கிருஷ்ணாபுரம் போயிருக்கிறீர்களா? நான் கேட்பது தொல்சிற்பங்கள் நிறைந்துள்ள திருநெல்வேலி மாவட்டக் கிருஷ்னாபுரம் இல்லை. விழுப்புரம் மாவட்ட எல்லைக் கோடியில் இருக்கும் ஒரு சாதாரண கிராமம். ஆனால் அதைக் கிராமம் என்றும் சொல்ல முடியாது. நகரம் அளவிற்கு வளர்ச்சியும் கிடையாது. வேண்டுமானால் மூன்றாம் பாலினம் போல கிராம நகரம் என்று சொல்லிக் கொள்ளலாம். பண்ருட்டியிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலை அக்கிராமம் வழியாகச் செல்வதுதான் அக்கிராமத்தை ஒரளவிற்கு நகரமயமாக்கி உள்ளது. ஒரு கணினி மையம் இணைய தளத்துடன் வந்துவிட்டாலே […]
’சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்று பாடினார் மகாகவி பாரதியார். தெலுங்கு ஓர் அருமையான இனிமையான மொழி. எல்லா மொழிச் சிறுகதைகளுக்கும் உள்ள சிறப்புத் தன்மைகளைத் தெலுங்குச் சிறுகதைகளிலும் காண முடிகிறது. ’தெலுங்குச் சிறுகதை பிறந்து 75 ஆண்டுகள் ஆகின்றன” என்று டி. ராமலிங்கம் குறிப்பிடுகிறார். 1910—இல் ‘திருத்தம்’ எனும் பெயரில் முதல் சிறுகதை வெளியானது. அதை எழுதியவர் குரஜாடா அப்பாராவ் என்பவர் ஆவார். (மு. கு. ஜகன்னாதராஜா) அவரை இன்றைய தெலுங்குச் சிறுகதைகளுக்கு வித்திட்டவர் எனக்கூறலாம். பாலகும்மி […]
எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ? சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன் வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதா னாயிடுக ஒல்லைநீ போதா யுனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றாழிக்க வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய். திருப்பாவையின் பதினைந்தாம் பாசுரம் இது. இப்பாசுரம் அருமையான நாடகப் பாணியில் அமைந்துள்ளது. பாசுரம் […]
தமிழ் நவீன இலக்கியத்தின் எழுத்தாளர்களில் முக்கியமானவரும் சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான நாஞ்சில் நாடன் அண்மையில் ’சிற்றிலக்கியங்கள்’ எனும் நூலை எழுதியிருக்கிறார். அதில் அவர் 14 வகைச் சிற்றிலக்கியங்களை மிகுந்த தேடலுக்குப்பின் கண்டறிந்து ஆய்வு செய்துள்ளார். அந்நூலில் ‘பிள்ளைத்தமிழ்’ என்னும் வகையில் பல பிள்ளைத்தமிழ் நூல்களை அவர் காட்டுகிறர். அவற்றில் ஒன்றுதான் ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ் எனும் நூலாகும். நாஞ்சிலின் நூலைப்படிக்க இயலாதவர்களுக்கு ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத் தமிழ் பற்றி அறிமுகம் செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும் […]
