(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 27. நோபல் பரிசை வாங்க மறுத்த ஏழை…… வாங்க…வாங்க….என்ன முகத்துல ஒருகளையோட வர்ரீங்க..என்னங்க முகத்துல புன்னகை தவழுது….என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா……? என்னது ஒண்ணுமில்லையா…..ஒண்ணுமில்லை அப்படீங்கறதுக்காகவா முகத்துல இப்படியொரு புன்னகை….பரவாயில்லை….பரவாயில்லை….. எப்பவும் இதே மாதிரி புன்னகை தவழுற முகத்தோடவே இருங்க…இந்தப் புன்னகை இருக்கே மனசுக்கும் முகத்துக்கும் ரொம்ப ரொம்ப […]
ஜனவரி 3 2000 திண்ணை இதழ் பழ.நெடுமாறனின் “தமிழக நதி நீர் பிரச்சனைகள்” என்னும் புத்தகத்தின் 30வது பக்கம் ” மேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்பும் பிரச்சனை” என்னும் கட்டுரையாக வெளிவந்த்துள்ளது. நெடுமாறன் குறிப்பிடும் தரவு மிகவும் அதிர்ச்சி அளிப்பது. கேரள ஆறுகளில் 2500 டிஎம்சி நீர் பெருகுகிறது. 500 டிஎம்சிக்கு மேல் கேரளாவுக்கு விவசாயத் தேவை இல்லை என்கிறார். இந்த ஆறுகளை சுரங்கம் மூலமாகத் திருப்பி தமிழ்நாட்டின் கோவை, மதுரை, ராமநாதபுர மாவட்டங்களை செழிக்கச் […]
கொஞ்ச நாள்களுக்கு முன்னர், நேரில் அறிமுகம் ஆகாத, ஆனால் தொலைப் பேசியில் மட்டும் பேசும் வழக்கமுள்ள, ஓர் அன்பர் என்னிடம் இவ்வாறு கூறினார்: ‘அம்மா! என் அண்ணனுக்கு ஒரு பேரக் குழந்தை சென்ற வாரம் பிறந்தது. ஆனால், பிறந்த இரண்டே நாள்களுள் அது இறந்துவிட்டது. முதல் பேரக்குழந்தை என்பதால் எங்கள் வீட்டில் எல்லாரும் ஒரே சோகத்தில் இருக்கிறோம்.’ ’அய்யோ. குழந்தையுடைய அம்மாவுக்குத்தான் எல்லாரைக் காட்டிலும் அதிக வேதனையாக இருக்கும்,’ என்றேன். ‘ஆமாம். எங்கள் அண்ணனுக்கு ரொம்பவே […]
http://upload.wikimedia.org/wikipedia/commons/1/1d/Wikimedia_logo_family_complete-2013.svg இ.மயூரநாதன் இ.மயூரநாதன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கட்டடக் கலைஞர். கட்டடக்கலைத் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வருகிறார். 2003ல் தமிழ் விக்கிப்பீடியா தொடங்கியது முதல் கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக தனியொருவராகப் பங்களித்து இத்திட்டத்துக்கு வித்திட்டவர் மயூரநாதனே. அன்று முதல் கட்டிடக்கலை, வரலாறு, மொழியியல் ஆகிய பல்வேறு ஆர்வத் துறைகளில் 3000 க்கும் கூடுதலான கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார். இவர் எழுதிய கட்டுரைகளில் கட்டிடக்கலை, யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ், முடிச்சு, ஓவியத்தின் வரலாறு, கோயில், […]
தலை பாறையில் தாக்கியதும், மயக்கமே வந்து விட்டது சானுக்கு. உலகமே இருண்டு தலை சாய்ந்தான். சானைத் தள்ளிச் சாய்த்தச் அந்தச் சிறுவன் ஒரு தூதுவரின் மகன். சான் பேச்சு மூச்சற்று விழுந்து கிடைந்ததைக் கண்டு பயந்து போன அந்தச் சிறுவன், தன் தந்தையிடம் விசயத்தைச் சொல்ல ஓடினான். மற்ற சிறுவர் சிறுமியர்கள் இங்கொருவர் அங்கொருவராய் சிதறி ஓடினார்கள். சிறுவனின் தந்தை சானின் நிலையைக் கண்டு ஆடிப் போய்விட்டார். சான் இறந்திருந்தால் அது இரு […]
