ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) அங்கம் -2 பாகம் – 18

This entry is part 21 of 41 in the series 8 ஏப்ரல் 2012

  ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara)  மூவங்க நாடகம்            (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 18 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா சார்லஸ் ஒரு முட்டாள் !  அடால்·பஸ் வெறும் பேச்சாளி !  ஸ்டீ·பன் ஒரு சோம்பேரி !  பார்பரா ஒரு பைத்தியக்காரி !  ஆன்ரூ நீ ஒரு சூது வர்த்தகன் !  இவை என் சொந்தக் கருத்துக்கள்.  […]

யானைமலை

This entry is part 20 of 41 in the series 8 ஏப்ரல் 2012

மதுரையே இங்கு கல்லாய் விறைத்து உயரமாய் படுத்திருப்பதை பார்க்க கோள்ளை அழகு. அந்த மத்தகம் பரந்த ஒலிம்பிக் மைதானமாய் கம்பீரமாய் காட்சி தரும். வெள்ளை வெயில் தினமும் குளிப்பாட்டும் சுகத்தில் அந்த‌ க‌ருங்க‌ல் கூட‌ கருப்பு வெல்வட் ச‌தைச்சுருக்க‌மாய் தும்பிக்கை நீட்டிக்கிட‌க்கும். சென்னை போகும் பேருந்துக‌ள் அதை உர‌சி உர‌சி செல்லும்போது அந்த‌ கிச்சு கிச்சு மூட்ட‌லில் பொசுக்கென்று அது எழுந்துவிடுமோ என்றும் ஒரு ப‌ய‌ம் வ‌ருவ‌துண்டு. இந்த‌ ஆண்யானைக்கு திருப்ப‌ர‌ங்குன்ற‌ம் மொக்கைக்க‌ல் ம‌லை ஒரு பெண்யானையாய் […]

தூக்கணாங் குருவிகள்…!

This entry is part 19 of 41 in the series 8 ஏப்ரல் 2012

ஜன்னலோர பிரயாணம்… துணைக்கு வருகிறதாம்… அடம்பிடிக்கிறது மழை..! இயற்கை..! —————————————————— கொன்றவர்களாலும் தின்றவர்களாலும் நிறைந்திருக்கிறது உலகம்..! மாறுமோ மனம்..! —————————————————— நசுக்கிக் கொன்ற குருதித் தடத்தின் மீது தான் சக்கரங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன… வாழ்க்கை.. ———————————————————- விரும்பும் வகையிலெல்லாம்.. விரும்பிய வண்ணத்தில் பூக்கள் மலர்வதில்லை… நிராசை..! ——————————————————- இறந்தகால ஞாபகங்கள் படிந்திருக்கும் துண்டுப் பொருட்கள் நிகழ்காலத்தை நடத்திச் செல்கிறது…! நினைவுகள்..! —————————————————— உறவில் சொந்தம் இறந்ததாய்….. துக்கம் அனுஷ்டித்தார்…அம்மா…! ஓ..!..தீபாவளி வருகிறதா?!.. ஏழ்மை…! —————————————————————— உலகமே உறைந்து போயிற்று […]

கடைசித் திருத்தம்

This entry is part 18 of 41 in the series 8 ஏப்ரல் 2012

மாரியம்மன் கோவில்தான் பொன்மலை ரயில்வே காலனிக்குள் இருக்கும் கடைசி பஸ் ஸ்டாப். ஆனால் பஸ்ஸைவிட்டு இறங்கிக் கோவில்பக்கம் நடக்காமல் நேராக வடக்குப் பக்கம் நடந்தால் வரும் மண் ரோட்டில் வலது புறம் திரும்பினால் இருக்கும் நான்கு வீடுகள் கொண்ட ப்ளாக்கில் கோடி வீடுதான் என் நண்பன் ராஜேந்திரன் வீடு. ராஜேந்திரனின் அக்காவும் என் அக்காவும் வகுப்புத் தோழிகள் என்பதால் அவன் வீட்டிற்கு அடிக்கடி கணக்கு நோட்டு, ரெகார்ட் நோட்டு என எதையாவது வாங்க என் அக்கா என்னை […]

குதிரை வீரன்

This entry is part 17 of 41 in the series 8 ஏப்ரல் 2012

பாட்டன் காலத்தில் ஊரின் மையத்தை தனக்கான இடமாக‌ ஆக்கிரமித்துக் கொண்ட வரலாறில்லாத‌ குதிரைவீர‌ன் இன்றும் முன்கால்கள் தூக்கிய குதிரையின் மீது அமர்ந்திருக்கிறான். கருத்த அவன் தலையை வெள்ளைப்படுத்தும் போட்டியொன்றில் காகமொன்று கண்ணிழந்தும் பருந்தொன்று இறக்கை இழந்தும் அவ‌ன் பாதத்தைச் சிவ‌ப்புப்ப‌டுத்தின. புதிதாய் அரசேற்ற ம‌‌ந்திரிக்கு குலப்பெருமை எழுத‌வென‌ வீதியெங்கும் அலைந்து திரிந்த‌வ‌ர்க‌ள் குதிரைவீரன் கதை பற்றி பலஆராய்வு நடத்தி சிலபுத்தகம் வரையலாயினர். இல்லாத வெற்றிகளை அவர்களின் பக்கங்கள் நிரப்பிக்கொண்டிருந்தன அவரவர் கற்பனைக்கும் வெகுமதிக்கும் தக்க‌வாறு. பால‌த்தின் நிழ‌ல் […]

