எங்கே இறைமை ?

This entry is part 26 of 29 in the series 25 டிசம்பர் 2011

– செங்காளி – மறைந்த யுகத்தில் மானிடர் எல்லாம் இறைவன் அருளால் இருந்தனர் கடவுளாய் கடவுள் தாமென்ற கர்வத்தில் அவர்கள் அடக்கம் இன்றி அழும்புகள் செய்தனர். இதனைப் பார்த்த இதர கடவுளர் வேதனை மிகைப்பட வேண்டுதல் செய்திட நாடியே வந்தனர் நான்முகன் தன்னை வாடிய முகத்துடன் வந்ததைச் சொல்லிட மூவருள் செயலால் முதலில் வருபவன் ஆவன செய்வோம் அஞ்சிட வேண்டாம் தவறு செய்வோர் தெய்வத் தன்மையை அவரிட மிருந்து அகற்றி விடுவோம் தீவினை செய்பவர் திறனே போய்விடும் […]

அம்மாவும் பூனக்குட்டியின் கனவுகளும்

This entry is part 18 of 29 in the series 25 டிசம்பர் 2011

அம்மா வளர்த்த பூனையும் குட்டி ஈன்றது கருப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில் காந்தக் கண்களோடு பளிச்சென்று ஓரே குட்டி பிறிதொரு நாளில்… பாட்டி அனுப்பிய பட்சணங்களோடு என்னருகில் அமர்ந்திருந்தாள் வாஞ்சையோடு தலை கோதியபடி அம்மா விண்ட பட்சணத்தை என் வாய் திணிக்கையில் ’மியாவ்’ என்றதும் தரையில் எறிந்த துண்டத்தை முகர்ந்து மேசையினடியில் உறங்கிய தாய் மடி பற்றி எம்பிப் பார்த்ததும் சாட்சாத் அம்மாவின் பூனைகுட்டியே பூனையின் கனவுகளும் நமக்கானதே! -தம்பி பிர்தோஸ்

அட்டாவதானி

This entry is part 17 of 29 in the series 25 டிசம்பர் 2011

சிலிக்கான் சில்லில் சேமித்து வைக்காத எதுவும் நினைவிலிருப்பதில்லை இரண்டையும் நான்கையும் கூட்ட கை விரல்கள் நீட்டி யாரும் முயற்சிப்பதில்லை மின்தூக்கிக்கென அரை மணி நேரம் காத்திருப்பினும் நான்கே நான்கு படிகள் ஏறிச்செல்ல யாருக்கும் முடிவதில்லை. ஃபேஸ்புக் நினைவூட்டாவிடில் தனது பிறந்தநாளை யாரும் கொண்டாடுவதேயில்லை. தீர்ந்துவிட்ட எரிவாயு உருளைக்கு பதிவு செய்ய செல்பேசி நினைவூட்டாவிடில் இயல்வதில்லை இவையெல்லாவற்றையும் அதிகாலையில் நினைவூட்ட அலாரம் இன்றி எழ முடிவதில்லை – சின்னப்பயல் ( chinnappayal@gmail.com )

எப்போதும் புத்தாண்டே! என்றும் புத்தாண்டே!

This entry is part 16 of 29 in the series 25 டிசம்பர் 2011

கண்ணே என் கண்மணி மனிதனே வாழ்வை அனுசரி இயற்கையைக் கொண்டு! குளிர்ந்து கொண்டே விடியும் பொழுதில் வெப்பம் தேடுவது இயற்கையை மறுப்பதாகும்! வெயில் மொண்டு வரும் பகலில் நீ குளிர் பருக நினைப்பது இயற்கையை எதிர்ப்பதாகும்! மூடிய அறையில் வாடிடும் உடல் கொண்டு தளர்ந்திட நீ பிறக்கவில்லை இருப்பதின் ரகசியம் , இருப்பதிலேயே சிறந்த சொல்லைக் கண்டிடும் மனதுடன் வாழ்தலைக் கண்டிடல்! இறந்தவர் சொல்படி இழந்திடும் கணங்களை – துடித்திடும் நிகழ்வினில் பொருந்தித் தவிப்பதை தவிர்த்திடு ! […]

கடைச்சொல்

This entry is part 15 of 29 in the series 25 டிசம்பர் 2011

கிளையிலிருந்து தரைக்கு வீழ்கிற இலையைப்  போன்றே கணித நுட்பம் தவிப்பு மனிதர்களின் தந்திர வழி என்கிறார்கள் ? தீர வலிக்குச்செய்து கொள்ளும் நித்தியப்பணிவிடை என்கிறார்கள் ? காதல் ஜோடிகளின் கைகளிலிருக்கிற கடைசி துருப்புச்சீட்டுஎன்கிறார்கள் ? போதுமான தொரு வாழ்விலிருந்து மீளும் சுய விலகல் என்கிறான் ஞானி ஒரு வேளை துடித்தடங்கும் இக்கயிற்றை அறுத்து தரையிறக்குகையில் உடைந்த என் குரல்வளையில் எஞ்சியிருக்கலாம் ஒரு தற்க்கொலையின் காரணத்திற்கான கடைசிச்சொல்

