நவீன செப்பேடு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 14 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

குணா


கேட்டு பார்த்ததுண்டு

அகழ்ந்ததையும் கேட்டதுண்டு

மூதாதோர் எழுதியதை

பானையின் சில்லுகளை

செங்கற் செதிலுகளை

தாழி கூட்டங்களை

தடுமாற்ற எழுத்துகளை

சிக்கி முக்கி தேடி நின்றார்

பத்திரமாய் மூலம் கண்டார்

அற்புதங்கள் சொல்லி நின்றார்

கதைகள் பலவும் சொன்னார்

அடுத்து வந்தவரோ

காகிதக் குவியல்களை

காணாமல் செய்திட்டார்

அத்தனையும் மரமென்றார்

நானெழுத தலைப்பட்டேன்

பதிப்பதற்கு கல்லும் இல்லை

எழுதி வைக்க ஓலையில்லை

மரம் தந்த காகிதமில்லை

சில்லுப் புரட்சியின் சிப்பென்றார்

கையடக்க செப்பேடு

நூலகத்தை கொள்வதோடு

வரலாறும் உள்ளடக்கும்

இன்று

மண்ணினில் ஒன்றாத ஈ வேஸ்ட் டென்றார்

நாளை என் எழுத்து என்னாகும்

மண்ணால் உருவான கூகுள் கோப்பா

வலைதளத்தில் சுற்றிவரும் வரையறை கோடா

  • குணா (எ) குணசேகரன்
Series Navigationசெவல்குளம் செல்வராசு கவிதைகள்பேச்சுப் பிழைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *