This entry is part 16 of 24 in the series 13 செப்டம்பர் 2015
பொன்னியின் செல்வன் மூலக்கதை : கல்கி படக்கதை : வையவன் ஓவியங்கள் : தமிழ்ச்செல்வன் முன்னுரை கோடானு கோடி தமிழர்களால் மட்டுமின்றி ரஜினி காந்த் போன்ற தமிழர் அல்லாதவர்களாலும் சுவையோடு வாசிக்கப்பட்ட நாவல் பொன்னியின் செல்வன். மொபைல் கிண்டில் நெட் என அனைத்து தொலைத்தொடர்பு சாதனங்களிலும் பரவலாகப் புகழ்பெற்றுள்ள இந்த நாவல் தமிழில் முதல் முறையாக படக்கதை வடிவம் பெறுகிறது. ஏற்கெனவே மொழிபெயர்ப்பு, படைப்பு இலக்கியம் அறிவியல் ஆகிய துறைகளில் ஏராளமாக எழுதி அழியாப் புகழ் பெற்றுள்ள […]
(சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்திருப்பவர் வையவன். இயற்பெயர் முருகேசன். வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் டிசம்பர் 24, 1939ல் பரமசிவம் – அமிர்தசிகாமணி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். கீழ்மத்தியதரக் குடும்பம். குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. தந்தை ஒரு சிறந்த வாசகர். அவர் வையவனுக்கு நல்ல நூல்களை அறிமுகப்படுத்தினார். குறிப்பாக ஆங்கில நூல்களை வாங்கிக்கொடுத்து படிக்க ஊக்கப்படுத்தினார். சிறுவயதிலேயே ஆங்கிலத்தில் புலமைபெற்றார் வையவன். தாயும் இவரது கற்பனை விரியக் காரணமானார். அவர் […]
முன்னுரை மணல் வெளியில் மான்கள் வசிப்பதில்லை. ஆனால் குரூர சக்திகள் துரத்தி வரும்போது அவை மணல் வெளிகளைக் கடக்க முயலும். சில சமயம் வெல்லும்; சில சமயம் மடியும். மனிதகுலமேதான் இன்றைய மணல்வெளி மான்கள். துரத்துவது வன்முறை. தடுப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்கு மனிதர்களைத் தவிர வேறு எவருமில்லை. எதிர்த்துத்தாக்கு! தீயைத் தீயால் அணை! முள்ளை முள்ளால் எடு! இதுதான் காட்டுமிராண்டி வாழ்வின் ஆதி அம்சம். மனிதனின் அந்த விலங்குத் தன்மையை மாற்றி மாற்றி எழுந்த மகான்களின் குரல்கள் மறு […]
வையவன் தூங்கிக் கண் விழித்ததும் ஜின்னிக்கு சிரிப்புதான். மாயா ஜாலம் போல மனசை மாற்றும் சிரிப்பு. மூன்று மாதம் முடிந்து நான்கு ஓடுகிறது. கைக் குழந்தை. ஷேவிங் நுரையோடு தற்செயலாகத் திரும்பினான் அதியமான். ஜின்னி சிரித்துக் கொண்டிருந்தது. எந்தப் பறவை, எந்தப் பூ இப்படி சிரிக்கும்? யார் கற்றுத் தந்தது? அவனுக்கு ஞான மேரி நினைவு வந்தது. சிசுவான ஜின்னியைக் குளிப்பாட்ட வந்தவள். அவள்தான் சிரிக்க வைத்தாள். சிரித்துச் சிரித்துக் கற்றுக் கொடுத்தால் குழந்தைகள் சிரிக்கின்றன, நிலா […]
“அவள் ஞாபகத்திற்காகக் குடிக்க ஆரம்பித்தேன்.” சரக்கு அடுக்குவதற்காக மேலே ஜிங்க் ஷீட் போர்த்தி நீளக் கிடங்கு போல் கட்டப்பட்டிருந்த அந்தக் கிராமத்துக் கடை மாடியில் ராமகிருஷ்ணன் சொன்னான். நிலா வெளிச்சம் பெரிதாய் விரித்திருந்த பாயில், முழ உயரத்தில் ஒரு பச்சைப் பாட்டில், மினுமினுக்கின்ற இரண்டு எவர்சில்வர் டம்ளர். முறுமுறுவென்று ஓசையிடும் ஓர் உடைத்த கோலி சோடாப்புட்டி. ஒரு தட்டிலே வாணியம்பாடி கடையில் வாங்கிய காராபூந்தி. இந்தப் பின்னணியில் அவன் சொன்னது […]
காலம் மாறுகிறது. மாற வேண்டும். மாறா விட்டால் அது காலமில்லை. இப்படி தவிர சாமு காலத்தைப் பற்றி அதிகம் அலட்டிக் கொண்டதில்லை. அவனுக்கு வயது இருபத்திரண்டு. அவனுடைய தாத்தா சபாபதி கவுண்டருக்கு எழுபத்தைந்து வயசாகிறது. ஆனாலும் கயிற்றுக் கட்டிலில் கிடந்து இறந்த காலத்தைப் பற்றி அசை போட்டு ஓயாமல் அலப்பும் ஆசாமியல்ல, விவசாயி. மண் பேசும் பேச்சு எந்த மனுஷப் பேச்சையும் விட அர்த்தமுள்ளது என்று அனுபவப்பட்டவர். கண்ணும் பல்லும் கையும் இன்னும் […]
காடு வெட்டியாருக்கு நாற்காலி கொண்டு வந்து ஒருவன் களத்தில் போடும்போதுதான் கான்ஸ்டபிள் வந்தார். காலையில் காப்பி, பலகாரம் முடித்துக் கொண்டு, அமர்த்தலாக ஏப்பம் விட்டவாறே பண்ணை வீட்டிலிருந்து கீழே இறங்கும்போதே காடு வெட்டியார் பார்வை கான்ஸ்டபிள் மேல் பட்டுவிட்டது. அதைக் கண்டு கொள்ளாமல் வைக்கோல் போர் போட்டுக் கொண்டிருந்தவர்களிடம் ஓர் அதட்டல். சாக்கில் அறுவடை நெல் அளந்து நிரப்புகிறவனிடம் ஒரு விசாரிப்பு. தலையைச் சொறிந்து நின்ற டிராக்டர் டிரைவரிடம் ஒரு சீறல்… இத்தனையும் நடத்திக் […]
இப்பவோ அப்பவோ என்று ஒரு குரல் (கமெண்டோ?) கேட்டது. நான் சிவுக்கென்று திரும்பிப் பார்த்தேன். கலகலவென்று சிரிப்பொலி. இடம் ஜெமினி பஸ் ஸ்டாப் ‘நின்றிருந்தவர்கள் ஐந்து பேர் இளைஞர்கள். பாவம்!’ அவர்கள் என்னைச் சொல்லவில்லை. ஏன், என்னைக் கவனிக்கக் கூட இல்லை. அவர்கள் தம்மில் மூழ்கிக் களித்துக் கொண்டிருந்தார்கள். வரவர நான் தான் ‘ஸென்ஸிடிவ்’ ஆகி வருகிறேன். வயிறு நிறையத்தான் பருத்து விட்டது. எப்படிக் கட்டினாலும் புடைவை எங்கேயாவது வழுக்கிக் கொண்டு […]