செப்டம்பர் 4 2003 இதழ் சூழலைக் கெடுக்கும் குளிர்பான ஆலைகள்- அசுரன்- நிலத்தடி நீரை மிதமிஞ்சி எடுப்பதால் நீராதாரம் பாதிக்கப் படுகிறது. குளிர்பான ஆலைகளின் கழிவுகள் நிலத்தை மாசு படுத்துகின்றன. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20309048&edition_id=20030904&format=html ) இயக்குனர் சங்கர் அவர்களுக்கு ! தமிழ்ச் சமுதாயத்தைச் சேர்ந்த பாமரன் ஒருவனின் சில கேள்விகள்- அக்கினிபுத்திரன் – சிங்கப்பூர் – (பாய்ஸ் படம் போன்ற) ஒரு மஞ்சளை சங்கரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20309049&edition_id=20030904&format=html ) கவிதைப் புனைப்பில் கையாளும் காவிய நயங்கள் – சி.ஜெயபாரதன் […]
வெறும் புத்தகப் புழுவாகவே இருந்து பழக்கப் பட்டுவிட்டவன் நான். படிப்பில் மட்டுமே சிறந்து விளங்கிய நான் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள முடியவில்லையே என்ற மனக் குறை என்னுள் இருந்தது. ஓட்டப் பந்தயங்களில் ஓடி பரிசுகள் பெற வேண்டும் என்ற ஆவல் எனக்கு நிறையவே இருந்தது.ஆனால் வெட்கமும் அச்சமும் அதைத் தடுத்தது. தேர்வு எழுதுவது யாருக்கும் தெரியாமல் செய்வதாகும். அது எளிது. ஆனால் பந்தயத்தில் ஓடுவதை பலர் பார்ப்பார்கள். அதில் வெற்றி பெறுவதும் தோல்வியுறுவதும் […]
– பேரா. க. பஞ்சாங்கம் காட்சி ஊடகங்களின் ஆக்கிரமிப்பிற்கு முழுமையாய் உள்ளாகிக் கிடக்கும் இன்றைய நவீன சமூகத்திலும் ஊருக்கு நூறு கவிஞர்கள், மாதத்திற்கு நூறு கவிதைத் தொகுப்புகள் என்று சொல்லும் அளவிற்குக் கவிதை இன்னும் ஏன் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது? மேலும், ஓவியர், இசைக் கலைஞர், சிற்பி, புனைகதை எழுத்தாளர், நாடகக் கலைஞர் என்று கலை மரபில் வாழ்பவர்கள் மட்டுமல்ல் அறிஞர்கள், மதவாதிகள், ஞானிகள், அறிவியல் வித்தகர்கள் பல்வேறு துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் என்று பெயரெடுக்கிற அளவிற்கு […]
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய் இனித்தா னெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் அனைத்தில்லத் தாரு மறிந்தேலோ ரெம்பாவாய். ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் பன்னிரண்டாம் பாசுரமான இதில் இராமபிரானுக்கு இளையபெருமாளைப் போலே கிருஷ்ணனுக்கு இடைவிடாமல் கைங்கர்யம் செய்து வருபவனின் தங்கையை எழுப்புகிறார்கள். அவன் எப்பொழுதும் கண்ணனுடனேயே சுற்றிக் […]
அந்த வார்த்தை மிக அழகாக இருந்தது. “யாரேனும் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், நீ உனது மறு கன்னத்தைக் காட்டு” ஒருநாள், தேவாலயத்தின் வெளியே, காம்பவுண்ட் சுவர் ஓரமாக ஒன்றுக்கு போய்க் கொண்டிருந்த அந்த சிறுவன் ஒரு நிமிடம் ஒன்றுக்கு போவதை நிறுத்திவிட்டு அந்த வாசகத்தைக் கேட்டான். மெய் மறந்த நிலையில் அந்த வார்த்தையை பற்றி யோசித்தபடியே இருந்தான். தேவாலயத்துக்குள் சென்ற அவன், ஞாயிற்றுக் கிழமை பிரசங்கத்தை முழுமையாக கேட்டு அறிந்து தெளிந்தான். அப்போது […]
