அன்புடையீா்! அருந்தமிழ்ப் பற்றுடையீா் வணக்கம் பிரான்சு கம்பன் கழகம் தமிழா் புத்தாண்டுப் பொங்கல் விழாவையும் உலகத் தமிழ்த்தந்தை சேவியா் தனிநாயக அடிகளார் நுாற்றாண்டு விழாவையும் 16.02.2013 சனிக்கிழமை பிற்பகல் 15.00 மணியிலிருந்து 20,30 மணிவரை கொண்டாடுகிறது. இடம் L’ Espace Associatif des Doucettes rue du Tiers Pot 95140 Garges les Gonesse (à côté de l’hôtel de ville) அனைவரும் உறவுகளுடனும் நண்பா்களுடனும் வருகைதந்து விழாவைச் சிறப்பிக்கவும் அழைத்து மகிழும் கம்பன் […]
ச.திருமலைராஜன் தங்களுக்குச் சரியென்று படும் கருத்துக்களைத் துணிவாகவும், தெளிவாகவும் சொல்லக் கூடிய இரு பெரும் ஆளுமைகள் இந்த வாரம் மறைந்து விட்டார்கள். இருவரும் எனக்கு இணையம் மூலமாக அறிமுகமாகி நெருக்கமானவர்கள். என் மீது மிகுந்த பிரியத்துடனும் வாஞ்சையுடனும் பழகிய பெரியவர்கள். இந்திய தேசீயத்திற்கும், இந்து மதத்திற்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் இவர்கள் இருவரது மறைவும் மாபெரும் இழப்பாகும். ஆம், டோண்டு ராக்வன் மறைவின் பொழுது பெரியவர் மலர்மன்னன் அவர்கள் எனக்குக் கீழ்க்கண்ட மடலை இரு தினங்களுக்கு முன்பாக அனுப்பியிருந்தார். […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வெண்ணிலவே ! துயர்க் கடலில் கண்ணீர்த் துளிகள் சொட்டி அலையாய் எழும்பிடும் அந்தோ ! இணைந்து முணுமுணுக்கும் அவை இக்கரை முதல் அக்கரை விளிம்பு வரை. என் படகு இருப்பது பழக்கப் பட்ட கரைப் பக்கம் ! ஆயினும் அற்றுப் போனது அந்தப் பிணைப்பும், அறியாத விளிம்பு நோக்கி ஓரத்தில் தள்ளப் படும் திசை மாறிய சூறாவளியால் ! என்னைக் கடந்து […]
ப.வி.ஸ்ரீரங்கன் திரு.இத்திரயாஸ்அவர்கள் எழுதிய கட்டுரையான “ரிஷானா குற்றமும் தண்டனையும்” (இத்திரியாஸின் தளம் இப்போது முடங்கியுள்ளது)எனும் தொடர் கட்டுரைகள் விவாதிக்கும்குதர்க்கத்துக்கும்-தர்க்கத்துக்கும் இந்த இஸ்லாமியப் படைப்பாளிகள் -அறிஞர்களது கூட்டு “அறிக்கை”க்கும் எந்த வேறுபாடுமில்லை!இத்திரியாசாவது சரியாவின் வன் கொடுமைத்தண்டனையை இடம்-சூழலில் வைத்து மிகச் சாதுரியமான வார்த்தைகளால் விவாதித்து-விசாரித்து அதைக் காக்கின்றார்.இந்த அறிக்கையோ சரியாவைக் குறித்து வாயே திறக்காது “குற்றவியல்-மன்னிப்பு”எனும் பொது மொழியால் உரையாடிக்கொள்கிறது.இது ,1993 வீனாப் பிரகடனமும் நடவடிக்கைகளுக்கான திட்டத்தையும் [Vienna Declaration and Programme of Action-VDPA ]ஒரு […]
