ஜோதிர்லதா கிரிஜா சில ஆண்டுகளுக்கு முன்னால், பிரபல எழுத்தாளரும் (தற்போது ஓய்வு பெற்றுள்ள) அன்றைத் தமிழகக் காவல்துறை உயர் அலுவலருமான ஒருவர் போரில் வெற்றி பெறும் ராணுவத்தினர் தோற்ற நாட்டின் பெண்களை வன்னுகர்வு செய்வது பற்றித் தமிழகத்தின் வார இதழ் ஒன்றில் ஒரு கேள்வியை எழுப்பி யிருந்தார். அவரது கேள்விக்கு அதன் தலைமை உதவி ஆசிரியர் கீழ்க்கண்டவாறு பதில் அளித்திருந்தார்: “முதல் வேலையாக (தோற்ற) அந்நாட்டுப் பெண்களைப் பாலியல் பலாத்காரத்துக்கு (வெற்றி பெற்ற நாட்டு) ஆண்கள் உட்படுத்துவது […]
நாகபிரகாஷ் டேவிட் ஜி மேயர்ஸ் என்ற சமூக உளவியல் அறிஞர் தன்னுடைய மனித இனத்தின் மகிழ்ச்சியைப்பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரைத் தொகுப்பின் உபதலைப்புக்கான தேடலைப்பற்றி ஒரு இதழில் குறிப்பிட்டிருந்தார் “மனிதர்களை எவை மகிழ்விக்கிறது? – என்பதை பயன்படுத்தலாமா என்று ஆசிரியர் கேட்டார். ஆனால் அது இந்த புத்தகமும் சரி, எந்த புத்தகமும் சரி பதில் தரமுடியாத கேள்வி என்றேன். நாம் அறிந்ததெல்லாம் சாதாரணமாக எது மகிழ்ச்சியோடு சம்மந்தப்பட்டிருக்கிறது என்றும் எது மகிழ்ச்சியைத் தரக்கூடும் என்பதுதான். அதனால் அந்தத் தலைப்பு – […]
2. பட்டாம்பூச்சிக் காதலர்கள் ஜெஜியாங் மாநிலத்தின் சாங்யூ நகரம். அந்நகரத்தின் செல்வந்தர்களில் ஒருவர் சூ. சூ குடும்பத்தினர் நகரின் முக்கிய பிரமுகர்களுக்கு பரிச்சியமான குடும்பமும் கூட. சூ யிங்தாய் அக்குடும்பத்தில் ஒன்பதாவது குழந்தை. குடும்பத்தின் ஒரே பெண் குழந்தை. அவள் மிகவும் சாதுரியமான பெண். எப்போதும் கற்க வேண்டும், பல்வேறு விசயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகக் கொண்டவள். அவளுக்கு எப்போதுமே பள்ளி சென்று பயில வேண்டும் என்ற ஆர்வம் இருந்து கொண்டேயிருந்தது. ஆனால் […]
சிறகு இரவிச்சந்திரன் மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன், துல்கர் சல்மானின் தமிழ் திரைப் பிரவேசமாக அமைந்துள்ள படம். கா.சொ.எ. வெற்றிக்குப் பின், பாலாஜி மோகன் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இயக்கிய ‘ வாயை மூடி பேசவும்’ அதிக கீறல்கள் இல்லாமல் தப்பித்திருப்பதற்கு பாராட்டுக்கள். மலையாளப்படங்களின் பரிச்சயம் இல்லாத தமிழ் ரசிகனுக்கு, துல்கரின் நீள் சதுர முகமும், கோணல் சிரிப்பும் கொஞ்சம் அசுவாரஸ்யமாகப் படலாம். ஆனால் அட்சர சுத்தமாக ( மலையாள வாடை இல்லாமல் […]
முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 2 மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ்
அம்பல் முருகன் சுப்பராயன் சிறுவயதில் சளி, காய்ச்சல் வந்தால் எங்களூர் மருத்துவர் காசாம்பு எழதி தரும் அரிசி திப்பிலி, கண்ட திப்பிலி, பனங்கல்கண்டு, ஆடாதொடா இலை, துளசி, சித்தரத்தை, தேன், கருப்பட்டி ஆகியன வாங்கி வருவார் அப்பா.. கியாழம் செய்து கொடுப்பார் அம்மா. ரஸ்க் ரொட்டியை பாலில் நனைத்துத் தருவாள் அக்கா.. உடம்பு முடியாத செய்தி கேட்டு அக்கா பாட்டி இட்லியும் திருவாட்சை இலை துவையலும் ஊட்டுவாள்.. மாணிக்கவள்ளி அத்தை மிளகு ரசம் செய்து தருவார்.. இன்று […]
நழுவிப் போனவைகள் அரைத் தூக்க இரவில் தானாய்த் தவழ்ந்து கருத்தும்,கோர்வையுமாய் வார்த்தைகள் பிசகற்று உதித்து வரும் ஒரு கவிதை எழுந்தெழுதும் சோம்பலினால் மறக்காதென்ற நம்பிக்கையில் தூக்கத்துள் புதையுண்டு காலையில் யோசித்தால் ஒரு வார்த்தை கூட நினைவின்றி தவறி நழுவி எனைவிட்டுப் போயிருக்கும் என் கவிதை அக்கவிதை பிறிதொருநாள் வெளிவந்து விழுந்திருக்கும் அதில் வேறெவரோப் பெயரிருக்கும்.. கிளிமரம் உச்சிக் கிளைகளில் வசித்தன கிளிகள்தூரம் பறந்து தேடித் தின்னதேவையற்றிருந்ததுஅவற்றிற்கென்றும்வேண்டிய நேரம்அம்மரக் கனிகள்பறத்தலென்பதுமரம் சுற்றி மட்டும்ஆட்டமும், பாட்டமும்காதலும் கூடலும்சகலமும் அங்கே கட்டியக் கூட்டுள்முட்டையும் பொரிப்பும்வளரும் […]
