கவிதைகள்

This entry is part 3 of 35 in the series 11 மார்ச் 2012

1. விதை சிந்‌திய கண்ணீர் விருட்சமாகும் விதை… 2. சித்ரவதை பெற்ற வதை இப்பொழுதோ சித்திரமாக புகழுடன், மிடுக்குடன் வனிதைகள். நெகிழ்ச்சியுடன் தமிழ் மூண்டாசு 3. வாக்காளான் நித்தமும் புறமுதுகிட்டு ஒரு நாள் மட்டும் விரல் உயர்த்தி 4. கணிணி கலகம் , காமம், காதல் , கற்க நீ கண்ணன்ணா ?

எழுத்தாளர்கள் ஊர்வலம் (4 ம் பாகம்)

This entry is part 45 of 45 in the series 4 மார்ச் 2012

ஆத்மாநாம் =========== சுஜாதாவுக்குள் சூல் கொண்ட மேகம் இந்தக் கவிதை. மௌனி ======= ஞான இரைச்சல்களை தின்று விழுங்கியவர். பேயோன் ======== “பின் ந‌வீன‌த்துவ‌த்துக்கும்” பேன் பார்த்த‌வ‌ர். கி.ராஜேந்திர‌ன் ============= க‌ல்கி வைக்காம‌ல் போன‌ முற்றுப்புள்ளிக‌ளால் க‌ல்கியை நிர‌ப்பிய‌வ‌ர் ஜெகசிற்பியன் ============= உணர்ச்சியின் விளிம்புகளை ஊசிமுனையாக்கி..அதில் உலகத்தை நிறுத்தி வைப்பவர். அநுத்தமா ========= ஈயச்சொம்பில் ரசம் வைத்துக்கொண்டே மனித ரசாபாசங்களை தாளித்துக் கொட்டுபவர். அரு.ராமநாதன் =============== கட்டில் மெத்தை எழுத்துக்கள் ஆனால் தூங்குவதற்காக அல்ல. நாஞ்சில் பி.டி […]

விளையாட்டும் விதியும்

This entry is part 40 of 45 in the series 4 மார்ச் 2012

மட்டையும் பந்தும் கொண்டு தனக்கான விளையாட்டை ஆரம்பித்துவிட்டது குழந்தை. டெலிவிஷனின் இருபத்து நாலு மணி நேர விளையாட்டுக் காட்சிகளை எள்ளளவும் பிரதிபலிக்கவில்லை அது தன் விளையாட்டில். விளையாட்டின் விதிகளைத் தானே இயற்றிக்கொண்டு குழந்தை ஆடிக்கொண்டிருந்ததில் வீட்டின் வாசல் புதுமையில் பொலிந்துகொண்டிருந்தது. அப்படி இல்லை என்பதாய் உலகம் ஏற்றுக்கொண்ட விதிகளை அதன் அப்பா திணிக்க முற்பட்டபோது குழந்தையைத் தடுக்காதே என்பதாய் விழிகள் விரித்து உதடுகள் குவித்து ” உஷ் ” என்று ஒற்றை விரலில் அம்மா எச்சரிக்கை செய்தது […]

அந்த முடிச்சு!

This entry is part 25 of 45 in the series 4 மார்ச் 2012

அது சம்பவித்துக் கொண்டிருந்தது அருகிலிருந்து அவதானித்துக் கொண்டிருந்தேன் உடல் கிடத்தி வைக்கப்பட்டு உயிர் கொஞ்சம் கொஞ்சமாக பிடியை இழக்க அது சம்பவித்துக் கொண்டிருந்தது அது சம்பவித்து முடிவதில் ஏதோ ஓர் எதிர்ப்பு இருப்பதாக என்னால் உணர முடிந்தது எனினும் அது கால்களின் விரல்களில் துவங்கி மேல்நோக்கி கைப்பற்றிக்கொண்டே செல்வதற்கான அடையாளங்களைக் காண முடிந்தது அது கடந்து சென்ற வழியெல்லாம் நரம்பு நெகிழ்ந்து அசைவிழக்க உஷ்ணம் குறையத் தொடங்குவதைக் குறிக்கத் தவறவில்லை நான். மரணப் படுக்கையில் பார்வை பிரத்தியேகமானது […]

வழிமேல் விழிவைத்து…….!

