08.12.2013 ஞாயிறு காலை 9 மணி அளவில் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் …. த.திலீபன் அலைப்பேசி : 75022 72075, 94865 62716 மின்னஞ்சல்: thirukkuraldhileeban@gmail.com வலைப்பதிவு : www.thirukkuraldhileeban.in அன்புடையீர் வணக்கம் தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் நமது பண்பாடும் கலை இலக்கிய அடையாளங்களும் திட்டமிட்டு அழிக்கப்படுவதும் அழிந்துவருவதும் நாம் அனைவரும் அறிந்ததே! இது என்றும் இல்லாத அளவில் இன்று நடந்து வருகிறது. இந்த அழிவைத் தடுப்பதும் பாதுகாப்பதும் வளர்ப்பதும் தமிழர் ஒவ்வொருவரின் […]
இந்தப் பயிற்சியில் சேர தொடர்பு கொள்ளுங்கள்: 9840698236 தமிழ் ஸ்டுடியோவின் திரைப்பட பயிற்சி பிரிவான படிமையில் இதுவரை மேற்கொண்டு மாணவர்களை சேர்க்காமல் இருந்து வந்தேன். நிலையான ஒரு இடம் இல்லாததே காரணம். ஆனால் இப்போது, தமிழ் ஸ்டுடியோவிற்காக ஒரு நண்பர் நல்ல அருமையான இடம் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொடுத்திருக்கிறார். எனவே மீண்டும் பயிற்சி இயக்கத்திற்கு மாணவர்களை சேர்க்க தொடங்கியுள்ளேன். படிமை என்பது சினிமாவை வெறும் கேளிக்கைப் பொருளாக பார்க்காமல், இது வெறும் பொழுதுபோக்கு ஊடகம் என்கிற […]
புனைப்பெயரில் மேற்குத் தொடர்ச்சி மலை…. தென் இந்தியாவின் நீர் ஆதாரத்தின் உயிர் நாடி. சதுரகிரியாகட்டும், வெள்ளியங்கிரியாகட்டும் லட்சபோ லட்சம் இந்துக்கள் கூடுவார்கள் – அங்கு சித்தர்கள் இருக்கிறார்கள், சிவன் இருக்கிறார் என்று. பாதயாத்திரை, நடை யாத்திரை, கட்டுச்சோறு, நெய் விளக்கு, உச்சி மலை தீபம் , ஆராத்தி என இந்து மகா ஜனங்கள் மலையை ஆராதித்துக் கொண்டு. சதுரகிரி, அனுமன் தூக்கிய சஞ்சீவ மலையிலிருந்து விழுந்த விதைகளால் அதிசிய மருத்துவ சித்த மூலிகளைகள் நிறைந்தது என்றும், அங்கு […]
முனைவர் ந.பாஸ்கரன் புதினப்படைப்பு என்பது ஓர் அரிய முயற்சியின் வெளிப்பாடு . இன்றைய தமிழ் இலக்கியப்படைப்புகளில் மிகச்சிறந்தவையாக மிகச்சிலவே என்பதைவிட மிகச்சிலவாகவே புதினங்கள் வெளிவருகின்றன.அவற்றுள்ளும் வாசகனை வளைத்துப்போடும் வேலையை விரல்விட்டு எண்ணும் புதினங்களே செய்கின்றன. கவிதை எழுதும் படைப்பாளர்களின் எண்ணிக்கையைவிட கதை எழுதும் படைப்பாளர்களின் எண்ணிக்கை தமிழ்ச்சூழலில் மிகக்குறைந்த அளவில் காணப்படுகிறது. இந்த அளவு கொஞ்சம் மகிழ்ச்சியையும் அளிக்கத்தான் செய்கிறது. மிகச்சிலவாக உள்ள புதினப்படைப்பாளர்களிலும் பலர் வாசகர்களை நோக்கி எழுத்துமலையை உருவாக்கிவிட்டேன் வலிமைபடைத்தவர்கள் அதன் மீது ஏறி […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. எனது வாழ்வுக் கிண்ணத்தில் நீ இனிமையை ஊற்றி வழிய வழிய நிரப்பி யுள்ளாய் ! அதை நீ அறியாய் ! அதை நீ அறிய மாட்டாய் ! அதன் விலை மதிப்பு என்ன வென்று நிர்ணயம் செய்ய மாட்டாய் ! தனக்குத் தெரியாமலே வெண்ணிற மலர்ச் செடிபோல் நறுமணத்தை இரவிலே நிரப்பி வைப்பாய் ! கனவைப் போன்றது அந்தக் காட்சி ! […]
தமிழ் ஸ்டுடியோவின் இந்திய சினிமா நூற்றாண்டுக் கொண்டாட்டம். நண்பர்களே இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து நூறு இந்திய திரைப்படங்களை திரையிட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக 30 இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்பட்டது. அடுத்தக் கட்டமாக திரையிடப்படும் படங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டமாக நடக்கும் இந்த திரையிடலுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. அதுப் பற்றிய விபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாம் நாட்களும் திரையிடல் மாலை 6 மணிக்கு தொடங்கும். இந்திய சினிமா நூற்றாண்டை […]
மே 5 2001 இதழ்: Rewarding the Politicians Financially for their work – T.Kishore, T.Gopal Rao- சட்டபூர்வமாக ஒரு தொகுதியின் மேம்பாட்டில் ஒரு எம் எல் ஏ அல்லது மந்திரி செய்த சாதனை மற்றும் உயர் வரி வருவாய் அடிப்படையில் ஒரு தொகையை மக்கள் பிரதிநிதிகளுக்குக் கொடுத்தால் அப்போது நல்ல விளைவுகள் காணப்படும் என்னும் கட்டுரை. நகைசுவை மற்றும் வித்தியாசமானவை பகுதியில் வந்திருக்க வேண்டிய கட்டுரை. அரசியல் சமூகம் பகுதியில் வந்துள்ளது. கிஷோரும் […]
பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்தபடி. அபூர்வமாகச் சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்து வந்து இளைப்பாறலைத் தரும் வாய்ப்புகளை வாழ்க்கை ஏற்படுத்துகிறது. சில சமயம் ரகசியங்கள் மூர்க்கத்தனமாக உடைபடும் அபாயங்கள் நேர்கின்றன. சில சமயம் அவற்றைப் பேசியே ஆகவேண்டிய நிர்பந்தத்தை சிலர் எதிர்கொள்ளும்போது நூலிழை பிரிவதுபோல் மெல்லமெல்ல அவை பிரியலாம். அல்லது சலனமற்ற குளத்தில் எறிந்த கல்லைப் […]
ஷைன்சன் இத்திரைப்படம் பிரஞ்சுப் பாடகியான இடித் பியாஃபின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற ஒரே பிரஞ்சுத் திரைப்படம் இது. (சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது மற்றும் ஒப்பனைக்கான விருது). (இத்திரைப்படத்தைப் பற்றிப் பேசும்போது தமிழில் வெளிவந்த, வெளிவராத வாழ்க்கை வரலாற்றுப் படங்களைப் பற்றியும் பேச வேண்டியிருக்கிறது. உண்மையைச் சொல்லப் போனால் தமிழில் இதுவரையில் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் என்று சொல்லக்கூடிய முழுமையான திரைப்படம் வந்ததில்லை. பெரியார், காமராஜ் என்று திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், அவர்களின் வாழ்க்கையில் […]