்டுக் கடந்து சென்றாலும் மனதைபோலவே உடலும் அனலாய்க் கொதித்தது. கவிழ்ந்திருந்த வானத்தில் நட்சத்திரங்கள்கூட மெருகு குலைந்த கற்கள்போல பொலிவிழந்திருந்தன. அண்மையில்தான் எங்கோ மல்லிகைபூத்திருக்கவேண்டும். மல்லிகை பூக்களின் மணத்தோடு, தேனுண்டு அம்மலர்களில் உறங்கிபோன தேனீக்களின் மணமும் கலந்து வீசியது. கண்களை மூடி மல்லிகை மணம் முழுதும் தனக்கே தனக்கென்று நினைத்தவள் போல சுவாசக்குழலில் அவற்றைத் திணித்தாள். […]

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றொன்று

This entry is part 23 of 33 in the series 27 மே 2012

1938 நவம்பர் 18 வெகுதான்ய கார்த்திகை 3 வெள்ளிக்கிழமை சாயந்திர வெய்யில் செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் சுற்றுப் புறத்துக்கு அலாதியான சோபையைக் கொடுத்திருந்தது. ஊர்ந்து கொண்டிருக்கிற டிராம்களில் இருந்து குதித்து ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் பாய்ந்து கொண்டிருந்தவர்கள் முகத்தில் அலாதியான மகிழ்ச்சி இருந்ததாக நீலகண்டனுக்குத் தோன்றியது. பார்க்கப் போகிறவன் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு கிடந்தால் ரெண்டு நிமிஷம் உபசார வார்த்தை பேசிவிட்டு, நர்ஸ் மிஸ்ஸியம்மாக்களின் ஸ்தன பாரத்தை வெறித்த பிறகு பார்க் ஸ்டேஷன் ஓரமாக மசால்வடையும் போண்டாவும் […]

பஞ்சதந்திரம் தொடர் 45

This entry is part 22 of 33 in the series 27 மே 2012

பொன் தந்த பாம்பு ஒரு ஊரில் ஒரு பிராம்மணன் இருந்தான். உழுவதே அவன் தொழில். அதில் ஆதாயம் ஒன்றும் அவனுக்குக் கிடைக்காமல் இருந்து வந்தது. ஒருநாள், கோடைக்கால முடிவில், வெய்யில் தாங்க முடியாமல் அவன் தன் வயல் மத்தியிலே ஒரு மரத்தின் நிழலில் சிறிது கண்ணயர்ந்தான். அப்போது கொஞ்சதூரம் தள்ளி இருந்த ஒரு எறும்புப் புற்றின் மேல் பயங்கரமான ஒரு பெரிய பாம்பு படமெடுத்து ஆடுவதைக் கண்டுவிட்டான். உடனே அவன், ‘’இது கட்டாயம் இந்த வயலைக் காக்கும் […]

மறுபடியும்

This entry is part 15 of 33 in the series 27 மே 2012

தெலுங்கில்: ஸ்ரீ வல்லி ராதிகா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அடிக்கடி கனவுலகில் நழுவிப் போவதற்கும், இதழ்கள் மீது இடை விடாமல் முறுவல் தவழ்வதற்கும், அரக்க பறக்க ஓடிக்கொண்டே, திடீரென்று ஏதோ நினைப்பில் அப்படியே நின்று விடுவதற்கும் சுனந்தாவின் வயது பதினாறு இல்லை, நாற்பத்தியாறு. தன்னுடைய நிலை ரொம்பவும் வெளிப்படையாக தென்படுகிறது என்றும், சந்தோஷத்தை தன்னால் மறைக்க முடியவில்லை என்றும் தெரிகிறது. அந்த சந்தோஷத்தைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப் படுவார்களோ, கண்பட்டு விடுமோ என்றும் ஒரு […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3

This entry is part 11 of 33 in the series 27 மே 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா (Preface […]