நல்லதோர் வீணை..!

This entry is part 5 of 37 in the series 2 செப்டம்பர் 2012

 சிறுகதை:ஜெயஸ்ரீ ஷங்கர்,சிதம்பரம்   மயில்கழுத்து நீலப்பட்டுப் புடவையில் அன்னப்பட்சி ஜரிகை ஜொலிக்க மெல்லிய கொலுசொலி பார்கவியின்  நடைக்கு ஜதிபோட, தலையில் சூட்டிய  பிச்சிப்பூவின் மணம் அவள் கடந்து சென்ற பாதை முழுதும்  மலரின் புகழைப்  பரப்பியது.  “பார்கவி இன்னும் கொஞ்சம் மெல்ல நடவேன்” என்று காதில் அசைந்தாடிய ஜிமிக்கிகள் ரகசியமாய் எச்சரிக்க, மனதைப் பிடுங்கித் தின்ற வெட்கத்தையும் பயத்தையும் ஒதுக்கிவிட்டு பிரார்த்தனையோடு மேடையில் அமர்கிறாள். விரித்திருந்த ஜமுக்காளத்தில் காத்திருந்து, அமர்ந்தவளின் மடியில் தலை வைத்தது  அவளது அருமை […]

புதிய அனுபவம்

This entry is part 1 of 37 in the series 2 செப்டம்பர் 2012

    எழுதியவர் : ‘கோமதி’   பாகீரதியிடம் தெருக்கோடி வீட்டு பையன் ஓடி வந்து, “உங்க வீட்டுக்குபுதுசா ஒருத்தர் வந்திருக்காரில்லயா? அவரை போலீஸ் பிடிச்சுண்டு ஜீப்புலே அழைச்சுண்டு போனா. நான் ஸ்கூலுக்கு போறபோது பார்த்தேன்” என்றபோது பாகி “ஐயையோ, புதுப்பையன் கன்னடமும் தெரியாது. இங்கிலீசும் பேசத்தெரியாது. எங்கே போய் தேடறது?’’ என்று கவலைப்பட்டாள்.   ”மல்லேச்வரம் போலீஸ் ஸ்டேஷனுக்குத்தான் கூட்டிக்கொண்டுபோயிருப்பார்கள் ” என்றுசொன்ன பையன் விளையாட ஓடிவிட்டான். மணி மாலை நாளுக்கு மேலாகிவிட்டது.   மாடியில் […]

மானும் விறகுவெட்டியும் (கொரிய நாடோடிக் கதை)

This entry is part 23 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

சித்ரா சிவகுமார், ஹாங்காங் வெகு காலத்திற்கு முன்பு, கொரிய நாட்டின் கும்காங் மலையடிவாரத்தில், ஒரு ஏழை விறகுவெட்டி வாழ்ந்து வந்தான். அவன் தாயுடன் தனியே வாழ்ந்தான். மணம் ஆகியிருக்கவில்லை. ஒவ்வொரு நாளும், மலைக்குச் சென்று விறகு வெட்டி, அதை விற்று, தன் வாழ்க்கையை நடத்தி வந்தான். ஒரு முன்பனி காலத்தில், சிவப்பு மேபில் மரங்கள் அடர்ந்த காட்டின் எல்லாப்பகுதியும் தகதகவென்று ஒளிர்ந்து கொண்டு இருந்த போது, எப்போதும் போல், காட்டில் மரம் வெட்டச் சென்றான். கடினமாக மரத்தை […]

சாமி போட்ட முடிச்சு

This entry is part 21 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

முகில் தினகரன் குடிசைக்கு வெளியே கயிற்றுக் கட்டிலைப் போட்டுக் கொண்டு வானத்து நட்சத்திரங்களை பிரமிப்புடன் பார்த்தபடியே படுத்துக் கிடந்த சாமியாடிக்கு தெக்காலத் தோப்புப் பக்கமிருந்து வந்த நாய்க் குரைப்புச் சத்தம் சற்று உறுத்தலாகவே இருந்தது. “இதென்ன கருமமோ தெரியல இன்னிக்கு நாய்க இந்தக் கூப்பாடு போடுதுக…ஒருவேளை வெள்ளானப்பட்டியில் ப+ந்த மாதிரி…நம்மூர்ப்பக்கமும் முகமூடித் திருடனுக ப+ந்துட்டானுகளோ?” யோசனையுடன் எழுந்து கொய்யா மரத்தருகே சென்று தெக்காலத் தோப்புப்பக்கமாய்ப் பார்வையைச் செலுத்தினார். தூரத்தில் நேர்கோடாய்ப் படுத்துக் கிடந்த ரயில் தண்டவாளத்தின் மீது […]

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 40

This entry is part 20 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

– நாகரத்தினம் கிருஷ்ணா ஹரிணி 49. நீண்ட விஸில் சப்தம். பேருந்து குலுங்கி நின்றது. ஒரு பெருங்கூட்டமே இறங்குவதுபோலிருந்தது. இரண்டு நடுத்தர வயது பெண்மணிகளுடன் ஓர் இளைஞனும், கைக்குழந்தையுடன் பெண்ணொருத்தியும் இறங்கினார்கள். அவர்களைத்தொடர்ந்து இறங்கினேன். வேகமாக வந்த சைக்கிளொன்று என்மீது இலேசாக இடித்து நின்றது. நிலை தடுமாறி விழ இருந்தவள் சமாளித்து நின்றேன். சைக்கிளில் பத்துபன்னிரண்டு வயது சிறுவன். சட்டென்று பிரேக் அடித்து பாரில் இறங்கி காலை ஊன்றினான். ‘கோவிச்சுக்காதீங்க அக்கா, பெல்லடித்துக்கொண்டுதான் வந்தேன். நீங்க கவனிக்கலை’, […]

