வணக்கம். அவசியம் கலை விழாவிற்கு வாங்க! மீ. த. பாண்டியன்
ரசிப்பு எஸ். பழனிச்சாமி அருணகிரி சந்தோஷமாக இருந்தார். இன்றைய கோல்ஃப் ஆட்டத்திலும் அவர்தான் ஜெயித்தார். இப்பொழுதெல்லாம் விளையாட்டில் ஜெயிப்பது அவருக்கு சர்வ சாதாரண விஷயமாகி விட்டது. அவருடைய நண்பர்களெல்லாம் வந்து வாழ்த்துச் சொன்னார்கள். சபேசனும் வந்து வாழ்த்து சொன்னார். “என்ன அருணகிரி, இப்பொழுதெல்லாம் நீங்களே ஜெயிக்கிறீர்களே! எங்களுக்கும் ஒரு சான்ஸ் கொடுங்களேன்” என்றார். அதைக்கேட்டு அருணகிரி புன்னகைத்தார். அதனுடைய ரகசியம் அவருக்கு மட்டும்தானே தெரியும். இங்கு வந்து விளையாடும் போது மட்டும்தான் அவர் மற்றக் கவலைகளையெல்லாம் மறக்க […]
– தாரமங்கலம் வளவன் சந்திரன் அணை போலீஸ் ஸ்டேஷனில் மூன்றாவது நாளாக இளைய தங்கை மீனாவைப் பற்றிய தகவல்-அதாவது அவள் உடல் கிடைத்த செய்திக்காக காத்திருந்தான். நேற்றே இனிமேல் அழுவதற்கான சக்தியை உடம்பு இழந்து விட்டது. இன்று அவன் அழவில்லை. எதிரே நோக்கினான். பிரம்மாண்டமான வெள்ளம். ஒவ்வொரு முறை இந்த அணை வெள்ளத்தை பார்க்கும் போதெல்லாம்-அந்த அலை கரையில் மோதும் ஓசையை கேட்கும் போதெல்லாம், மனதில் உவகை பொங்கும், அதற்கு மாறாக இன்று, தங்கையை […]
டாக்டர் எல் கைலாசம் சமீபத்தில் வெளியான கமலஹாசனின் விஸ்வரூபம் வண்ணப்படத்தை திருவனந்தபுரம் கைரளி திரையரங்கத்தில் பார்த்தேன். படத்தை திரையிடக்கூடாது என்று ஒருபுறமும், திரையிட்டே ஆகவேண்டும் என்று மறுபுறமும் கூட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. கேரளா காவல் துறையினர் பாவம் அங்கும் இங்கும் ஓடி ஓடி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். மீடியா உழைப்பாளிகள் கேமராவுடனும் கையில் மைக்குடனும் திரை அரங்கின் வாசலில் இருந்து பேசிக் கொண்டிருந்தனர். உண்டு கொழுத்த மோப்பம் பிடிக்கும் நாய்களுடன் கடின முகத்துடன் சிறப்பு காவலர்கள் அங்கும் […]
லாமியா ஐந்து வயது பாதி எகிப்திய – பாதி சவுதி குழந்தை. இக்குழந்தையின் தாயார் எகிப்தில் பிறந்து சவுதி அரேபியாவுக்கு 25 வருடத்துக்கு முன்னர் வந்தார். அக்குழந்தையின் தந்தை பாயான் அல் காம்தி என்பவர் இஸ்லாமிய பிரச்சார தொலைக்காட்சிகளில் இஸ்லாமை பிரச்சாரம் செய்பவர். அல் காம்தி லாமாவின் தாயாரை விவாகரத்து செய்துவிட்டு அந்த குழந்தையை எடுத்துகொண்டார். இந்த வீடியோவில் குழந்தையை தத்தெடுத்துகொண்டால் மதரீதியாக என்ன பயன் பெறலாம் என்று உள்ளம் உருகுவதை காணலாம். செய்திகளின் […]
அக்னிப்புத்திரன் தமிழ்நாட்டில் கமலின் விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் அரசியல் விளையாடிவிட்டதாகவே தெரிகிறது. முஸ்லீம் தோழர்கள் அதிகம் வாழும் மலேசியாவில் படம் ரிலீஸ் செய்யப்பட்டு படம் ஓடியதும் பின் தாய்நாட்டு முஸ்லீம் தோழர்களின் அறிவுத்தலால் அங்கும் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. அதுபோல கேரளா, ஆந்திரா போன்ற இடங்களில் அதிகமாக வாழும் முஸ்லீம் சகோதரர்கள் இருந்தும் படம் ரீலிஸ் செய்யப்பட்டதை கணக்கில் எடுத்துக்கொண்டால் இது அப்பட்டமாக ஜெயா டிவிக்காக முதல்வர் ஜெயாவால் அரங்கேற்றப்பட்ட திருவிளையாடல் என்பதில் சற்றும் ஐயமில்லை. அப்பாவி முஸ்லீம் […]