கல்லா … மண்ணா

This entry is part 12 of 29 in the series 25 டிசம்பர் 2011

  என்னவோ  துரத்துகிறது எப்படியோ  தப்பிக்கிறேன்   போயிராத கோயிலிருந்து பிரசாதம் வருகிறது – கடவுள் கொடுக்க சொன்னதாக ..   ஒடி  ஒடி வருகிறேன் ரயில் கிளம்பிவிட்டது ! பகீர் என்றானது – வாழ்க்கை முடிந்து விட்டது  போல் ..   தோளில் தட்டுகிறார்கள் – திரும்புகிறேன் சிறுவயதில் உடன்  படித்த தோழி. சிரிக்கிறாள் , நானும் சந்தோஷமாக   வீடு வாங்கியதை தேவையற்று சொல்லி கொண்டிருக்கிறேன் – அவள் முகம் கோரமாக மாற தொடங்குகிறது […]

வருங்காலம்

This entry is part 10 of 29 in the series 25 டிசம்பர் 2011

இப்படியும் சிந்திக்கலாம்..! (சுனாமிஞாபகார்த்தமாக) அதோ – வெகு தூரத்தில்… யாரும் வாழ்ந்திராத தரைகளாக… முருகைக் கற்பாறைகள் ஏதோ ஜெபிக்கின்றன… கள்ளிச் செடிகள் ஏதோ கதை சொல்கின்றன… கடற்கரை மணலில் ஏதேதோ கால் தடங்கள் கண்டு பிடிக்கப் படாமல் உக்கிய என்புத் துண்டுகள்.. 8.31ல் நின்றுவிட்ட கடிகாரங்கள்… என்றோ பசுமை பேசி பாழடைந்த கிராமங்கள்… இன்னும் கண்ணீர் விடுகின்ற சுறாமீன் முட்கள்… இன்னமும் மூச்சுவிடும் கடல் நீர்த்துளிகள்… எல்லாமே என்ன மாயைகள்…? சென்ற தலைமுறையின் சரித்திரத்தைப் புரட்டிப் பார்ப்போம் […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆண் பெண் உறவு (கவிதை -55)

This entry is part 8 of 29 in the series 25 டிசம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கம்பளத்தில் பொறி இந்த வடிவத்தை ! ஒருவனை நேசமாய் நோக்கும் ஆயிழையை ஒத்தது ஆன்மீக அனுபவம் ! அது ஒரு நதி ஓட்டம் ! வாத்துகள் துள்ளி அங்கே வசிக்கும் ! ஆற்று நீரில் மூழ்கும் காகங்கள் ! கண்ணுக்குத் தெரியும் : கிண்ணத்தில் உள்ளது உண்டி ! உடல் வளர்ச்சியும் குடல் எரிச்சலும் உண்டாக்கும் மூலங்கள் ! நமது கண்ணுக்குத் தெரியாமல் […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -5)

This entry is part 7 of 29 in the series 25 டிசம்பர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “காற்றே ! எங்களைச் சூழ்ந்து செல்கிறாய்; மெதுவாய் இனிமையாய் பாடிச் செல்கிறாய்; இப்போது பெருமூச்சுடன் வருந்திச் செல்கிறாய் ! உன் நகர்ச்சியைக் கேட்கிறோம். ஆனால் உன்னை நாங்கள் காண முடியாது. நீ எம்மைத் தீண்டுவதை உணர்கிறோம். ஆயினும் உனது வடிவை யாம் அறியோம். நீ ஓர் நேசக்கடல் போல் அசைகிறாய் ! எமது ஆன்மாவைத் தழுவி அணைப்பது நீ. ஆயினும் எம்மை மூழ்க்கி […]

ஏனென்று தெரிய வில்லை

This entry is part 40 of 39 in the series 18 டிசம்பர் 2011

மூலம் : நோரா உதய ஷங்கர் ஜோன்ஸ் தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா  சூரியனை நோக்கும் வரைக் நான் காத்தி ருந்தேன் ! நீயேனோ வரவில்லை ஏனென நான் அறியேன் ! விட்டுச் சென்றேன் உன்னை வேடிக்கை விடுதியில் ! நீயேனோ வரவில்லை ஏனென நான் அறியேன் ! நீயேனோ வரவில்லை ஏனென நான் அறியேன் ! காலை விடிவதைக் கண்ணால் கண்டேன் ! பறந்தோட விழைந்தேன் கண்ணீர்த் துளிகளைக் கையேந்தி உன் முன்னால் மண்டியிடத் […]