ஊழலின் செயல்பாட்டை இரு கண்ணோட்டங்களில் புரிந்து கொள்ளலாம். ஒன்று அமைப்பு ரீதியில்; மற்றொன்று அன்றாட வாழ்வின் தளத்தில். அமைப்பு சார் ஊழல்கள்(systemic corruption) சமுதாயத்தைச் சீரழிக்கின்றன. பொருளாதாரத்தைப் பாழடிக்கின்றன. அலைக் கற்றை, நிலக்கரி, மணல், நிலம் என்று ஒன்றையும் விட்டு வைக்காமல் இயற்கைத் தாதுப் பொருட்களைச் சுரண்டி இந்தியாவில் நிகழ்த்தப்பட்டுள்ள ஊழல்கள் இதனைத் தெளிவாக்குகின்றன. அன்றாட வாழ்வில் நிகழ்த்தப்படும் ஊழல்கள் அமைப்பு சார் ஊழல்கள் போலல்லாமல் மக்களை நேரடியாய்ப் பாதிக்கின்றன. நச்சாய் நச்சரிக்கின்றன. இவை மக்கள் மேல் […]
ஷைலஜா ஆண்டு தோறும் மைசூரில் நடக்கும் தசராத்திருவிழா உலகப்பிரசித்திபெற்றது. அதற்கான ஏற்பாடுகளை பலநாட்கள் முன்னமே தொடங்கிவிடுவார்கள். கலை நிகழ்ச்சிகள் பாரம்பரிய நடனங்கள் இசை நாடகம் என மைசூர் நகரமே களை கட்டும்! தசராவில் முக்கிய அம்சமாய் இடம் பெறுவது ‘ஜம்போசவாரி’ எனப்படும் யானைகளின் அணிவகுப்பும் அவைகளின் சாகசங்கள் கொண்ட விளையாட்டுக்களும். . தசரா வைபவத்தையொட்டி யானைகள் காட்டிலிருந்து வரவழைக்கப்படுகின்றன. அவைகளை ஒத்திகையின்போதே நகரத்தின் தார் சாலையில் ஏறத்தாழ 40கிலோமீட்டர் தினமும் நடந்து செல்ல பயிற்சி அளிக்கப்படுகிறது. […]
நவம்பர் 6, 1999 ல் இரண்டு பதிவுகளைக் காண்கிறோம். முதலாவது பசவைய்யாவின் கவிதை – உன் கவிதையை நீ எழுது. அமரராகி விட்ட சுந்தர ராமசாமி கவிதைகளை ‘பசவைய்யா’ என்னும் பெயரில் எழுதினார் என்பது வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். சென்ற பகுதியில் நாம் குறிப்பிட்டது போல நாம் இலக்கிய / சமூகக் கட்டுரைகளை மையப்படுத்துகிறோம் இத்தொடரில். மற்றொரு பதிவு சுரேஷ்குமார் இந்திரஜித்தின் “சிறுமியும் வண்ணத்துப் பூச்சிகளும்” என்னும் கட்டுரை வடிவிலான கதை. இந்தத் தலைப்பில் நாவல் எழுதிய ஜப்பானிய […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோடடை E. Mail: Malar.sethu@gmail.com 26. இருமுறை நோபல் பரிசு பெற்ற ஏழை……. “பொறந்தாலும் பொம்பளையா பொறக்கக் கூடாது…ஐயா பொறந்து விட்டால்…..” இந்தாங்க முதல்ல பாட்டுப் பாடுறத நிறுத்துங்க…என்னங்க பாட்டுப் பாடுறீங்க…பெண்கள் எவ்வளவு உயர்ந்தவங்க தெரியுமா…? அனைத்தையும் இயக்கக் கூடிய மகா சக்தியாக விளங்குபவர்கள் பெண்கள்…இந்த உலகம் செழிச்சு வளர்ந்திருக்குதுன்னா அதுக்குக் காரணம் யாரு […]
செப்டம்பர் மாதத்தில் நிறைய எண்ணிக்கையில் பல பெரிய மனிதர்களும் புகழ் பெற்றோரும் பிறந்துள்ளனர். ‘அதென்ன, பெரிய மனிதர்கள், புகழ் பெற்றோர் என்று இரண்டு வகைகள்?’ என்கிறீர்களா? அது அப்படித்தான்! ‘புகழ் பெற்றோர் எல்லாருமே உண்மையில் பெரியமனிர்கள் அல்லர்; பெரியமனிதர் யாவருமே புகழ் பெற்றோர் அல்லர்’ – ‘All the popular men are not really great and all the great men do not become popular’ எனும் பொன்மொழியைப் படித்ததன் […]