அயீஷா அஸ்கார் (எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் என்ற பாக்கிஸ்தான் பத்திரிக்கையில் ஜனவரி 4 2013இல் வெளியான கட்டுரை) பெரும் போரில் பாலியல் பலாத்காரம் எவ்வாறு ஒரு ஆயுதமாக உபயோகப்படுத்தப்படுகிறது என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். 1971இல் கிழக்கு பாகிஸ்தான் போரின்போது, பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு எதிராக கிளம்பிய குரல்களை நசுக்க, பல்லாயிரக்கணக்கான பெண்கள் கொடூரமாக பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஒவ்வொரு வருடமும், பாகிஸ்தானிகள் போரின்போது சிறைப்படுத்தப்பட்ட போர்வீரர்களை பற்றி புலம்புவார்கள். ஆனால், அவர்கள் செய்த கொடூரமான செயல்களை பற்றி வாயே திறக்க மாட்டார்கள். […]
எகனாமிஸ்ட் பத்திரிக்கை பாகிஸ்தானிடமிருந்து பங்களாதேஷ் பிரிவதற்காக நடந்த போரில் சுமார் 30 லட்சம் மக்கள் கொல்லப்பட்டு சுமார் 41 வருடங்களுக்கு பிறகு, பங்களாதேஷ் போர் குற்ற ட்ரிப்யூனல் தனது முதலாவது தீர்ப்பை வழங்கியுள்ளது. ஜனவரி 21, 2013ஆம் தேதி அன்று, அபுல் கலாம் ஆஜாத் என்பவருக்கு, 1971இல் நடந்த 9 மாத போரின் போது இனப்படுகொலைக்காகவும், கொலைகளுக்காகவும் மரணதண்டனை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்களுக்கும், அவரது அவாமி லீக் கட்சிக்கும் வெற்றியாக […]
ஆனந்தன், பூனா அலுவலகத்தில் நாங்கள் மூவரும் ஒரே அறையை பகிர்கிறோம். நான், ஜெயந்தி மற்றும் எங்கள் உயரதிகாரி. என் உயரதிகரியும் எனக்கும் இடையே இடுப்பளவு மரத்தடுப்பே பிரிக்கும். ஒரு நண்பர்தான். நண்பராகிவிட்டார். இன்று அலுவலகத்தில் நுழைந்ததும், அழைத்தார். ’கருப்ஸ்’ தடுப்பை தாண்டி எட்டி பார்த்தேன். ஒரு புதிய குப்பைகூடையை கையில் வைத்திருந்தார். நேற்று வாங்கினேன். அழகாக இருந்தது. பார்த்தாயா. வார்க்கப்பட்டது. மாசு மருவற்று, செய்ததற்கான இணைவுகள் எதுவுமில்லாமல். கீழே அடிபக்கம் தரையை தொடாமல் உயர வைக்கபட்டுள்ளது. […]
கவிஞர் திரைப்படப்பாடலாசிரியர் நெப்போலியனின் கவிதை , சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்ற ஆதரவுடன் இயங்கி வரும் தி சப் ஸ்டேஷன் லவ் லெட்டர்ஸ் ப்ராஜெக்ட்ல் ( 2013 ) இடம் பெற்றுள்ளது. காதலின் ( நட்பின் சினேகத்தின் ) பிரிவின் வலியின் சுவையைச் சொல்லும் வரிகளைக் கருப்பொருளாய் கொண்ட சிங்கப்பூரின் 12 கவிஞர்களின் கவிதைகள் இந்த வருடத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. சீனம், மலாய், ஆங்கிலம், தமிழ் என நான்கு மொழிகளிலும் அதன் ஆங்கில […]