எனது இரண்டாவது அணுசக்தி நூல் “அணுவிலே ஆற்றல்” என்னும் பெயரில் இரண்டாம் பதிப்பாக இப்போது வெளி வந்துள்ளது. அதை முதன்முதல் அச்சிட்டு வெளியிடுபவர் திரு. வையவன், தாரிணி பதிப்பகம், சென்னை. இந்த நூலின் பெரும் பகுதித் தகவல் 1960 முதல் 1962 வரை மஞ்சரி மாத இதழ்களில் வெளியானவை. இதில் உள்ள கட்டுரைகளில் அணுக்கள், பரமாணுக்கள், மூலகங்கள், அணுசக்தி, கதிரியக்கம் ஆகியவற்றின் அடிப்படைகள் பற்றியும், கதிரியக்கத் தீங்குகள் பற்றியும் ஓரளவு விளக்கங்கள் காணலாம். மற்றும் அணுமின் நிலையங்கள் […]
சுப்ரபாரதிமணியன் “இப்போ எம்மூஞ்சியை கண்ணாடியிலே பாக்கணும் போல இருக்கு” சொல்லிக் கொண்டான் பஞ்சவர்ணம் திருப்தியாகச் சாப்பிட்டிருக்கிறோம். களைப்பு முழுமையாகப் போய்விட்டது. இந்த நிலையில் முகத்திற்குப் பிரகாசம் வந்திருக்கும். கண்ணாடியில் முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டாள் பஞ்சவர்ணம் “என்னவோ திடீர்னு விருந்து கெடச்ச மாதிரி.” முதலில் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. யாராவது பெயரைக் கேட்டால் பஞ்சவர்ணம் என்று சொல்கிறபோதே ஒரு வகைத் தாழ்வு மனப்பான்மையால் தலையைக் குனிந்து கொள்வது போலாகிவிடுகிறது அவளுக்கு. கிராமத்துப் பெயராகத்தான் இருக்கிறது. […]
Dear Sangam Members and well-wishers: Sangam on line ticket sales site will be closed at Midnight on Thursday November 31st. We will have limited tickets available at the registration desk. If you are travelling from out of state and have not purchased the tickets by Thursday, please contact event organizers before you start to confirm […]
சீன தமிழ் வானொலி பொன்விழா போட்டி அமெரிக்க வாழ் தமிழருக்கு 2 முதல் பரிசுகள்! சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் துவங்கியது. 1963-2013 ஆகஸ்ட் மாதத்துடன் 50 ஆண்டுகள் நிறைவெய்துவதைச் சிறப்பாகக் கொண்டாடும்வகையில் சீன வானொலித் தமிழ் பிரிவு பல்வேறு போட்டிகளை நடத்தியது. இந்தப் போட்டிகளில் உலக வாழ் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் ஆர்வமுடன் பங்கேற்றனர். பொன்விழா கட்டுரைப் போட்டி மற்றும் ஊடக போட்டிகள் பொது அறிவுப் போட்டி என்று […]
14. மாய லோகத்தின் அறிமுகம் பணம் இருந்த தைரியத்தில் உடனே தந்தைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டான். தன்னுடைய இயலாமையைச் சொல்ல வெட்கமாக இருந்தது. அதனால் மறுபடியும் பொய் சொல்லத் தீர்மானித்தான். “அப்பா நான் அங்கே வரப் போகிறேன்..” “அப்படியா.. ரொம்ப சந்தோஷம். ஒப்பந்தம் முடிஞ்சிட்டதா?” என்றார் ஆவலுடன். “ஊம்.. முடிஞ்சிட்டது. இருந்த கொஞ்ச நாள்ல்லயே.. நான் ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சி, நிறைய சம்பாதிச்சேன். கொஞ்ச பணத்த சேர்த்தும் வைச்சிருக்கேன். அதனால உங்களப் பார்க்க வரலாம்ன்னு இருக்கேன்” என்று […]
