திண்ணை உறவுகள் தெருமுனையில் முடிந்துவிடும் என்பார்கள். நாம் சந்தித்த திண்ணையும் சரி நம் உறவுகளும் சரி முடியாமல் மரணித்தப் பின்னும் காலனை வென்ற புதுமைப்பித்தனின் கிழவியாய் அருகிலிருந்து மயிலிறகாய் வருடிக் கொடுக்கிறது. எப்படி சொல்வேன்? “நீ இல்லை “என்பதை நீயே அறிவித்த உன் கைபேசி குறுஞ்செய்தி அப்பாவின் மரணத்தை மகள் அறிந்த தருணங்கள் இரண்டாவது முறையாக மீண்டும் அதே வலியை உணர்ந்தேன். எப்போதாவது பேசிக்கொள்வோம் அதை எப்போதும் நீ எல்லோரிடமும் […]
கைவிலங்கை உடைத்தெறிந்தால் சமூகம் அவனை பைத்தியமென சிறை வைக்கிறது விதி வெண்கலப் பாத்திரத்தைக் கூட வீட்டில் இருக்கவிடாது எத்தனை இரவுகள் நீ அருகிலிருந்தும் நான் விலிகி இருந்தேன் மனைவியை மதிக்காமல் உடைமையாக்க முற்பட்டது மனப்பிறழ்வின் ஆரம்பம் மெல்லிய லெட்சுமணக் கோட்டை தாண்டுவதற்கு தயாராகும் சீதைகள் உதிர்ந்த இலைகளையும் வானத்து விண்மீனையும் விரல் விட்டு எண்ணிக் கொண்டிருந்தேன் காலம் அனுகூலமாக இருந்தாலும் இருபுறமும் கூர் உள்ள கத்தி ஒருவரை பலி கேட்கிறது. ————————————–
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நேசிப்ப துன்னை, நேசிப்ப துன்னை என்றென் அவலக் குரல் ஓசையாய் ஒலித்துக் கொண்டு உடைத்து வெளி வரும் பூமியின் மார்பி லிருந்தும் நீர் மயத்தி லிருந்தும் ! வானமோ நெஞ்சு வலிவோடு வாட்டம் அடையும் ! கனிவுடன் தெரியும் தொடுவான் கண்கள் போல் கண்ணீர் துளிகளால் ஈரமாகி மங்கலாகும் ! வேதனைப் பெரு மூச்சொன்று வெடித்து விடும் […]
இரமியத்திற்கப்பால் எந்த மெய்ஞானமோ அன்றி விஞ்ஞானமோ இல்லை. யானறிந்த ஒவ்வொரு உயர்ந்த மனிதனும் ஏதோ சிறிய அளவிலேனும் ஒப்பனை செய்திருந்தனர்; மேலும் அந்தச் சொற்பமே அவனை மந்தமாக இருப்பதிலிருந்தோ அல்லது பித்துக்குளித்தனத்திலிருந்தோ அன்றி தற்கொலையிலிருந்தோ காக்கிறது. எவரையும் அதிகாரம் செலுத்தாமலும், எவரிடமும் அடிபணியாமலும் இருபவர் எவரோ அவரே உண்மையில் பெரிய மனிதர். அவன் குற்றவாளிகளையும் தீர்க்கதரிசிகளையும் அழிப்பதாலேயே அவனையோர் சராசரியானவன் என்று எளிதாக நம்பிவிடமாட்டேன். இறுமாப்பெனும் பிணியுடனான காதற்பிணியே பொறுமையென்பது. புழுக்கள் […]
பறந்திடப் பல திசைகளிருந்தனவெனினும் அப் பேரண்டத்திடம் துயருற்ற பறவையைத் தேற்றவெனவோ சௌபாக்கியங்கள் நிறைந்த வழியொன்றைக் காட்டிடவெனவோ கரங்களெதுவுமிருக்கவில்லை ஏகாந்தம் உணர்த்தி உணர்த்தி ஒவ்வொரு பொழுதும் காற்று ரணமாய்க் கிழிக்கையில் மௌனமாகத் துயர் விழுங்கும் பறவை மெல்ல தன் சிறகுகளால் காலத்தை உந்தித் தள்ளிற்றுதான் முற்காலத்திலிருந்து தேக்கிய வன்மம் தாங்கிட இயலாக் கணமொன்றில் வெடித்து தன் எல்லை மீறிய பொழுதொன்றில் மிதந்தலையும் தன் கீழுடலால் மிதித்திற்று உலகையோர் நாள் பறவையின் மென்னுடலின் […]
(1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++++++ உடல் உறுப்பு ஆக்கிய கவிஞன் நான் ஓர் ஆத்மீகக் கவிஞன் நான் சொர்க்கபுரி இன்பங்கள் பெற்றவன் நான் நரகத்தின் துயர்கள் உற்றவன் நான் முன்னதை என்னுள் புகுத்தி நான் உன்னத மாக்கிக் கொண்டது; பின்னதைப் புது மொழியாக நான் மொழி பெயர்த்தியது. மாதரின் கவிஞன் நான், அதுபோல் ஆடவருக்கும் கவிஞன். மாதராய்ப் […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வெண்ணிலவே ! துயர்க் கடலில் கண்ணீர்த் துளிகள் சொட்டி அலையாய் எழும்பிடும் அந்தோ ! இணைந்து முணுமுணுக்கும் அவை இக்கரை முதல் அக்கரை விளிம்பு வரை. என் படகு இருப்பது பழக்கப் பட்ட கரைப் பக்கம் ! ஆயினும் அற்றுப் போனது அந்தப் பிணைப்பும், அறியாத விளிம்பு நோக்கி ஓரத்தில் தள்ளப் படும் திசை மாறிய சூறாவளியால் ! என்னைக் கடந்து […]
ஆலமரத்தின் வேர்ப்பகுதி நீர்நிலையில் மூழ்கி இருந்தன அதன் விழுதுகள் கூட அதனை கைவிட்டுவிட்டன விருட்சம் தனக்குக் கீழே எதையும் வளரவிடாது புளிய மரத்துப் பேயைப் பற்றி நிறைய இக்கட்டி கதை சொல்வாள் பொரிஉருண்டை அஞ்சம்மாள் குச்சியை நட்டு வைத்தால் கூட வேர் பிடித்து விடும் முருங்கை ஐந்து வருடம் காத்திருந்தாள் போதும் அன்னையைப் போல் காவந்து பண்ணும் தென்னை பனங்கல்லு குடிச்சவனுக்கு ஏது சாமி கேட்காமலேயே நுங்கு கொடுக்கும் கிராமத்து பூமி.
(1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா வால்ட் விட்மன் வாழ்க்கை வரலாறு: அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன்1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்து தந்தையால் நிறுத்தப் பட்டார். ஆகவே […]
சென்னை ஆழ்வார்பேட்டையில் மையம் கொண்டிருந்த புயல் சற்றே வலுவடைந்து மும்பையை நோக்கி சென்றது… இதற்கு விஸ்வரூபம் என்று பெயரிடப் பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தை தவிர்த்து இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. ஓரிரு தினங்களில் தமிழகத்திலும் நல்ல மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. குமரி எஸ். நீலகண்டன்