முனைவர் ந. பாஸ்கரன், தமிழாய்வுத்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர். உ.வே.சா-வின் மாயவரம்(மயிலாடுதுறை) பயணம்: மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் கல்விகற்க செல்வது என்ற தீர்மானத்தை உறுதி செய்துகொண்டதிலிருந்து அங்கு செல்வதற்கான நல்ல நாளினை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கத் துவங்கிவிட்டார் உ.வே.சா. ஒரு நல்ல நாளில் தந்தையுடன் மாயவரம் பயணம் செய்தார். தெய்வத்தைக் காண்பதுபோல் மகாவித்வானை நேரில் கண்டார். உ.வே.சா-வின் தந்தையார் மகாவித்வான் அவர்களிடம் வந்ததற்கான காரணத்தைச் சொல்லி வேண்டுதலையும் வைத்தார். மகாவித்வானார் உ.வே.சா- விடம் கற்றலுக்கான […]
வெகுநாட்களுக்கு பிறகு இந்த தொடர்மூலமாக உங்கள் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன். சமீபகாலமாக எழுத்து என்வசம் இல்லை. மனம் ஒரு குழப்ப நிலையில் சங்கமித்துவிட, என் தொடர்ப் பயணம் எப்படிப் பட்டதாக இருக்கும் என்பது குறித்தான கேள்விகள் என்னை குடையத் தொடங்கிவிட்டன. என் வெற்றியும் தோல்வியும் நிறுத்துப் பார்க்க நான் பயன்படுத்துவது என்னை சுற்றியுள்ளவர்கள் மூலமாகவே, அந்த சுற்றியுள்ளவர்களின் சுட்டுவிரல்கள் என் பக்கமாகத் திரும்பி நீ ஒன்றுக்கும் லாயக்கில்லாதவள் என்று கூப்பாடு போட்டுக் கத்துவதைப் போன்ற பிரம்மை […]
சில நினைவுகள் நம் முயற்சி ஏதும் இன்றியே மனத்தில் தங்கி விடுகின்றன. அவற்றை மறக்க நாம் முயல்வதில்லை என்பது ஒரு புறமிருக்க, நாம் முயன்றாலும் அவை நம் உள்ளத்தை விட்டு அகலுவதில்லை. அதிலும், அவை சிறு வயது நினைவுகளாக இருப்பின் வாழ்க்கையின் கடைசி நாளில் கூட அவை நினைவுக்கு வருவதாய் ஒருவர் சொல்லக் கேள்வி. மிகச் சிறு வயதில் என் சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வு இது. அப்போது எனக்குப் பதினொரு வயதுதான். […]
” சரி. நீயும் கவலைப் படாதே. நாம் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை. கடிதம் எழுதிக் கொள்வோம். ” ” எப்படி? ” ” வேறு வழியில்லை. நான் கோவிந்தசாமியிடம் பேசிப் பார்க்கிறேன். ” ” என்னவென்று ? ” ” அவனிடம் நீ பேசினால் யாரும் தப்பாக நினைக்க மாட்டார்கள். நீ கடிதம் எழுதி அதை ஒரு புத்தகத்தில் வைத்து அவனிடம் கொடுத்து விடு. நான் பதிலை அதே புத்தகத்தில் வைத்து அவனிடம் தந்து விடுகிறேன். நீ அவனிடம் […]
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் படித்த ஜெயமோகனின் விஷ்ணுபுரம்’ புதினத்தின் இறுதிப்பகுதியாக இடம்பெற்றிருந்த பிரளயத்தின் காட்சிகளை ஒருபோதும் என்னால் மறக்க முடிந்ததில்லை. அக்காட்சிகள் பல நாட்கள் என் கனவில் தோன்றித்தோன்றி என்னை அச்சுறுத்திக்கொண்டே இருந்தன, இடைவிடாது பொழியும் மழை. கடல்போல வெள்ளம் பொங்கி வந்து விஷ்ணுபுரத்தையே சூழ்ந்துகொள்கிறது. வயல்வெளிகள், தோப்புகள், சின்னச்சின்ன குன்றுகள் எல்லாமே மெல்லமெல்ல வெள்ளத்தில் மூழ்கி மறைகின்றன. கால்நடைகளின் பிணங்கள் மிதந்து செல்கின்றன. மனிதர்களின் பிணங்கள் மரக்கிளைகளில் சிக்கி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு கரையுள்ள இடங்களில் […]