This entry is part 16 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

எஸ். ஸ்ரீதுரை     

துப்பாக்கிச் சத்தம் பீரங்கி வெடியோசை

அடுத்த நொடிக்குள் ஆயிரம் சாவென்று

வான்மழை பொய்த்த வாய்க்கரிசி பூமியின்

குண்டுமழையினின்று மீண்டாகிவிட்டது.

தனிவிமானத்திலிருந்து தரை இறங்கியாயிற்று….

மறுபடியும் அதேமுகங்கள் –

முறைக்கின்ற மாமியார்;

குவார்ட்டரே வாழ்க்கையென

குடிக்கின்ற புதுக்கணவன் அல்லது

பழைய காதலன்;

சுகமெதுவும் பார்த்ததில்லை;

சூல்கொள்ளவும் மனமில்லை;

இன்னொரு வாய்ப்பு….?

அது ஆப்கானாயிருந்தாலும் சரி….

**** **** **** ****

Series Navigationஆகஸ்ட் 15, துபாயில் இந்திய சுதந்திர தின விழாவினையொட்டி சிறப்புக் கவியரங்கம்முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​  நெடுங்கதை​)   படக்கதை – 16