மணிபர்ஸ்

This entry is part 10 of 31 in the series 16 செப்டம்பர் 2012

ஆர்னால்ட் ஃபைன் (அமெரிக்கா) நியூ யார்க்கில் இருந்து வெளிவரும் தி ஜுயிஷ் பிரஸ் இதழின் ஆசிரியர் ஆர்னால்ட் ஃபைன் 1984ல் எழுதிய ஒரு உண்மைக்கதை. மகா குளிரான ஒரு தினம். நான் வீடு திரும்புகிற வழியில் காலில் தட்டியது ஒரு மணிபர்ஸ். யாரோ தெருவில் தவறுதலாக தொலைத்திருக்கிறார்கள். கையில் எடுத்து விரித்துப் பார்த்தேன். அதன் சொந்தக்காரர் பற்றி எதும் துப்பு கிடைக்கலாம். ஆனால் அதில் வெறும் மூணு டாலர்கள் மாத்திரமே இருந்தன. கூட ஒரு கசங்கிய கடிதம். […]

மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -43

This entry is part 3 of 31 in the series 16 செப்டம்பர் 2012

நாகரத்தினம் கிருஷ்ணா ஹரிணி 54. மறுநாள் திங்கட் கிழமை. காலை பத்துமணிக்கு அண்ணாநகர்வரை போகவேண்டியிருந்தது. நான்கு தினங்களுக்குமுன்பு புதுச்சேரி கடற்கரையில் சந்தித்த பிரெஞ்சு இளைஞர் குழு, தொண்டு நிறுவனமொன்றுடன் இணைந்து புதுச்சேரிக்கு மேற்கே ஒருகிராமத்திற்கு சமுதாய நலக்கூடம் கட்டித் தரவிருப்பதாக கூறியிருந்தார்கள். காலை எட்டுமணிக்கு எழுந்திருந்தபோது, கௌசல்யா அம்மா தோசைவார்த்துக்கொண்டிருந்தார். பல்துலக்கி குளித்து முடித்து, வழக்கம்போல ஒரு டெனிம், காட்டன் ஷர்ட் என்று தயாராகவும், மேசைக்கு தோசைதட்டு வந்தது. அவசர அவசரமாக தோசை விள்ளல்களை கார சட்டினியுடன் […]

அக்னிப்பிரவேசம் -1

This entry is part 8 of 31 in the series 16 செப்டம்பர் 2012

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்  yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com நவம்பர் 12, வியாழக்கிழமை, ராயப்பேட்டையில் ஒரு மகப்பேறு ஆசுபத்திரி. நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த அறையைத் தவிர ஆஸ்பத்திரி முழுவதும் நிசப்தமாய் இருந்தது. அந்த அறையில் மட்டும் என்றுமே நிசப்தத்தைக் காணமுடியாது. பிறப்பு இறப்புக்கு நடுவே போராட்டம் அங்கே நிரந்தரமாய் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். ஒரு ஜீவனின் உயிரை சோதித்தபடி மற்றொரு ஜீவன்  பிறக்கும்  இடம் அதுதான். பெண்ணாகப் பிறந்தவள் எந்த சங்கோஜமும் இல்லாமல் […]

கதையே கவிதையாய்! (5) பண்டிதரும் கவிஞரும்

அரவம் ஒன்று வானம்பாடியிடம், “நீவிர் பறக்கக்கூடியவரேயாயினும், உம்மால், பூரணமான அமைதியில் வாழ்க்கையின் உயிர்ச்சாறு இடம் பெயரும் அந்த பூமியின் சரிவுகளைக் காண இயலாதே” என்றது. அதற்கு வானம்பாடி, “ஆம், தாங்கள் அளவிற்கதிகமாக அறிந்துள்ளீர்கள், அனைத்து அறிவார்ந்த பொருட்களையும்விட உம்முடைய கலை மேலும் அறிவுடையதாகவும் இருக்கலாம். – உம்மால் பறக்க இயலாது என்பது பரிதாபத்திற்குரியது” என்று பதிலிறுத்தது. மேலும் இதெல்லாம் ஏதும் செவியில் விழாதது போல, அந்த அரவம், “உம்மால் ஆழமான இரகசியங்களைக் காணவும் இயலாது, மறைந்த ராச்சியங்களின் […]

முள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி)

This entry is part 17 of 28 in the series 9 செப்டம்பர் 2012

சத்யானந்தன் அலுவலக வளாகத்தில் நிகழ்த்தப்படும் வன்முறைகள் ஆழ்ந்த உட்காயங்களை விளைவிக்கின்றன. ரணத்தில் மன மூட்டுக்களில் ரத்தம் கட்டிக் கொள்கிறது. மனம் நொண்டுகிறது. வார்த்தைகளில் வலி எச்சரிக்கைகளை மீறி வெளிப்பட்டு விடுகிறது. “ஸ்கூட்டரை” நிறுத்தும் போதே “ப்ரிட்ஜில்” முட்டை இருக்குமா என்று யோசித்ததில் நினைவுக்கு வரவில்லை. எதிரில் இருந்த பெட்டிக்கடையிலேயே நான்கு முட்டைகளை வாங்கிக் கொண்டான். சாந்தியாயிருந்தால் “சிரமம் பாக்காம் நடந்தா நாடார் கடையில சல்லிஸா வாங்கலாம். இவன்கிட்டே ஒரு முட்டைக்கி அம்பது பைசா அதிகம் ” என்பாள். […]

உறு மீன் வரும்வரை…..