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய் கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம்பெரு மாட்டி யசோதா அறிவுறாய் அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த உம்பர்கோ மானே உறங்கா தெழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய இது திருப்பாவையின் பதினேழாவது பாசுரம். இதற்கு முந்திய பாசுரத்தில் ஆயர்குலப் […]
பொழுது விடிந்தும் விடியாதது போல இருந்தது. முருகன் எழுந்திருக்க மனமின்றி படுத்துக் கிடந்தான். உடலோடு உள்ளமும் சோர்வாக இருந்தது. அம்மா வாசலில் சாணம் தெளிக்கும் சத்தம் கேட்டது. தோட்டத்தில் சேவல் குரலெடுத்துக் கூவியது. காகங்கள் கரையும் சத்தம் தெளிவாகக் கேட்டது. முருகன் எழுந்து வாசலில் திண்ணையில் உட்கார்ந்தான். அம்மா கோலம் போட்டுவிட்டுப் பால் கறக்கப் போய்விட்டாள். அம்மா போடும் கோலம் மிக அழகாக இருக்கும். இனி அவள் உலகம் தொடங்கி விட்டது. நான்கு மாடுகளில் பால் கறந்து […]
‘இராவணாதி கும்ப கருணர்களைவ தம்செய்யவளைமதில்அயோத்தியில் தயரதன் மதலையாய்த் தாரணி வருகுதும்’என்று தேவர்களுக்கு வரமளித்த வண்ணம் திருமால் ஸ்ரீஇராமபிரானாக அவதரித்தார். விஸ்வாமித்திரருடன் கானகம்சென்று தாடகைவதம் செய்து தவமுனியின் வேள்விகாத்து அகலிகைக்கு சாபவிமோசனம் கொடுத்து, மிதிலை சென்று வில்முறித்து ஜானகியை மணம் புரிந்தார். அயோத்தி வந்தபின் தயரதன் தன்மகன் இராமபிரானுக்கு முடிசூட்ட எண்ணி பட்டாபிஷேகத்திற்கு நாள் குறித்தார். ஆனால்மந்தரையின் போதனையால் மனம் மாறிய கைகேயியின் வரங்கள் மூலம் இராமன் வனம் ஏகினார். தண்டகாராணியம் வந்த தசமுக இராவணன் சீதாபிராட்டியைச் சிறை […]
“என்னாகாலையிலேயேசட்டையைமாட்டிகிட்டுகிளம்பிட்டிங்க?” காலைமிதியடியில்நுழைத்துக்கொண்டிருந்தவன், ”பொறப்படச்சவேகேட்டுட்டஇல்ல: போனகாரியம்உருப்பட்டமாதிரிதான்” என்றேன். ”ஆமா, ஏதோபொண்ணுபாக்கப்போறமாதிரிதான்சொல்றீங்க; யாராவதுதேடிகிட்டுவந்தாஎங்கபோயிறிக்கிங்கன்னுசொல்லணும்லஅதுக்குதான்கேட்டேன்’ என்றாள்என்மனைவி. ”போனவாரம்நடந்தகூட்டத்துக்குகொஞ்சம்பேருவரல; அதான்ஏன்னுகேட்டுட்டுவரலாம்னுபோறேன்.” ஞாயிறுதானேவீட்டில்ஏதாவதுவேலைகளைப்பார்க்கலாமேஎன்றஆதங்கம்தான் அவளுக்கு. என்னவேலை? படித்தபுத்தகங்களைஒழித்துஅல்லதுஒதுக்கிவைக்கலாம்; இருசக்கரவாகனத்தைத்துடைக்கலாம்; தூசிபடிந்துள்ளமின்விசிறியைத்துடைக்கலாம்; பூச்செடிகளைச்சுற்றிக்களைஎடுத்துத்தண்ணீர்தேங்கக்குழிபறிக்கலாம்என்பனபோன்றவைதான். ”கூடஅவங்கரெண்டுபேரும்வராங்கஇல்ல?” என்றுகேட்டவளுக்கு “ஆமாம், ஆமாம்” என்றுபதில்சொல்லியவாறேவெளியில்வந்தேன். காலைநேரக்காற்றில்இருசக்கரவாகனத்தில்பயணிப்பதுமிகவும்சுகமாகஇருந்தது. மணிஏழாகியும்கூடசிலவீடுகளில்பெண்கள்நைட்டியுடன்வெளியில்வந்துவாசலுக்குத்தண்ணீர்தெளித்துக்கொண்டிருந்தனர். வாசலுக்குச்சாணம்போடும்பழக்கம்சுத்தமாகஇப்போதுபோய்விட்டது. கிராமங்களில்கூடதார்மற்றும்சிமெண்ட்சாலைகள்வந்துவிட்டதால்அங்கும்தண்ணிர்தெளிப்பதேவழக்கமாய்விட்டது. தவிரஇப்போதுமாடுகளேகுறைந்து