பால்

This entry is part 9 of 16 in the series 6 மார்ச் 2016

  அழகர்சாமி சக்திவேல்   கோமியம் குடிக்கும் சமூகம் பசும்பாலில் மட்டும் தெய்வத்தைக் கண்டது. கொதிக்கிறான் திராவிடன்..குமுறுகிறான் கசப்பால்   எருமைப்பால் என்ன பாவம் செய்தது ஆட்டுப்பால் ஏன் ஆண்டவனுக்குப் பிடிக்கவில்லை கழுதைப்பால் வெறும் மருந்துக்கு மட்டும்தானா? திராவிட வேப்பம்பாலில் திணறுகிற மதக்கூட்டம்.   எருமைப்பால் உற்பத்தியில் எம்நாடு முதல் இடம்.. எருமைக்கறி ஏற்றுமதியிலும் எம்நாடு முதல் இடம்.. இருந்தும் பயன் இல்லை… எருமையின் பால் இன்றளவும்.எமனுக்கு மட்டுமே கரிசனம் கோபாலன் குழல்கேட்க கொடுப்பினை பசுவிற்கே.   கருப்பால் […]

“போந்தாக்குழி”

This entry is part 10 of 16 in the series 6 மார்ச் 2016

“வெங்காச்சம் இருக்கானா?” – பேருந்தை விட்டு இறங்கியதுமே ஆர்வமாய் நான் கேட்ட முதல் கேள்வி இதுதான். “அப்புறம் உறாலாஸ்யம்னு ஒருத்தர் இருப்பாரே….அவர் இருக்காரா?” ஒன்றைத் தொடர்ந்து உடனே வந்த இன்னொன்றினாலும் அவனிடம் எந்தச் சலனமும் இல்லை.     அவனே மறந்து விட்டதான ஒன்றைப்பற்றி யோசிக்கிறானோ? “என்னடா, பதில் சொல்லு, பேசாம இருக்கே?” முத்துச்சாமி வாயைத் திறந்தான். “யாரையெல்லாம் நாங்க நினைச்சுக் கூடப் பார்க்கிறதில்லையோ அவுங்களைப்பத்தி சட்டுன்னு நீ கேட்டவுடனே முதல்ல அந்த முகங்களை ஞாபகத்துக்குக் கொண்டு வர […]

தமிழினியின் சுயசரிதை: “ ஒரு கூர்வாளின் நிழலில் “

This entry is part 11 of 16 in the series 6 மார்ச் 2016

  நடேசன் இளம் வயதில் வெதரிங் ஹைட் ஒரே நாவலை தந்துவிட்டு இறந்த எமிலி புரண்டே ஆங்கில இலக்கியத்தில் முக்கியமான இடம் வகிக்கிறார் (Wuthering Heights – Emily Brontë’) அதுபோல் தமிழினியின் சுயசரிதையும் ஈழத் தமிழர்களால் பலகாலம் பேசப்படும். அரசியல் போராட்டத்தை இப்படி எடுத்துக் கொண்டு போகக்கூடாது என்பதோடு நமக்கு தவறுகளைப்புரிந்து கொள்ளும் பாலபாடமாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன் அரசியல் முப்பது வருடகால தமிழ் விடுதலைப் போராட்டத்தை மகோன்னத போராட்டமாகவும் அதன் தலைவரை கடவுளுக்கு நிகராகவும் வைத்து […]

சொல்வது

This entry is part 12 of 16 in the series 6 மார்ச் 2016

    கோடிகளில் மொழிந்தேன் லட்சக்கணக்கில் எழுதினேன் சொற்கள்   சொற்கள் வழி சிந்திப்பதில் எத்தனை கர்வம் எனக்கு   பதில்களாய் கேள்வியின் எதிரொலியாய் எல்லாச் சொல்லும்   பதிலாகச் சொல்லப் படாத அசலான சொல்லை நான் எப்படி அறிவேன்?   எதிர்வினையாகாததாய் சுய சிந்தனை இதுவென்று எப்படி இனம் காண்பேன்?   அசலாயொரு தேடல் மௌனமாய்த் தொடர்வதையே காண்கிறேன்   தேடலில் வழிப்பட்ட சொற்கள் விடுதலையை சொற்களின் வழிப்பட்ட தேடல் தளைகளைப் பொருளாய்க் கொண்டிருக்க   […]

நீருக்குள் சென்னை காருக்குள் என்னை…(32மணிநேரம்)

This entry is part 13 of 16 in the series 6 மார்ச் 2016

மழையில் மூழ்கிய சென்னையில் இருந்தவன் எழுதுகிறேன். நவம்பர் 30 தேதி விழிகள் பதிப்பகத்தின் திருநடராஜன் அவர்களுடன் தியாகராயர் நகர், தணிகாசலம் சாலையில் இருக்கும் Hi-cure acupuncture centre மருத்துவர் எம்.என் சங்கர் அவர்களைப்பார்த்துவிட்டு, முத்துவிழாகண்ட கவிஞர் நேர்வகிடெடுத்த நிறைநிலா ஈரோடு தமிழன்பன் அவர்களைப்பார்த்து மாலை அணிவித்து,வாழ்த்துகூறி, அவருடைய வாழ்த்தையும் பெற்று விடைபெற்றேன். மழை பெய்துகொண்டிருந்தது. மதிய உணவைமுடித்து டிஸ்கவரி புக்பேலஸ் வேடியப்பனுடன் உரையாடி, ஓய்வுபெற்ற கூடுதல் வேளாண்மை இயக்குநர் கே.எம் இராமானுஜம் அவர்களையும் சந்தித்து திருவான்மியூர் சித்த […]

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் படத்தொகுப்பு பயிற்சிப் பட்டறை

This entry is part 14 of 16 in the series 6 மார்ச் 2016

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் படத்தொகுப்பு பயிற்சிப் பட்டறை பயிற்சியளிப்பவர்: படத்தொகுப்பாளர் B. லெனின் நாள்: 25, 26 & 27, March 2016. (வெள்ளி, சனி, ஞாயிறு), வெள்ளிக்கிழமை புனித வெள்ளி என்பதால் அரசு விடுமுறை) இடம்: சென்னை, நேரம்: காலை பத்து மணி முதல் பய்ரிசிக் கட்டணம்: 4500/- (மதிய உணவு உட்பட) கலந்துக்கொள்ளும் நண்பர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். நண்பர்களே இந்தியாவின் தலைசிறந்த படத்தொகுப்பாளரான B. லெனின் தமிழ் ஸ்டுடியோவிற்காக மூன்று நாள் படத்தொகுப்பு பயிற்சி […]