நட்பூ

This entry is part 17 of 22 in the series 26 மார்ச் 2023

ஜனநேசன்       சந்திரவதனாவின்   பார்வை, நீர்வழிய ,  மரணப்படுக்கையில்  கிடந்த  அம்மாவின்  மீது  நங்கூரமிட்டிருந்தது. மனதுக்குள்  எண்ணங்கள் அலையடித்துக் கொண்டிருந்தன. அம்மாவுக்கு சிறுநீரகம் செயலிழந்து விட்டது . இதயத் துடிப்பும்  குறைந்து  வருகின்றது . மருத்துவர்  சொன்னக் கெடு  தாண்டி இரண்டு நாள்கள்  உதிர்ந்து விட்டன. ஆனால்  பேச்சற்று, உணர்வற்ற அம்மாவின் உயிர்  மட்டும்  தொண்டைக்கும் நெஞ்சுக்குமிடையே  உள்ளேயா, வெளியேவா  என்று கயறு இழுப்புப் போட்டி நடத்திக் கொண்டிருந்தது. உயிர்ப்புறா  நெஞ்சுக்கூட்டுக்குள்ளே  கரபுறத்துக் கொண்டிருந்தது. நெருங்கிய  உறவுகளும், […]

அந்தரம்

This entry is part 15 of 22 in the series 26 மார்ச் 2023

உஷாதீபன் அவளும் நானும் ரொம்ப வருஷமா இப்டித்தான் வாழ்ந்திட்டிருக்கோம். ஸாரி, வாழ்ந்திட்டிருக்கோமில்ல….இருந்திட்டிருக்கோம்…சேர்ந்து இருக்கிறவங்கள்லாம் சேர்ந்து வாழ்றதா அர்த்தமாகாதுல்ல…அதுனால அப்டிச் சொன்னேன்….வாழ்றதுங்கிறது ஆத்மபூர்வமானது….அப்டித்தான் நா நினைக்கிறேன்…இதயத்துல ஒருத்தர வச்சு போஷிக்கிறது…பூஜிக்கிறதுன்னு கூடச் சொல்லலாம்…அப்டியிருந்தா பரஸ்பரம் ஒருத்தர் நலத்துல இன்னொருத்தருக்கு அக்கறை பரிபூர்ணமா இருக்கும்…முணுக்குன்னா மனசு சங்கடப்படும்…என்னாச்சோ, ஏதாச்சோன்னு பதறும்…அப்டியெல்லாம் எந்த அதிர்வும் எங்க வாழ்நாள்ல ஏற்பட்டதுல்ல…அவளுக்கும் சரி, எனக்கும் சரி…சிறு சலனங்கூடக் கெடையாது…அதுனாலதான் சேர்ந்து இருக்கிறதுங்கிற பதத்தைப் பிரயோகப்படுத்தினேன்.இதுல என்ன விசேஷம்னா, எங்களோட இருப்பு இதுநாள்வரைக்கும் யாருக்கும் தெரியாது. […]

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் – அங்கம் – 2, காட்சி – 1 பாகம் – 1

This entry is part 6 of 22 in the series 26 மார்ச் 2023

கோமான் ஷைலக் & வில்லன் புருனோ காலம்: அடுத்த நாள் பகல் பங்கெடுப்போர் : சைப்பிரஸ் கவர்னர், மாண்டேணோ, மற்றும் இரண்டு படைவீர்கள் இடம் : சைப்பிரஸ் தீவு, கடல் அலைகள் கொந்தளிப்பு, பேய்க் காற்றடிப்பு மாண்டேணோ : உங்கள் கண்களுக்கு கப்பல்கள் வருவது தெரிகிறதா முதற்காவலன்: [தொலைநோக்கியில் பார்த்து] ஒரு காக்கை, கழுகு கூட இல்லை. அலை உயரம் மிகுந்திருப்பதால் கடல் தொடுவானத்தில் ஏறும் கப்பலோ, பறக்கும் கொடியோ தெரியவில்லை. மாண்டேனோ: ஓலமிடும் கடற்புயல் நிலத்தின் […]

ஆகச் சிறந்த காதல் – ஆகச் சிறந்த அரசியல்

This entry is part 3 of 22 in the series 26 மார்ச் 2023

செல்வராஜ் ராமன் A)ஆகச் சிறந்த காதல் : அந்த வீடு, இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது; சுமார் 25ஆண்டுகளுக்கு முன்பு அழைப்பிதழின் பேரில் சென்றபோது அந்த வீடு பழைமை காத்தது. பெரிய திண்ணை. பிறகு முற்றம். நல்ல பரந்த வழிநடப்புகள். சிறிய அறை ; பெரிய சமையல் அறை. என்ன சொல்ல !!! அந்த வீட்டைப் பார்ப்பதற்காகவா சென்றான் சாமி ? இல்லை; இல்லவே இல்லை. அந்த அழகை ,தேவதையை அவள் குடியிருக்கும் வீட்டில் பார்ப்பதற்கு ஏதோ […]

