தாய் மண்

This entry is part 1 of 7 in the series 9 ஏப்ரல் 2023

                                                                                                                                               ம.மீனாட்சிசுந்தரம் நாளும் பொழுதும் மகன் கார்த்திக் நினைப்பிலேயே கழிகிறது. அவன் அமெரிக்கா சென்ற நாட்களின் எண்ணிக்கை வாரங்கள் மாதங்கள் என மாறி வருடங்கள் ஆறு ஆகிவிட்டது. ஓரிரு வருடங்களில் வந்துவிடுகிறேன் என அவன் சொன்ன வார்த்தைகள் மதிப்பற்றுப் போயிற்று. மூன்றாண்டுகள் கழித்து அவன் விரும்பிய, அவனோடு பணிபுரியும்  கவிதாவை திருமணம் செய்வதற்காக இங்கு வந்தான். அதுவும் கவிதாவின் பெற்றோர் சம்மதமில்லாமல். அதற்கு  மறுப்பேதும் தெரிவிக்காமல் அவனது விருப்பப்படி திருமணம் செய்து அனுப்பிவைத்ததையும் நினைத்துப் பார்த்தாள் […]

நிற்பதுவே நடப்பதுவே!

This entry is part 7 of 7 in the series 9 ஏப்ரல் 2023

                                       உஷாதீபன் (ushaadeepan@gmail.com).             என்னாங்க…நிறையத் தண்ணி இருக்கிறதாப் பார்த்து வெட்டுங்கன்னா….இப்டி சீவிக் கொடுக்குறீங்களே? …. ஒரு டம்ளர் அளவு கூட இல்ல….             சின்னாண்டி தலையைக் குனிந்தவாறே நின்றான். சமயங்களில் அவன் கணக்கு தப்பி விடுகிறதுதான். அது பிரச்னையாகிவிடுகிறது. ஒன்றும் சொல்லாமல் இளநீரை இரண்டாய் வெட்டிப் பிரித்தான். ஒரே வழுக்கை.   பார்த்ததும் திக்கென்றது. வழுக்கையாய் இருந்தால் நீர் அதிகம் இருக்க வேண்டும்.  அதுவுமில்லை.             ஆனால் இளநீர் என்று வெட்டினால் முப்பது ரூபாய்தான். ஒன்று […]

நாவல்  தினை  –   அத்தியாயம் எட்டு           CE  5000   CE  1800

This entry is part 13 of 13 in the series 2 ஏப்ரல் 2023

                                                                                                                          குயிலி பார்த்துக் கொண்டிருந்தபோதே, மருது சகோதரர்கள் சீரங்கம் கோவில் மதி இருந்து ஜம்பு தீவு பிரகடனம் செய்வது கலைந்து போனது. ரங்கூனில் ரோடு போட ஜல்லி கலக்கும் யந்திரத்தின் தார் வாடை உக்ரமாகச் சூழ்ந்து அடித்தது. துரைசாமியை, பின்னால் குதிரையேறி வந்து, சவுக்கால் அடித்து, மயிர் பிடுங்கி இங்கிலீஷ் துரை ஒருத்தன் தார் கலக்க விரட்டினான். 1790 மருது சகோதரர்கள் உயிர்த்த காலத்தில் இருந்து முப்பது வருடம்  முன்னால் போய் 1820-இல் கண்ணில் பட்ட […]

ஷேக்ஸ்பியரின்ஒத்தல்லோநாடகம் – அங்கம் -2 காட்சி -1 பாகம் : 2 

This entry is part 11 of 13 in the series 2 ஏப்ரல் 2023

[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா  ++++++++++++++++++++++++  அங்கம் -2 காட்சி -1 பாகம் : 2  ++++++++++++++++  நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]  ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45 வயது]  மோனிகா :  செனட்டர்  சிசாரோவின் மகள்.  ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]  புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன்  [30 வயது]  காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]  […]

ஆறுதல்

This entry is part 9 of 13 in the series 2 ஏப்ரல் 2023

  கண்களிலிருந்து நீர் வழிந்தது ஜெயலட்சுமிக்கு . தலையில் ஊற்றிய நீர் கன்னத்தில் வழிந்து கொண்டிருந்தது .கண்ணீரும் குளியல்  நீரும் கலந்து  உடம்பு முழுக்க ப்  பரவியது.  குளியல் அறைக்கு வந்து விட்டால் ஜெயலட்சுமிக்கு எல்லா கவலைகளும் வந்துவிடும்.  அழுது த்தீர்ர்ப்பாள். கண்களிலிருந்து நீர் வழிய வழிய மனதின் கவலைகளை  இறக்கி  வைப்பாள்  . இந்தச் சுற்றுலாப் பயணத்தில் கூட அவளுக்கு விருப்பமில்லை .மூட்டு வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது ..சரியாக நடக்க முடியவில்லை .அதுவும் இப்படியான இடத்தில் வந்து செங்குத்தான இடத்தில் ஏறுவது என்பது மிகவும் சிரமமாக இருந்தது .. ஆகவே உணவு விடுதிக்குச் செல்லாமல்  மகளே உணவைக்கொண்டு வந்தாள் .. அவளும் சிரமப்பட்டு உணவை எடுத்து வரவேண்டியிருந்தது. வெளியில் போகும் […]

