This entry is part 3 of 9 in the series 12 ஜூலை 2026

மழையில் நனையும் பொம்மைகள்

சட சடவென மழைதூற்றல் ஆரம்பித்துவிட்டது
யானையை ஏந்தி ஓடுகிறான் ஒருவன்
இன்னொருத்தியோ
ஒரு விரலில் மலை தாங்கிய
ஆயர்பாடிக் கண்ணனை வாரி ஓடுகிறாள்
பிடித்துக் கொண்ட மழையில்
ஒன்றுமற்றுப்
கரையப் போகும் பொம்மைகள் அவற்றை
மண்ணாகப் போகும் ஒன்றுமற்ற மனிதர் சுமந்து ஓடுவானேன்!
பரபரத்து எங்கோ குடிசையில் நுழைவானேன்
அதுவும் தப்பித்து விடுவதான இடம் ஒன்று
இருப்பதாய் நினைத்த இடத்திற்கு ஓடும் மனிதர்கள் குறித்து
பொம்மைகள் ஒன்றும் சொல்வதில்லை.

**

Series Navigationபுக்கட்–ஜேம்ஸ் பாண்ட் தீவுக்கு அப்பால்துணை