மணம் கரைந்து…. உலர்ந்து உதிர்ந்தது … செடியில்…பறிக்காத மல்லிகை..! —————————————— சாமந்தி….முகத்தில்…சந்தோஷம்.. மணத்தாலும்…விதவை தானே… மல்லிகை…! —————————————– இரும்பென…. கருவண்டு.. காந்தமாக… மகரந்தம்…. பாவம்….தாமரை…! ——————————————— சேற்றில் நான்…! வேலியாய்..நீ ..! நான் மட்டும் பூஜைக்கு..! தாமரை..! ———————————————— பூக்காட்டில் பாம்பு…! நெருங்க மறுக்கும் அவள்… கருநாக… ஜடையில் என் நர்த்தனம்..! தாழம்பூ..! ——————————————— ஈராறு ஆண்டுகளாய்… காத்திருந்தது… தென்றல்… ! முதல் குறிஞ்சியின்… வாசம் பிடித்து தூது சொல்ல..! ———————————————— மழை கரைக்காமல் குடை கொண்டு […]
ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமை மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என்னை நினைத்திருப் பாயா இன்னும் நீ ? உன்னை விட்டு வெகுதூரம் ஓடிப் போகினும் என்னை நினைப் பாயா ? என் பழைய காதல் சிலந்தி வலையால் மறைந்து புதிய காதல் படர்ந்தாலும் நீ நினைப் பாயா ? நெருங்கி நான் நிழல் போலிருந்த சமயம் இருப்பதோ இல்லாததோ உனக்குத் தெரியாத போதினும் நீ நினைப் பாயா ? நினைத் […]
பதினேழைத் தொட்ட ஓர் இளையவளின் ஸ்பரிசங்களுடைத்த அந்திம நேர தழுவலைப் போல் இனித்துக் கிடந்தது அந்த அதிகாலைக் கனவு முழுதுமாய் வெளிச்சம் விரித்துக் கிடந்த பகலுலகின் சம்பாஷனைகளில் உலர்ந்த படியே என் குருட்டு கனவுலகின் இருளை வியாபித்துக் கிடந்தேன் இன்னுமேற்று எக்கணமும் கவிழக் கணம் நோக்கும் விசையழுத்தப்பட்ட சூறாவளிப் பொழுதின் கிழடு தட்டிய மரத்தைப் போல் தங்களை நகர்த்தும் பொழுதுகள் என் கனவை தின்னத் தொடங்கின சிதிலமடைந்த சுண்ணாம்புக் காரையென சதா தன் மேனியலிருந்து வினாடிகளை உதிர்க்கத் […]
உடல் நொறுங்கி சரிய சபை அதிர்ந்தது சூதாடி தலைதொங்கியவன்களின் முகம் உமிழ்ந்த எச்சிலால் சபதம் நிறைவு கொள்ள பற்றி இழுத்தவனின் தொடை ரத்தம் பூசி முடிந்த கூந்தலுள் ஆதிக்க அழுகளின் வீச்சம் பெருக நீராடி கேசம் நீவிய துரோபதையை பிறப்பித்தது குளித்து வந்த மதுவாகினியின் கூந்தலில் வடிந்த நீர்த்துளிகள்…
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கண்ணீ ரோடு இருந்த யாரைத் திருப்பி அனுப்பினாய் நீ ? என்ன தந்திரம் செய்து மீண்டும் இழுத்து வரப் போகிறாய் இப்போது உன் வழிக்கு ? இந்த இனிய தேன் இரவில் பூத்துப் பொங்கும் பூங்காவில் போகுல் மரத்தடி நறுமண அசைவில் புகுந்தவன் அவனா உன் மனதில் ? அந்தோ ! ஓர் வசந்த இரவினிலே நம் இதயங்கள் கலந்து பற்றிக் கொண்டன. பத்துத் […]
பாராட்ட வருகிறார்கள் அவசரமாய் ஒரு ஆளுயரக்கண்ணாடி தேவை! சம்பிரதாய வாழ்த்து , அழுத்தும் கைகுலுக்கல், பொய்யெனப் புரியும் புனைந்துரைகள் எல்லாவற்றுக்கும் முகநூலின் ஒற்றை விருப்பச் சொடுக்காக புன்னகைக்கலாமா? பல்….? தலையசைப்பு சம்மதமாகவா ?மறுப்பாகவா? மையமாகவா? கண் பணித்துவிடுமோ… சீரான சுவாசத்தோடு வெற்றுப்பார்வை தோதாகுமா? பெருமிதம்?கூச்சம்? ”எவ்வளவோ பாத்துட்டோம்..? இதற்குத் தானே ஆசைப்பட்டாய்….? எது பொருந்தும்….? அவசரமாய் ஒரு கண்ணாடி , அல்லது ஒத்திகைக்கு ஒரு நல்ல துணை! -உமாமோகன்
தொடர்பறுதல் ஏகாந்த இரவொன்றில் வான்பார்த்து மாடியில் படுத்தபோது தென்பட்ட நட்சத்திரங்கள் ஒவ்வொன்றின் இடையேயும் விரிந்துக் கிடக்கிறது ஏகப்பட்டத் தொலைவு எனை விட்டுத் தொடர்பறுந்துப் போனவர்கள் போல.. ஒன்றாய்ப் படித்து, சுற்றிய நண்பர்கள் … நெருக்கமாய்ப் பழகிய தொடர் கடிதத் தோழிகள் பக்கத்து வீடுகளில் குடியிருந்துப் போனவர்கள் நெருக்கமாய் இருந்த தூரத்து உறவுகள் இலக்கியம் பேசி உணர்ச்சி வசப் பட்டவர்கள் … பலருடனும் இற்றறுந்துப் போயிற்று தொடர்பு.. முகநூலிலும், ஆர்குட்டிலும் தேடித் தேடி அலுத்தப் பின்பும் அழிபடாமல் மனதுள் […]
ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 10) எழில் இனப் பெருக்கம் ஒரு வேண்டுகோள் மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் […]
இயற்கை மூடி வைத்த மொட்டுக்கள் ஒவ்வொன்றும் சிறுசத்தம்போட்டு உலகை எட்டிப் பார்க்கின்றன பூக்களாக… பூவுலகின் சிறுதூண்டலால் அழகழகாய் மலர்கின்றன எழில் பூக்கள் – தம் புறவிதழால் புதுக் காற்றை பிடிபிடித்தும் பார்க்கின்றன… வளிபோன போக்கில் அசைந்தாடவும் வாயின்றி சில வார்த்தை இசை போடவும் வான் போடும் மழை நீரில் விளையாடவும் வையத்தில் தேன் பூக்கள் பூக்கின்றன. ஒரு மொட்டு மலரும் போது… மெல்லப் பேசுகின்றது… பேசும் விழிகளால் புன்னகை பூக்கின்றது… பூமிக்கு வளையோசை கேளாமல் காற்றிலே நடனம் […]