சோபனம்

This entry is part 16 of 41 in the series 8 ஏப்ரல் 2012

எங்கெல்லாம் தேடுவீர் நீவிர் கவினை, அம்மங்கையே உம் பாதையாகவும் உம் வழிகாட்டியாகவும் இல்லாதபோழ்து எங்கனம் அவளை கண்டுகொள்ளப் போகிறீர்? உம் பேச்சுக்களின் நெசவாளியாக அவளே இருந்தாலொழிய, எங்கனம் அவளைப்பற்றி பேச இயலும்? “கவின் என்பது அன்பும், சாந்தமுமானது” என்பான், நொந்தவனும், காயப்பட்டவனும். “தம் சாதனை குறித்த பெருமையுடன் மெல்லிய நாணங்கொண்டு நம்மிடையே நடமாடும் இளம் தாயைப் போல” உணர்வுவயப்பட்டவனோ, “அழகென்பது வல்லமையானதும், அபாயமானதுமான ஓர் பொருள்” என்பான். ”கொந்தளிப்பைப்போன்று அவள் பூமியையே நமக்குக் கீழும், வானமதை நமக்கு […]

Behind the Beautiful Forevers- ’கேதரின் பூ’வின் புத்தகத்தை முன்வைத்து

This entry is part 15 of 41 in the series 8 ஏப்ரல் 2012

– அருணகிரி ”What was unfolding in Mumbai was unfolding elsewhere, too. In the age of global market capitalism, hopes and grievances were narrowly conceived, which blunted a sense of common predicament. Poor people didn’t unite, they competed ferociously amongst themselves for gains as slender as they were provisional. And this undercity strife created only the […]

பஞ்சதந்திரம் தொடர் 37 38 – சோமிலகன் என்ற நெசவாளி

This entry is part 14 of 41 in the series 8 ஏப்ரல் 2012

ஒரு நகரத்தில் ஒரு நெசவாளி இருந்தான். அவன் பெயர் சோமிலகன். விதவிதமான வர்ணங்களிலே அரசர்களுக்கேற்ற அரிய அழகிய ஆடைகளையே அவன் எப்போதும் நெய்து கொண்டிருந்தான். எவ்வளவோ பாடுபட்டுப் பார்த்தபோதிலும், உணவுக்கும் துணிக்கும் வேண்டியதற்கு மேலாக அவனால் பணம் சம்பாதிக்க முடியவில்லை. மோட்டா ரகத் துணிகளை நெய்த இதர நெசவாளிகள் பணத்தில் புரளுவதையும் அவன் கண்டான். தன் மனைவியிடம், ‘’அன்பே அவர்களைப் பார்! அவர்கள் மோட்டா ரகத் துணிதான் நெய்கிறார்கள். என்றாலும் பணத்தைக் குவித்தவாறு இருக்கிறார்கள். இந்த ஊர் […]

சங்ககிரி ராஜ்குமாரின் ‘ வெங்காயம் ‘

This entry is part 13 of 41 in the series 8 ஏப்ரல் 2012

சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு, புகழ் நட்சத்திரங்களின் படங்கள் மத்தியில் சிக்கி, நசுங்கி, வெளியேறிய படம். முரணாக, படம் சம்பந்தப்பட்ட அனைவரின் கண்களிலும் கண்ணீர் வரவழைத்த வெங்காயம்! இயக்குனர் சேரன் அதைத் துடைத்து மறு வெளியீடு செய்திருக்கிறார். அவருக்குப் பாராட்டுக்கள். காவல் அதிகாரி அன்புமணிக்கும் தமிழுக்கும் காதல். கிராமப்புறங்களில் திடீரெனக் காணாமல் போகும் போலிச்சாமியார்களைக் கண்டுபிடிக்கும் பணி அன்புக்கு. சாமியார்களைக் கடத்த கையாண்டிருக்கும் உத்திகளும் கிராமத்துப் பின்னணியிலேயே. அன்புமணி, கடத்தி கட்டி வைத்திருக்கும் சாமியார்களைக் கண்டுபிடிக்கும் முன்பே, […]

ஒரு வேண்டுகோள்:உதவிக் கரங்களை எதிர்பார்க்கும் ஞானாலயா

This entry is part 12 of 41 in the series 8 ஏப்ரல் 2012

கடந்த மார்ச் மாதப் பிற்பகுதியில் ஏறத்தாழப் பத்து நாட்கள் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் இலக்கம் 6, பழனியப்பா நகரில் உள்ள ஞானாலயா ஆய்வு நூலகத்தில் அரிய புத்தகங்கள், பழம் பெரும் இதழ்களுடன் உறவாடி மகிழ்ந்து மிகுந்த பயன் அடைந்தேன். அங்கிருந்து பிரிய மனமின்றிப் பிரிந்து வந்தேன். ஒரு நூற்றாண்டுக்கும் முந்தைய அரிய நூல்கள், இதழ்கள் தொடங்கிச் சமீபகால அனைத்து சிற்றிதழ்களும் முக்கிய நூல்களும் ஒருங்கே ஒரே கூரையின் கீழ் படிக்கக் கிடைப்பது கிடைத்தற்கரிய வாய்ப்பு. ஆய்வாளர்களுக்கென்றே அமைந்த இந்நூலகத்தில் […]