பாவண்ணன் ”கேவலம் கேவலம்” என்று தலையில் அடித்துக்கொண்டார் முருகேசன். மலைக்காற்றில் அவருடைய நரைத்த தலைமுடி ஒருபக்கமாகப் பறந்தது. சட்டை ஒருபக்கம் உடலோடு ஒட்டிக்கொள்ள இன்னொருபக்கம் இறக்கை விரித்துப் பறப்பதுபோலத் துடித்தது. அவர் எதையும் கவனித்ததாகவே தெரியவில்லை. அவர் கண்களில் மெல்லமெல்ல ஒரு துக்கம் தேங்கி நின்றது. ஒருகணம் மூக்கை உறிஞ்சிக்கொண்டார். ”சரி விடுங்க முருகேசன், நாட்டுல இந்த மாதிரி இன்னிய தேதிக்கு மாசத்துக்கு ஒரு நூறு கொலயாச்சிம் நடக்குது. ஒன்னு ரெண்டுதான் பத்திரிகையில வருது. ஒன்னொன்னுக்கும் தலயில […]
– வெ.சந்திராமணி அதிகாலை நான்கு மணியில் இருந்து தன்னந்தனியாக கிச்சனுக்கும் ஹாலுக்கும் நடையாய் நடந்து கொண்டிருந்த சந்திராவுக்கு தூக்க கலக்கம், கண் எரிச்சல், கோபம் எல்லாம் ஒன்றாய் கொழுந்து விட்டு எரிந்த கொண்டிருந்தது. காரணம் இரவு தூங்கவே இல்லை . குழந்தை சீனு உறங்க 2 மணி ஆகிவிட்டது. ‘ஒரு நாளா, இரண்டு நாளா… எட்டுமாசமா இதே கதைதான்! நிம்மதியா ஒரு நாள் தூங்க முடியுதா… என்ன வரம் வாங்கி வந்திருக்கேனோ! என்ன செய்வது என் தலையெழுத்து… […]
வளவ. துரையன். சங்க காலத்தின் பெருமையை விளக்கும் எட்டுத் தொகை நூல்களுள் அகநானூறும் ஒன்றாகத் திகழ்கிறது. அகநானூறு முழுதும் தலைவனும், தலைவியும் உலவும் அகத்திணைச் செய்திகளே விரவிக் கிடக்கின்றன என்றாலும் பண்டைத் தமிழரின் செல்வச் செழிப்பையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் சில பாடல்கள் காட்டுகின்றன. பண்டை வணிகமுறை பண்டம் மாற்று முறையிலேயே அமைந்திருந்தது. தன்னிடம் அதிகமாக உள்ள ஒரு பொருளைத் தந்து அதற்கு மாற்றாக தனக்குத் தேவையான வேறு ஒரு பொருளைப் பெற்றுக் கொள்வதே பண்டம் மாற்று […]
புகழ் பெற்ற ஏழைகள் (முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 31.சர்வாதிகாரியாக மாறின ஏழை என்ன உலகம்…நல்லது சொன்னா ஏத்துக்க மாட்டேங்குறாங்க… கெட்டது சொன்னா ஒடனே ஏத்துக்குறாங்க…..புரிஞ்சுக்கவே மாட்டேங்குறாங்க…அடடே என்ன ஏதேதோ..சொல்லிப் புலம்பிக்கிட்டே வர்ரீங்க…இங்க பாருங்க புலம்பாதீங்க..உலகம் இப்படித்தான் இருக்கும்…..நல்லது சொன்னா யாரு கேக்குறாங்கறீங்க..ஒருத்தரும் கேக்கமாட்டாங்க…எல்லாம் பட்டாத்தான் புத்தி வருது..கடைசி நேரத்துல புத்தி வந்து என்ன செய்ய…எல்லாம் […]
அன்புடையீர், வணக்கம். சொல்வனம் இணைய இதழின் 94வது இதழ் இன்று வெளியாகியுள்ளது. இதழில் வெளிவந்துள்ள படைப்புகள்: 1.அனுபவக் கட்டுரை /ரசனை நாக்கு – சுகா 2.புத்தக அறிமுகம் அதிகாரமெனும் நுண்தளை – ஜெயமோகனின் வெள்ளையானை – நரோபா 3.அரசியல்/ தொழில்நுட்பக் கட்டுரை ஒபாமாகேர் கோளாறு பதிகம் – பாஸ்டன் பாலா 4.அறிவியல் கட்டுரை நேரம் சரியாக – பகுதி 2 – ரவி நடராஜன் 5.பொருளாதாரக் கட்டுரை ஆதாரமற்ற பொருளாதாரம் – விக்கி 6.அறிவியல் சிறுகதை ஏற்கனவே, எப்போதும் – கஸ்தூரி சுதாகர் 7.உலகச் […]