This entry is part 10 of 28 in the series 9 செப்டம்பர் 2012

வில்லவன்கோதை   விடியற்காலை  நான்கு  மணியிருக்கும் ! இரண்டு நிமிடங்கள் மட்டுமே நின்று  இளைப்பாறிய  சதர்ன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நெடுங்காடு  ரயில் நிலையத்தை விட்டு தெற்கு நோக்கி  தன் பயணத்தை துவக்கியது. அந்த அதிகாலை நேரத்தில் அது எழுப்பிய  பார்…..ம்  என்ற பிசிரடிக்கும் பேரொலி அந்த மலைப்பிராந்தியம் முழுதும்  எதிரொலித்து பெருவாரியான உயிரினங்களின் உறக்கத்தை தொலைத்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டு கிடந்த பெட்டிகளில் ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டியில் இருந்து குறைந்தபட்ச சுமைகளுடன் குதித்து இறங்கினான் […]

மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -42

This entry is part 6 of 28 in the series 9 செப்டம்பர் 2012

    நாகரத்தினம் கிருஷ்ணா     ஹரிணி   53.       மீண்டும் மனம் தற்செயல் நிகழ்வு பற்றிய விவாதத்தில் இறங்கியது. செஞ்சியிலிருந்து புதுச்சேரி திரும்பும்போது எரிக் நோவாவிடமிருந்து பெற்ற தகவல்களும், நேற்று எனக்கேற்பட்டிருந்த அனுபவமும்,  திசைதெரியாமல் அலைக்கழித்தது. பெரியவரை பார்ப்பது, அவரது செஞ்சி நாவல் பற்றிய எழும் ஐயங்களை கேட்டு விளக்கம் பெறுவது, நாவல் பதிப்புச் சம்பந்தமான தகவல்களைத் தெரிவித்துவிட்டு இரவு புதுச்சேரி திரும்புவதென்பது எனது திட்டங்கள். என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட சாமிநாதனும், அவன் மாயமாய் […]

கதையே கவிதையாய்! (4) செவிடாக இருந்தவள்

This entry is part 3 of 28 in the series 9 செப்டம்பர் 2012

  பவள சஙகரி     ஒரு செல்வந்தன் முழுச்செவிடான தம் இளம் மனைவியுடன் வாழ்ந்து வந்தான்.   ஓர் காலைப் பொழுதினில் தங்கள் விரதம் முறிக்கும் நேரமதின் போதான (உணவருந்தும் பொழுது) உரையாடலில் “நேற்று நான் சந்தைக்குச் சென்றிருந்தபோது அங்கு, டெமாஸ்கஸ் நகரிலிருந்து வந்த பட்டாடைகளும், இந்தியாவிலிருந்து வந்த மேலாடைகளும், பெருசியாவிலிருந்து வந்த கழுத்து மாலைகளும் யாமனிலிருந்து வந்த  கைவளைகள போன்றவைகளும்  பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. திருத்தலப் பயணக் குழுவினர் .இப்பொருட்களை நம் நகரத்திற்கு இப்போதுதான் கொண்டு […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -1

This entry is part 2 of 28 in the series 9 செப்டம்பர் 2012

(மூன்றாம்  அங்கம்)  அங்கம் -3 பாகம் -1 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் […]

கருணையினால் அல்ல…..!

This entry is part 1 of 28 in the series 9 செப்டம்பர் 2012

பவள சங்கரி ”ஐயா.. நன்றிங்க. சாமியாட்டமா வந்து எம்பட குழந்தையை காப்பாத்திப்போட்டீங்கோ… எங்க குலசாமியே நீங்கதானுங்கோ. புருசனும் இல்லாம என்னோட வாழ்க்கைக்கே ஆதாரமா இருக்குற இந்த ஒத்தைப் புள்ளையையும் நோய் கொண்டுபோயிடுமோன்னு உசிரை கையில புடிச்சிக்கிட்டிருந்தேங்க.. மவராசன் ஒத்த காசு கூட வாங்காம எம் புள்ளைய காப்பாத்திப்போட்டீங்க.. உங்க குலமே நல்லா வாழோணும்.. அந்த ஆத்தா மகமாயி உங்க குடும்பத்தையே காப்பாத்துவா” அம்மா.. அம்மா.. எழுந்திருங்க . இப்படி காலில் எல்லாம் விழாதீங்க. பையனுக்கு மருந்து மாத்திரையெல்லாம் […]