எங்கேயோ கேட்ட கதை – எதிர்பாராத உதவி

This entry is part 6 of 13 in the series 2 ஏப்ரல் 2023

K N வெங்கடேஷ் காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது.   (திருக்குறள்-102)  திருக்குறள் விளக்கம் – நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும் நம் நாட்டில் அரசியல் தலைவரின் மறைவு என்றால் பேருந்துகள் ஓடாது. எல்லா கடைகளும் அடைக்கப்பட்டு விடும்.  வெளியூரிலிருந்து வரும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர்.  பெரும்பாலும் அரசியல் தலைவர்களின் மறைவினை அதிகாலையிலே அறிவிப்பார்கள்.  அந்த […]

ஏகாந்தம்

This entry is part 2 of 13 in the series 2 ஏப்ரல் 2023

உஷாதீபன்                                                                          ரமணன், தான் தனிமைப் படுத்தப்படுவதாக உணர்ந்தார். தனிமைப்படுத்தப்படுகிறோமா அல்லது தனிமைப்படுத்திக் கொள்கிறோமா என்றும் ஒரு சந்தேகம் வந்தது. நமக்கு நாமே அப்படிச் செய்து கொண்டு, வீணாய் அடுத்தவர் மேல் சந்தேகப்பட்டால்? அது முட்டாள்தனமில்லையா? அநாவசியமான சண்டைகளுக்கு, மனத் தாங்கல்களுக்கு வழி வகுக்காதா?  தனிமைப் படுத்திக் கொள்வதினால்தான் அதை உணர முடிகிறதோ என்று நினைத்தார். வசதியாய் உணரப்பட்டதனால், அதை நிலைக்கச் செய்யும் முகமாகச் சில நடந்து வருகிறதோ?       ஏம்ப்பா இப்டித் […]

நாவல்  தினை – அத்தியாயம் ஏழு (CE 5000 CE  1900)

This entry is part 18 of 22 in the series 26 மார்ச் 2023

இரா முருகன் பயணத்துக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை செய்து முடிப்பது ஒரு சுறுசுறுப்பில்லாமல் நடந்து கொண்டிருந்ததாக குயிலிக்கும் வானம்பாடிக்கும் மனதில் பட்டது.  ஆரம்ப வேகம் அப்புறம் இல்லை. ஏழு மணி காலை நேரத்தில் வந்தவர்கள்  பத்தரை மணி ஆகியும் புறப்படவில்லை. பயண அலுவலகத்தின் புறப்பாடு பகுதியில் ஆரஞ்சு நிற விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்குப் பயணம் இருக்கிறது என்று மட்டும் சொல்கிறவை இந்த விளக்குகள். குயிலியின் உள்ளங்கையில் டிஜிட்டல் திரை ஒளிர்ந்தது. பொருள் வயின் பயணம் என்று எழுதிய […]

நட்பூ

This entry is part 17 of 22 in the series 26 மார்ச் 2023

ஜனநேசன்       சந்திரவதனாவின்   பார்வை, நீர்வழிய ,  மரணப்படுக்கையில்  கிடந்த  அம்மாவின்  மீது  நங்கூரமிட்டிருந்தது. மனதுக்குள்  எண்ணங்கள் அலையடித்துக் கொண்டிருந்தன. அம்மாவுக்கு சிறுநீரகம் செயலிழந்து விட்டது . இதயத் துடிப்பும்  குறைந்து  வருகின்றது . மருத்துவர்  சொன்னக் கெடு  தாண்டி இரண்டு நாள்கள்  உதிர்ந்து விட்டன. ஆனால்  பேச்சற்று, உணர்வற்ற அம்மாவின் உயிர்  மட்டும்  தொண்டைக்கும் நெஞ்சுக்குமிடையே  உள்ளேயா, வெளியேவா  என்று கயறு இழுப்புப் போட்டி நடத்திக் கொண்டிருந்தது. உயிர்ப்புறா  நெஞ்சுக்கூட்டுக்குள்ளே  கரபுறத்துக் கொண்டிருந்தது. நெருங்கிய  உறவுகளும், […]

அந்தரம்

This entry is part 15 of 22 in the series 26 மார்ச் 2023

உஷாதீபன் அவளும் நானும் ரொம்ப வருஷமா இப்டித்தான் வாழ்ந்திட்டிருக்கோம். ஸாரி, வாழ்ந்திட்டிருக்கோமில்ல….இருந்திட்டிருக்கோம்…சேர்ந்து இருக்கிறவங்கள்லாம் சேர்ந்து வாழ்றதா அர்த்தமாகாதுல்ல…அதுனால அப்டிச் சொன்னேன்….வாழ்றதுங்கிறது ஆத்மபூர்வமானது….அப்டித்தான் நா நினைக்கிறேன்…இதயத்துல ஒருத்தர வச்சு போஷிக்கிறது…பூஜிக்கிறதுன்னு கூடச் சொல்லலாம்…அப்டியிருந்தா பரஸ்பரம் ஒருத்தர் நலத்துல இன்னொருத்தருக்கு அக்கறை பரிபூர்ணமா இருக்கும்…முணுக்குன்னா மனசு சங்கடப்படும்…என்னாச்சோ, ஏதாச்சோன்னு பதறும்…அப்டியெல்லாம் எந்த அதிர்வும் எங்க வாழ்நாள்ல ஏற்பட்டதுல்ல…அவளுக்கும் சரி, எனக்கும் சரி…சிறு சலனங்கூடக் கெடையாது…அதுனாலதான் சேர்ந்து இருக்கிறதுங்கிற பதத்தைப் பிரயோகப்படுத்தினேன்.இதுல என்ன விசேஷம்னா, எங்களோட இருப்பு இதுநாள்வரைக்கும் யாருக்கும் தெரியாது. […]