நாவல்  தினை – அத்தியாயம் ஆறு- CE   பொ.யு 5000

This entry is part 14 of 14 in the series 19 மார்ச் 2023

இரா முருகன்                                                                                     பொது யுகம்  5000  புறப்படுங்கள். மூன்றாம் நூற்றாண்டு சென்றடைவீர் இருவரும். நீலன் மருத்துவரை நம் காலத்துக்கு அழைத்து வருக. அன்பால் அழைத்து வருக. வருவார். சென்று வருக. பெருந்தேளர் குயிலியையும் வானம்பாடியையும் அனுப்பி வைத்தார். நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகள் பின்னே போகும் காலப் பயணம். ஒரு வினாடி நேரத்தில் ஒரு வருடம் பின்னால் போகத் தொழில்நுட்ப வசதி இருந்தாலும் அதை முழுக்கச் சார்ந்து பயணப்படாமல் மெல்ல மெல்லப் பயணப்படுவதை இந்தப் பெண்கள் தேர்ந்தெடுத்தார்கள். […]

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 11

This entry is part 10 of 14 in the series 19 மார்ச் 2023

தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ அங்கம் -1 காட்சி -2 பாகம் : 11 ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது] மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது] காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது] ஷைலக் : […]

இது இவன் அனுபவம்

This entry is part 3 of 14 in the series 19 மார்ச் 2023

ரொம்ப வருஷம் கழித்து அவன் அந்த அலுவலகத்திற்கு மாறுதலில் வந்தபோதுதான் அவளைப் பார்த்தான். அவளும், தான் வேலை பார்க்கும் துறையிலேயேதான் பணியாற்றுகிறாள் என்ற விபரமே அப்போதுதான் அவனுக்குத் தெரியவந்தது. அதுவே அவளிடம் கொஞ்சம் நெருங்கிவிட்டதைப் போலத் தோன்றி சிலிர்ப்பை ஏற்படுத்தியது. இத்தனை வருஷம் பார்க்காமல் இருந்திருந்தாலும், இப்போது பார்க்க நேர்ந்ததில் ரொம்பவும் நெருக்கமாக உணர்ந்தான். எதற்காக இப்படித் தோன்றுகிறது என்று நினைத்துப் பார்த்தபோது, ஊரில் இருக்கையிலேயே அவள் அழகு தன்னை வசீகரித்திருந்ததும், இவளெல்லாம் எங்கே தனக்குக் கிடைக்கப் […]

நாவல் தினை – அத்தியாயம் ஐந்து CE 5000 பொது யுகம் 5000

This entry is part 9 of 13 in the series 12 மார்ச் 2023

குயிலியும் வானம்பாடியும் அவசரமாக நடந்த  ’ஏமப் பெருந்துயில்’ Cryostasis என்று எழுதி இருந்த ஒழுங்கை, இருட்டும், அமைதியுமாக நீண்டு போனது. ஒரே போல ஐந்தடி உயரமும், ஆறடி நீளமும், இரண்டு அடி அகலமுமான தேள்கள் அங்கே நகர்ந்து கொண்டிருந்தன. அவற்றின் பழுக்கக் காய்ச்சிய சம்மட்டி போன்ற பெரிய கொடுக்குகள் எந்த வினாடியிலும் தாக்குதலை எதிர்பார்த்து, பயமுறுத்தும்படி உயர்ந்து நின்றன.  குயிலியும் வானம்பாடியும் ஓரமாக ஒதுங்கி வணக்கத்துக்குரிய ஒரு செந்தேளர், எனில் பெரும் பதவி வகிக்கும் செந்தேள் நகர்ந்துபோக […]

எங்கேயோ கேட்ட கதை – பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு

This entry is part 7 of 13 in the series 12 மார்ச் 2023

வெங்கடேஷ் நாராயணன் இப்பொழுது அனைத்து குழந்தைகளும் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக தயார் செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். குழந்தைகள் தங்களுடைய முயற்சியை மேற்கொண்டு நல்ல மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறேன். பத்தாவது பொதுத் தேர்வு ஒரு மாணவனின் வாழ்க்கையில் மிகவும் முக்கிய பங்காற்றுகிறது. அதிலிருந்து அவன் மேற்படிப்புக்கு என்ன செய்யலாம் என்று தீர்மானிக்க கூடியது. ஒரு வீட்டில் ஒரு பிள்ளை 10,11, 12 வகுப்பு படித்துக் கொண்டிருந்தால் அவர்கள் வீட்டுக்கு வரும் […]

நாவல் தினை – அத்தியாயம் நான்கு CE 300 – CE 5000

This entry is part 18 of 18 in the series 5 மார்ச் 2023

இரா முருகன் “அவை தாமே வாசிக்கத் தொடங்கி இருந்தன”. காடன் திரும்பத் திரும்பச் சொன்னான். குயிலியும் வானம்பாடியும் ஈரத் தலைமுடி நீர்த் திவலைகளைச் சிதறி நனைந்த மூங்கிலன்ன தோள்கள் பளிச்சிடச் சிரித்தார்கள்.   “காடரே, நாங்கள் தொழிற்நுட்பம் சிறந்த 4700 வருடங்கள் உங்களுக்கு  அப்புறம் உயிர்த்திருந்திருக்கலாம் தான். ஆனால் தானே வாசிக்கும் புல்லாங்குழல் போன்ற சின்னச்சின்ன ஆச்சரியத்தை உண்டு பண்ணும் வெட்டியான கருவிகளை உருவாக்க நேரம் வீணாகச் செலவழித்திருக்க மாட்டோம்”. அவர்கள் கொண்டு வந்த குழல்கள் வெளியின் […]