Marguerite Abadjian யேமன் நாட்டின் சானா நகரத்தின் வெளியே இருக்கும் சேரிக்கு சென்றால், அதிர்ச்சியடையச்செய்யும் உணர்வை பெறலாம் இங்கே வீடுகள் குப்பைகளால் கட்டப்பட்டுள்ளன. 15பேருக்கும் மேலான குடும்பத்தினர் ஒரே ஒரு அறையில் வசிக்கிறார்கள். குழந்தைகள் அழுக்காக எதையோ சாப்பிட்டுகொண்டிருக்கிறார்கள். அங்கங்கு நோய்க்கிருமிகளும் அழுக்கும் அசிங்கமும் மிதக்கும் குட்டைகள். குப்பைகளும் மனித மலமும் ஒன்றாக கிடந்து ஈக்கள் மொய்த்து நாறிகொண்டிருக்கிறது. தாங்க முடியாத நாற்றம். அந்த காட்சி அயீஷா சுலைமான் எங்கு சென்றாலும் துரத்திக்கொண்டு வருகிறது. அவரால் மறக்கமுடியவில்லை. […]
வணக்கம். அவசியம் கலை விழாவிற்கு வாங்க! மீ. த. பாண்டியன்
ரசிப்பு எஸ். பழனிச்சாமி அருணகிரி சந்தோஷமாக இருந்தார். இன்றைய கோல்ஃப் ஆட்டத்திலும் அவர்தான் ஜெயித்தார். இப்பொழுதெல்லாம் விளையாட்டில் ஜெயிப்பது அவருக்கு சர்வ சாதாரண விஷயமாகி விட்டது. அவருடைய நண்பர்களெல்லாம் வந்து வாழ்த்துச் சொன்னார்கள். சபேசனும் வந்து வாழ்த்து சொன்னார். “என்ன அருணகிரி, இப்பொழுதெல்லாம் நீங்களே ஜெயிக்கிறீர்களே! எங்களுக்கும் ஒரு சான்ஸ் கொடுங்களேன்” என்றார். அதைக்கேட்டு அருணகிரி புன்னகைத்தார். அதனுடைய ரகசியம் அவருக்கு மட்டும்தானே தெரியும். இங்கு வந்து விளையாடும் போது மட்டும்தான் அவர் மற்றக் கவலைகளையெல்லாம் மறக்க […]
– தாரமங்கலம் வளவன் சந்திரன் அணை போலீஸ் ஸ்டேஷனில் மூன்றாவது நாளாக இளைய தங்கை மீனாவைப் பற்றிய தகவல்-அதாவது அவள் உடல் கிடைத்த செய்திக்காக காத்திருந்தான். நேற்றே இனிமேல் அழுவதற்கான சக்தியை உடம்பு இழந்து விட்டது. இன்று அவன் அழவில்லை. எதிரே நோக்கினான். பிரம்மாண்டமான வெள்ளம். ஒவ்வொரு முறை இந்த அணை வெள்ளத்தை பார்க்கும் போதெல்லாம்-அந்த அலை கரையில் மோதும் ஓசையை கேட்கும் போதெல்லாம், மனதில் உவகை பொங்கும், அதற்கு மாறாக இன்று, தங்கையை […]
டாக்டர் எல் கைலாசம் சமீபத்தில் வெளியான கமலஹாசனின் விஸ்வரூபம் வண்ணப்படத்தை திருவனந்தபுரம் கைரளி திரையரங்கத்தில் பார்த்தேன். படத்தை திரையிடக்கூடாது என்று ஒருபுறமும், திரையிட்டே ஆகவேண்டும் என்று மறுபுறமும் கூட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. கேரளா காவல் துறையினர் பாவம் அங்கும் இங்கும் ஓடி ஓடி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். மீடியா உழைப்பாளிகள் கேமராவுடனும் கையில் மைக்குடனும் திரை அரங்கின் வாசலில் இருந்து பேசிக் கொண்டிருந்தனர். உண்டு கொழுத்த மோப்பம் பிடிக்கும் நாய்களுடன் கடின முகத்துடன் சிறப்பு காவலர்கள் அங்கும் […]