முள்வெளி – அத்தியாயம் -23

This entry is part 19 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

ஆகஸ்ட் 14. இரவு மணி எட்டு. பெரிய ஜமக்காளம் விரிக்கப் பட்ட அந்த வீட்டு மொட்டை மாடியில் கிட்டத்தட்ட இருபது பேர் அமர்ந்திருந்தார்கள். மொட்டை மாடிக் கதவுக்குப் பின் இருந்த ‘ப்ளக் பாயிண்ட்’டிலிருந்து வந்த ஒயரின் முனையில் ஒரு நூறு வாட்ஸ் பல்பு சிறு சணலால் நிலையின் மீது அடிக்கப்பட்ட ஆணியில் ஒயர் சுற்றப் பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தது. ஈசல்களும் கருப்பு நிற சின்னஞ்சிறு பூச்சிகளும் அந்த பல்பை மொய்த்து சிலரின் சட்டை மற்றும் தலை மீது […]

பெய்வித்த மழை

This entry is part 16 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

பா.பூபதி பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்க முடியும், பகலில் இரவு கரைவதை என்று புரிந்தாலும் போதுமான அளவு இரவை போர்வையில் அடைகாத்துக் கொண்டேன். ஆனாலும் நேரம் வளர வளர நான் அடைகாத்த இரவின் நிரம் தேய்ந்தபடியே இருந்தது. ஒரு கட்டத்தில் தேய்ந்த நிரம் அதற்குமேல் மங்காமல் அப்படியே இருந்தது. இதென்ன இப்படியே இருக்கே! என்று பக்கத்தில் போய் பார்த்ததும் பல்லைக்காட்டி சிரித்தது நிழல். நிழலா! இது நிஜத்தின் பின்னால்தானே இருக்கும். இது… இது இந்த போர்வையின் நிழலாச்சே! அப்படினா […]

இது…இது… இதானே அரசியல்!

This entry is part 11 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

”ஏப்பா…. சந்திரா பொண்ணு வீட்டுக்காரங்க எப்ப பார்க்க வர்ரீங்கன்னு கேட்டு அனுப்பியிருக்காங்க.. நீ ஒன்னுமே சொல்லாம இருக்கியே…?” “கல்யாணம் பண்ணிக்கற நிலைமையிலா இப்ப இருக்கு நம்ம் வீடு… அக்கா குழந்தைக்கு மொட்டையடிக்கிறதுக்கு போயிட்டு வந்து சீர் பத்தலைன்னு அவிங்க மாமியார்கிட்ட பேச்சு தின்ன விசனமே தீரல.. ஆச்சு தங்கச்சியோட கட்டு சோறு விருந்தும் வந்தாச்சு.. அவ குழந்தைப்பேறுக்கு வரப்போற நாளும் தூரமா இல்ல… இந்த லட்சணத்துல வர சம்பளம் வாயுக்கும், வவுத்துக்குமே சரியாயிருக்கு.. இதுல இன்னொரு டிக்கட்டை […]

கதையே கவிதையாய்! (2)

This entry is part 10 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

இரு பாதுகாவல் தேவதைகள் ஒரு பொன்மாலைப் பொழுதில் நகர எல்லையில் இரு பாதுகாவல் தேவதைகள் சந்தித்து, ஒருவரை ஒருவர் வாழ்த்தியவாறு உரையாடலானார்கள். ஒரு தேவதை, “தற்போது என்ன செய்கிறாய், உனக்குக் கொடுக்கப்பட்ட பணி என்ன?” என்றது. மற்றொரு தேவதை, “பள்ளத்தாக்கின் அடியில் வாழும் மிக மோசமாக மதிப்பிழந்த, பெரும் பாவியான, வீழ்ச்சியடைந்த ஒரு மனிதனின் பாதுகாவலனாக நியமிக்கப்பட்டுள்ளேன். நான் கடுமையாக உழைக்க வேண்டிய ஒரு முக்கியமான பணி அது என்பது உறுதி” என்று பகன்றது. முதலாம் தேவதை, […]

கடிதம்

This entry is part 9 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

வர்ஷினி என்ற இந்தப் பெண்ணை மையமாக வைத்து தான் சுந்தரின் மனப்பிரபஞ்சமே சுற்றிக் கொண்டிருந்தது.அழகு,கடவுள் அவளுக்கு அளித்த வரமென்றால், அவர்கள் குடும்பப் பின்னணி அவளுக்கு கம்பீரத்தைக் கொடுத்தது;அவளது நிமிர்ந்த நன்னடையில் தன்னம்பிக்கை தெரிந்தது.கல்லூரி வாழ்க்கையில் படிப்புச் சம்மந்தமான அன்றாடக் கடமைகளை சுந்தர் நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது,உள்ளம் அவ்வப்போது கழுகாய் சிறகு விரித்து அவளின் மனவெளியில் பறந்து கொண்டிருக்கும்.அத்திப்பூத்தாற் போல் ஏதாவதொரு சமயத்தில் அவளருகில் நெருங்கி நிற்கும் போது,அவளது முகம் பிரகாசிக்கும் ஒளியில் அவனுடைய மனம் தொட்டாற்சிணுங்கியாய் கூனிக் குறுகி […]