This entry is part 25 of 31 in the series 4 நவம்பர் 2012

மு.கோபி சரபோஜி
செருப்பை
எங்கு மறைவாய் வைப்பது?

அர்ச்சனையை

யார் பெயருக்கு செய்வது?

உடைக்க வாங்கிய தேங்காய்
எப்படி இருக்கப்போகிறது?

தட்டோடு நிற்பவர்களுக்கு தர
எவ்வளவு சில்லரை இருக்கிறது?

இப்படியான குழப்பங்களோடு
நிம்மதி தேடி
சந்நிதி நுழைந்ததும்
அர்ச்சகரின் குரல் ஒழித்தது

“நடை சாத்தி
நாழியாயிற்று” – என்று!

மு.கோபி சரபோஜி
சிங்கப்பூர்.
Series Navigationஉல(தி)ராத காயங்கள்வாழ நினைத்தால்… வீழலாம்…!