கணேஷ் . க மிகுந்தமனவருத்தம், தேவியுடன்சண்டை, கோபம்கொண்டுசீக்கிரமேஅலுவலகம்விட்டுவீட்டுக்குபோய்விட்டாள், சண்டைகள்இப்போதெல்லாம் சகஜம்ஆகிவிட்டிருந்தது, போகும்வழியில்போன்செய்யவில்லை, நான்அனுப்பியகுருஞ்செய்திகளுக்குமட்டும்விடைவந்துசேர்ந்தது, எப்படியும்போனில்அழைப்பால்என்றுதெரியும், இதைநம்பிக்கைஎன்றுகொள்வதா?, இல்லை, வேறுஏதோஒருதிமுருஎனக்குள்என்றேபட்டது, நான்அழைப்பேன்என்றுஎதிபார்திருப்பாள், நான்அழைக்கவில்லையே, சண்டைக்கு காரணம் நான் இல்லை என்றேபெரும்பாலும்நம்புவேன். இந்தநம்பிக்கையும்இன்னொருசண்டைக்குவித்திடும்என்றுஎண்ணிசிலசமயம்நானேஅழைத்துசண்டையைவளர்த்தகதைகளும்உண்டு. அதுஒருபக்கம்இருக்கட்டும், ஏன்சண்டைவருகிறதுஎன்றுஆராய்ந்தால்ஒன்றும்பெரிதாய்தோன்றாது, வெறும்சிகரெட்டுக்கு ஆகும்செலவுதான்மிச்சம். ஆகசண்டையில்தான்என்காதல்வாழ்க்கைபயணிக்கிறது, இந்தஉறவுஒத்துவராது, பிரிந்துவிடுவோம்என்றுவெறும்வாய்மொழிகள்பொழிந்தேஇரண்டுவருடங்கள்கடந்துவிட்டோம். இதுவும்காதல்தானா? இதுகூடவாகாதல்? இதுகாதலா? என்றபலகேள்விகளுக்குஇன்றளவும்இருவரும்சேர்ந்தேவிடைதேடிக்கொண்டிருக்கிறோம். பெரும்பாலும்சண்டையால்ஏற்படும்டென்ஷன்நானேஉருவாக்கிகொள்கிறேனோ? என்றுதோன்றும், ஏதோஒருசாக்குவேண்டும்சிகரெட்பற்றவைக்க, என்றுஎண்ணுவேன். காதல்துளிர்த்தகாலங்களில்தேவியின்கண்ணில்நீர்பார்த்தஉடனேசமாதானம்செய்யமுற்படுவேன், ஏனோஇப்போதெல்லாம்அப்படிதோன்றவில்லை, மாறாகபெண்களின்கண்ணீர்பெரும்பாலும்பொய்என்றேஎண்ணதோன்றுகிறது, காரியம்சாதிக்கவேகண்ணீர்ஆயுதமாகிறதுபெண்களுக்கு, “எவ்வளவுஅழகாநடிக்குறாஇவ”, என்றுஅவள்அழுகையைபார்த்துகொண்டிருக்கிறேன், விளைவுசண்டையின்அடுத்தகட்டம்போகிறோம். உண்மையைஅறிந்துகொள்வதுஉறவுகளில்பிழைதான்போலும். அவள்அழுகைக்குஆட்பட்டுவிட்டால்சண்டைமுடிந்துஒருமுத்தமோஅல்லதுசிறியஅளவிலானஒருஊடல்கூடல்என்றுஏதாவதுபரிசுகிடைக்கும். உண்மை,தெளிவுடன்இருக்கிறேன்என்றுபெருமைகொள்வதா? பரிசுபறிபோனதேஎன்றுவருத்தம்கொள்வதா?, சண்டைக்குபிறகுபரிசாககிடைக்கும்காமம்இன்பம்தான். மனுஷன்தன்காமவேட்கைக்குஎப்படிஎல்லாம்அழகுசேர்த்திருக்கிறான்!, இந்தஉண்மைநிச்சியம்என்மனதில்பதியகூடாது, […]
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி கண்விழிக்கச் சோம்பல் பட்டேன். “மம்மி எழுந்துரு, மம்மி எழுந்துரு” என்று இரு முறை அழைத்தாள் மகள் அருள்மொழி. இரு முறைதான் அழைத்ததாக நான் எண்ணிக் கொண்டிருந்தேன். அந்த இரு அழைப்புதான் என்னை விழிப்பு நிலைக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். முன்பு வசித்த வீட்டை விட இரு மடங்கு தூரம் இப்போது உள்ள வீட்டிற்கும் அலுவலகத்திற்கும். கைகள் ஓய்விற்காகக் கெஞ்சுவது புரியத்தான் செய்தது. இன்று அலுவலகம் செல்ல வேண்டும். நேற்று “உழைப்பாளர் தினம்” போல் விடுப்புதானே என்று இன்னும் கொஞ்ச நேரம் என்று முடங்கி […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பூமியின் காந்த துருவங்கள் புதிராய்த் திசை மாறும் ! ஆமை வேகத்தில் வட துருவம் தென் துருவ மாகும் ! பூமியின் சுழற்சி நின்று எதிர்த் திசையில் ஓடுமா ? பரிதியின் உதய திசை அப்போது கிழக்கா ? மேற்கா ? உயிரினம், மனித இனம் என்ன வாகும் ? மின்காந்த இயக்கங்கள் பூமியில் தன்னியல் மாறுமா ? சூழ்வெளி மண்டலம் முறிந்து பாழ்வெளி ஆகுமா ? […]