விட்டதே? மேய்ச்சல்தரைகளெல்லாம்கட்டிடங்கள்ஆகிவிட்டன. பால்பாக்கெட்பழக்கமாகிவிட்டது. வேகமாககிரிக்கெட்மட்டையையும்ஸ்டம்ப்குச்சிகளையும்தூக்கிக்கொண்டுஎதிரேசிலசிறுவர்கள்ஓடிவந்தனர். வேகத்தைசற்றுக்குறைத்தேன். இவர்களுக்குப்பம்பரம், கிட்டிப்புள், போன்றவைஎல்லாம்தெரியவேதெரியாதுஎன்றுஎண்ணினேன். பழையபாரம்பரியவிளையாட்டுகள், உடை, உணவுமொழிஎல்லாமேமாறிவிட்டன. இதுஎங்கேபோய்முடியும்என்பதைநினைத்துப்பார்த்தால்அச்சமாகத்தான்உள்ளது. ’அவங்கரெண்டுபேர்’ என்றுஎன்மனைவிகுறிப்பிட்டவர்களில்ஒருவரானகதிரவன்வீட்டின்முன்னால்வண்டியைநிறுத்தினேன். வாசலில்முனைவர்கதிரவன்எனும்பெயர்ப்பலகைஅழகாகஇருந்தது. அவர்தான்எங்கள்இலக்கியஅமைப்பின்செயலாளர்; நான்தலைவர். சத்தம்கேட்டுவெளியில்வந்தவர் ”என்னபோலாமா?” என்றுகேட்டுவண்டியின்பின்னால்உட்கார்ந்தார். ”அவர்கிட்டபேசிட்டிங்களா?” என்றுகதிரவன்கேட்க ”பேசிட்டேன், அவர்வீட்டுவாசல்லவண்டிலேதயாராஇருப்பாரு” என்றுபதில்சொல்லியவாறேவண்டியைக்கிளப்பினேன். இப்போதுகதிரவன்கேட்டதுஎன்மனைவிசொன்னஅவங்கரெண்டுபேரில்இரண்டாவதுநபரானசிவராமன்என்பவர். தனியார்நிறுவனத்தில்பணியாற்றும்அவரும்நல்லஇலக்கியஆர்வமுள்ளவர். […]
மணக்கோலத்தில் கண்ட தன் மகன் இராமனுக்குமா முடி புனைவித்து மன்னனாக்க எண்ணம் கொண்டான் மாமன்னன் தயரதன். அமைச்சர் பெருமக்களும் அதனை ஏற்றனர். உடனே தயரதன் தன் குலகுருவான வசிட்டரை அழைத்து, ”இராமனுக்கு நல்லுறுதி வாய்ந்த உரைகளைக் கூறுவாயாக” என்றான். வசிட்டமுனிவன்இராமனைஅடைந்து, “ நாளை உனக்கு இந்த நானிலம் ஆளும் உரிமை வழங்கப்பட இருக்கிறது. எனவே நான் ஒன்று கூறுவதுண்டு உறுதிப்பொருள். நன்று கேட்டுக் கடைப்பிடி” என்று கூறி அரசன் கைக்கொள்ளவேண்டிய அறங்களை எடுத்துக் கூறுகிறான். வசிட்டன் […]
வளவ. துரையன் திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தில் ஆண்டு தோறும் குமரகுருபர சுவாமிகளுக்கு விழா எடுப்பார்கள். 1937- ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவிற்கு உ.வே.சா போயிருந்தார். அந்த மடத்தில் மாடுகளைப் பாதுகாத்துப் பராமரிக்க ஓர் இடையனை நியமித்திருந்தனர். மாடுகளைப் பற்றித் தான் அறியாதவற்றை அறிந்து கொள்ளலாம் என்று அவனிடம் உ.வே.சா பேச்சுக் கொடுத்தார். அவன் மாடுகளின் வகைகள், மாடுகளைப் பிடிக்கும் முறைகள், சுருக்குப் போட்டுக் காளைகளை அடக்குதல், ஆகியனவற்றைக் கூறினான். பிறகு மாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு போவதைப் […]