எஸ். சிவகுமார் காலமெனும் கலயத்தில் கண்டெடுத்த வயிரங்கள் வாலிபப் பருவத்தில் வசப்பட்ட நேரங்கள் ! நிலையில்லா காயம் நிலையென்றே எண்ணாது அலைபாயும் உன்மனதை அடக்கி ஆள் என்றிட்டார். கலைக்கென்றும் கண்ணுண்டு காதலுக்குத்தான் இல்லை அழகை ரசித்திட்டால் அழிவேதும் இலையென்றேன். அறியாமல் பேசுகிறாய்ச் சிறுபிள்ளை நீயென்றார் அழகுக்கு மறுபெயர் ஆபத்து என்றிட்டார். கலைப்பார்வையோடு ஒரு தொலைப்பார்வையும் இருந்தால் காபந்து தேவையில்லை ஆபத்தும் இலையென்றேன். பெரியோர்சொல் கேளாத பிள்ளை உனக்கிங்கே தொலைப்பார்வை எங்கே? […]
இரா.ஜெயானந்தன். இனிய நிலவே ! இன்று நீ, என் நிலா முற்றத்தில் மலர்ந்து விட்டாய் ! உன் வரவிற்காக காத்திருந்து – நான் மல்லிகை பந்தல் வளர்த்திருந்தேன். பூக்கள் மலர்ந்த, மணந்த போது உன்னை மணம் முடித்தேன்! அதோ பார் ! அந்த மொட்டுக்குள் எத்தனை வசந்தங்கள் ! – நீயோ உன் இதழ் மொட்டால் – என்னை உயிர்த்தெழ வைத்தாய் ! உன் சிரிப்பை பிரித்து – என் கவிதைக்குள் வைத்தேன் ! நீயோ ! […]
-ஜே.பிரோஸ்கான்- நான் நானாக இல்லை என் வலது புறமாக நல்லவையாகவும் இடது புறமாக தீயவையாகவும் மேலாகவும் இன்னும் கீழாகவும் என்னனுமதியின்றி வந்து நிறைந்து விடுகின்றன எல்லாமான நீர்களும். நான் அழுகிறேன் ஆராவாரம் செய்கிறேன் ஒப்பாரி வைக்கிறேன் சினுங்குகிறேன் யார் யாரோ வந்து தமது தேவைகளை முடித்துக் கொண்டு சந்தோசமாய் நகர்ந்து விடுகிறார்கள். எனக்குள்ளே நடக்கும் மூன்றாம் உலகப் போர் பற்றி யாரும் தெரி;ந்து கொள்ளவோ முற்படவில்லை. நான் அழுக்காக்கப் பட்டிருக்கிறேன் நான் விஷமாக்கப்பட்டிருக்கிறேன் நான் வளம் குறைக்கப்பட்டிருக்கிறேன் […]
சங்கர் கோட்டாறு உன்னை எனக்கு நன்றாகத்தெரியும். உனது ஆசைகள், பாசாங்குகள், அவ்வப்போது வெளிப்படும் வக்கிரபுத்திகள், எல்லாம் எனக்குமிக நன்றாகத் தான் தெரியும். எப்படி என்றால், உன்னைப்போல் ஓருவன், எனக்கு வெகுநாளாக மிகவும் பழக்கமானவன். நான். –
கோசின்ரா என்னை துரத்திக்கொண்டிருக்கும் ரகசியங்கள் தின்று வளர்ந்த பூர்வீக பற்கள் பசியோடு காத்திருக்கின்றன ஆதிகாலத்திலிருந்து இரை போட்டு வளர்த்தவள் நீதான் பசித்த அதன் குரலில் ஒளிந்திருக்கும் பாம்புகள் வெளியேறி வருகின்றன என் நாட்களைக் விழுங்கி பசியாறுகின்றன நெடு நாட்கள் தப்பிக்க இயலாது உன் வாசம் வீசும் ஒரு ரகசியத்தை வீசியெறி உடலின் முடிச்சுகளை அவிழ்த்துவிடு உன் சுவாசம் பதுங்கும் பின்புறக்கதவுகள் திறந்தே இருக்கிறது நீலம் பாரிக்கும் மெல்லிய ராத்திரியில் ஆசை பிரசவித்த பெருமூச்சு உன் வாசலைத் […]