This entry is part 24 of 45 in the series 4 மார்ச் 2012

பவள சங்கரி. உடலோடும் உணர்வோடும் விளையாடுவதே வாடிக்கையாகப் போய்விட்டது. சூடுபட்ட பூனையானாலும் சொரணை கெட்டுத்தான் போய்விடுகிறது. மடிமீதும் மார்மீதும் கையணைப்பினுள்ளும் தஞ்சம் புகுவதே வாடிக்கை.ஆகிவிடுகிறது. வெட்கமுமின்றி துக்கமுமின்றி தேடித்திரிதலே அன்றாடப் பிழைப்பாய் இருக்கிறது. எவர் கொடுத்தாலும் மறுக்க இயலாத ஏழ்மையாகிவிடுகிறது. உண்ணும்போதும் உறங்கும் போதும் கூட பிரிய மனம் மறுக்கிறது. நம்மையே நையப்புடைத்தாலும் விட்டு அகல முடியாமல் தவிக்கிறது உள்ளம். ஓங்கி ஒலித்தாலும் இதமாக வருடினாலும் தாங்கிப் பிடிக்கிறது தன்னையே. வண்ணங்களும் எண்ணங்களும் வேறுவேறாய் ஆனாலும் அகல […]

தாகூரின் கீதப் பாமாலை – 2 புண்பட்ட பெருமை

This entry is part 23 of 45 in the series 4 மார்ச் 2012

  தாகூரின் கீதப் பாமாலை – 2 புண்பட்ட பெருமை மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வசந்த காலம் நழுவிச் சென்ற அந்த நாட்களில் எந்தப் பாட்டும் பாட வில்லை. பகற் பொழுதுப் பூக்கள் உதிர்வுடன் போகுல்* மரங்களின் பூமி விரிந்த போது பூக்கள் மலர்ச்சிக்கு இறுதிக் காலம் வருவ தென்று ? இந்த வசந்த காலத்தில் மல்லிகை விழித்தெழ வில்லையா ? தேன் அமுது உறிஞ்சித் தேனீக்கள் ரீங்கார […]

நிஜங்களுக்கான பயணிப்புக்கள்

This entry is part 7 of 45 in the series 4 மார்ச் 2012

உலகத்தின் உயிர்ப்புக்களில் எழுப்பப் பட்டு விடுகின்ற போலிகளுக்கு நிஜங்கள் தோற்றுப் போகும் மனங்களெல்லாம் நிச்சயம் பிணம்தான். புத்தி மந்தமாகிப் போய் சோகமே உருவாகி எதுமேயின்றி வெறுமைக்குள் வறுமைப் படுத்தப் பட்டு கல்வியெல்லாம் அகற்றப்படும் அநத நாள் வருமே அது பற்றியதான பயம் எனக்கிருக்கிறது. “கொலைகள் மலிந்த காலம் வரும்” அப்போது இவ்வுலகம் மாறும். வாழ்வியலின் பிணைப்புக்குள் உருட்டப் பட்டு சின்னக் கைகளுக்குள் சிக்கி விடுகின்ற பொழுதுகள் பற்றியதான அச்சம் என்னை மேலும் அச்சப்படுத்துகிறது. அந்த நாள் வருடம் […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 9)எழில் இனப் பெருக்கம் ஓர் எச்சரிக்கை

This entry is part 6 of 45 in the series 4 மார்ச் 2012

  மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள்  எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின்  இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர்  (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது  ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது.  ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள  காதற் கவிதைகள். […]

நன்றி கூறுவேன்…

This entry is part 4 of 45 in the series 4 மார்ச் 2012

வித்தொன்றை சிதைத்துப் பார்த்தேன் எதுவும் இல்லாமல் போனது… இன்னொன்றை மண்ணுள் புதைத்துப் பார்த்தேன் மரமாக வந்து கதை பேசியது… இலைகளையும் பூக்களையும் உனக்குள் எப்படித்தான் சுமந்தாயோ என்றேன்.. மண்ணைப் போட்டு மூடினாலும் உன்னை மீறி வரும் சக்தி எங்கே என்றேன்… மறுபடியும் வித்தொன்றை சிதைத்தொருக்கால் பார்த்தேன்… மாய வரம் ஏதேனும் அங்குள்ளதுவா தேடினேன் – “வித்திலைகள்” மட்டும் தான் எனைப் பார்த்து முறைத்தன…., மற்றதெல்லாம் எனை விட்டு என் கண்ணை மறைத்தன… பூவின் நிறமேதும் அங்கு இல்லை.., […]

காற்றின் கவிதை

This entry is part 2 of 45 in the series 4 மார்ச் 2012

எழுதாமல் பல பக்கங்கள் காலியாகவே இருக்கின்றன. எழுதுவதற்காக இருந்தவன் எழுதாமல் போனதால் பலன் பெற்றனவோ அந்தப் பக்கங்கள். எழுதுபவன் எழுதாததால் வெள்ளை உள்ளத்துடன் வெற்றிடம் காட்டி விரைந்து அழைக்கிறதோ அந்தக் காகிதப் பக்கங்கள். காகிதத்தின் மொழி அறியாமல் காகிதத்தில் எழுத முயல்கையில் எங்கோ இருந்து வந்தக் காற்று காகிதத்தை அடித்துப் போயிற்று. காற்று அந்தக் காகிதத்தில் தன் கவிதையைக் கொட்டி கொட்டி உரக்கப் பாடியது. நிச்சயமாக அந்தக் காகிதம் காற்றின் கவிதையில் காலம் முழுவதும் நிறைந்திருக்கும். குமரி […]