This entry is part 2 of 6 in the series 22 மார்ச் 2026

                        —வளவ. துரையன்                                              

எதிர்வீட்டுப் பலாமரத்தை

எதிர்நோக்கி இருந்தேன்

ஆயுத எழுத்து போல்

அதில் மூன்று காய்கள்

எங்கிருந்தோ வந்த

ஒரு செம்போத்து

ஒரு காயில் உட்கார்ந்தது

அத்தி பூத்தாற்போல

கோடையின் பெருமழையாய்

செம்போத்து இங்கு தோன்றும்

உட்கார்ந்த அது இப்போது

என்னையே பார்த்தது

அதன் முறைப்பு

மிகவும் பயமாயிருந்தது

அதை நானும் கவனமாய்

பார்க்காதது போலப்

பார்க்கத் தொடங்கினேன்

இப்பொழுது திடீரென

ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து

மற்றொரு காயில் அமர்ந்தது

செம்போத்தின் கவனம்

திசை திரும்பியது

சிட்டுக்குருவி கத்தியது

செம்போத்து பறந்தது

நானும் திரும்பினேன்

Series Navigation2026 – எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது – விருது பெறும் எழுத்தாளர்மழை புராணம் : 24  : வெறுப்பின் குடை