என்னை எடுத்துக்கொண்டு யாராவது எனக்கொரு அதிர்வுகளற்ற ஆன்மாவைத் தாருங்களேன் நீர்நிலையின் மேற்புறத்தின் பரப்பு இழு விசையில் சிறு பொத்தல்கூட விழாமல் நடமாடும் நீர்ப்பூச்சியை யொத்த நேர்த்தியோடே என்னுடன் உறவாடுங்கள் சர்வமும் சாந்தியான சீவிதமே என் நாட்டம் ஒரு புள்ளியெனக்கூட வேதனை செய்யாதிருப்பீர் அது வட்டமெழுப்பி சடசடவென விட்டங்கள் கூட்டி பெரும் வாட்டமாக விரிந்துபோகிறது வதனத்தில் சலனங்களற்றுப் போனால் சவமாகி விடமாட்டேன் உள்ளே உராய்வுகளின் உஷ்னமற்ற நீச்சலுக்கும் செவுள்வழி […]
தாகூரின் கீதப் பாமாலை – 60 மரத் தோணியை நிரப்பு .. ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. உன் மனதில் நான் நிலைப்பேனோ இல்லையோ என் சிந்தனையில் இருப்பது அது அல்ல ! இன்றும் பிறகும் வந்து போய், நின்று உன் கதவருகில் காரண மின்றிப் பாடுகிறேன் ! நாட்கள் விரைந்தன நானிங் கிருந்த போது ! போகும் என் பாதை […]
வால்ட் விட்மன் வசனக் கவிதை -19 என்னைப் பற்றிய பாடல் – 12 (Song of Myself) ஆத்மக் கதிர் உதயம் (1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா பேராற்ற லோடு எவ்வித வேகத்தில் சூரிய உதயம் எழுகிறது பேரொளிப் பகட்டில் எனக்கு மாரக னாக ! இப்போதும் அல்லது எப்போதும் என்னிட மிருந்து சூரிய உதயத்தை என்னால் நீக்க இயலாது ! ஒளிப் […]
பூமி மேல் தன் முதலடியை எடுத்து வைக்க முயலும். உயிர்ப் பந்தாய் மெல்ல எழுந்து நிற்கும். பூமிப் பந்தைப் பிஞ்சுக் கால்களால் உருட்டி விடப் பார்க்கும். பிஞ்சுக் கால்களின் கிளுகிளுப்பில் சுழலும் பூமியின் களிப்பு கொஞ்சம் கூடிப் போயிருக்கும். ‘பொத்’தென்று கீழே விழும் குழந்தை கத்தும். ’தரை தானே தடுக்கிச்சு’- தரையை மிதித்துக் குழந்தையைச் சமாதானப்படுத்துவாள் தாய். சுழலும் பூமி சற்று நின்று சுழலும் மீண்டும். […]
என்னை சுவாசி என்னை சுவாசி நான் தான் உன் மறுபாதி ! என்னை அணை என்னை அணை நான் தான் உன் வாழ்க்கை! வாலிபத்தை கரைத்து வானாந்தரத்தை தேடுகின்றாய்.! வற்றிய சமுத்திரத்தில் வழிதேடி அலைகின்றாய் ! மெளனத்தில் அமர்ந்து அகிலத்தை சுருக்கி- எதை தேடி அலைகின்றாய் எதிலும் நான் தான் ! உதிர விளையாட்டிற்கு உனக்கு தேவை – நான் தான் ! என்னை சுவாசி என்னை சுவாசி நான் தான் பெண் ! – ஜெயானந்தன்.