வினாத்தொகுப்பு : பாரதி இளவேனில் {அன்பாதவன்} { மூன்றாம் பகுதி } ஆசிரியப் பணியில் மறக்கஇயலா சம்பவங்கள் —————? முப்பத்தெட்டாண்டு பணி குறித்து நிறையவே பேச வேண்டு ம். இடைநிலை ஆசிரியனா கப் பணியேற்ற எனக்கு உடனேயே பள்ளியில் இலக்கிய மன்றத் தலைவர் பொறுப்பும் ஆசிரியர் இயக்கப் பொறுப்பும் கிடைத்தன. ஆசிரியர் இயக்கத்தில் கொண்ட ஈடுபாடு மாநில இயக்கப் பொறுப்பாளர்கள் என்னை அறியவும் மதுரை, கோவை, சென்னை,ஆகிய நகரங்களில் நடைபெற்ற மாநில மாநாடுகளுக்கு மிதிவண்டியில் செல்லவும் வழிவகுத்தது. […]
தற்போது ‘டொராண்டோ’ வந்திருக்கும் கலை, இலக்கிய விமர்சகரான எழுத்தாளர் யமுனா ராஜேந்திரனை தமிழ் கலை, இலக்கிய உலகு நன்கறியும். கோவையில் பிறந்த யமுனா ராஜேந்திரன் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். அரசியல், கலை, இலக்கிய விமர்சகத்துறையில், மொழிபெயர்ப்புத் துறையில் ஓய்வற்று அவர் ஆற்றிவரும் பணி என்னைப் பிரமிக்க வைப்பதுண்டு. பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றிவருமிவரை எழுத்தாளர் ‘கனவுச்சிறை’ தேவகாந்தனின் இருப்பிடத்தில் சந்திக்கும் வாய்ப்பு இன்று – மே 17, 2012 – கிடைத்தது. இவர்களுடன் எழுத்தாளர் டானியல் […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com உழவரை மறக்காத உழவுக் கவிஞராக மக்கள் கவிஞர் விளங்கினார். உழவன் வாழ்வு உன்னத வாழ்வு என்று எழுதினார். அதனால்தான், ‘‘நல்லவர் செய்த செயல்களிலே – பயிர் நாட்டியமாடுது வயல்களிலே’’ என்று உலகத்தாருக்கு உணவிடும் உழவனே, மற்றவருக்கு உதவும் பண்பு கொண்ட உழவனே நல்லவன் என்று உலகத்திற்குப் பறைசாற்றுகின்றார். நடிப்பிற்காகக்கூட உழவர்களை இழிவாக நடத்தத்தெரியாதவர் மக்கள் கவிஞர். ‘‘1954-ஆம் ஆண்டில் திண்டுக்கல்லில் நடந்த விவசாயிகள் சங்க மாநாட்டில் […]
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி, இவ்வையம் தழைக்குமாம் மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம் மூடக் கட்டுக்கள் யாவும் தகர்ப்பராம் ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம் அச்சம், நாணம் விடுத்து, நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடன் ஞானச் செருக்குடன் இருக்கும் பெண், ஆண்மக்களும் போற்றிட வாழ்வர் என்பதையும் கூறியுள்ளார். பெண் விடுதலை என்ற பேச்சு வந்தாலே அங்கே பாரதியைப் பார்க்கலாம். பட்டங்கள் […]
அசோக மித்ரனின், 82வது வயதில், அவர் பிறந்த தெலுங்கு பூமி,தனது என்டிஆர் இலக்கிய விருதை கொடுத்து கொளரவித்துள்ளது. அசோகமித்ரனை, நினைக்கும் போது, பழக இனிமையானவர், எளிமையானவர், எல்லாவற்றிக்கும் மேலாக, அவர் இன்றுவரை நல்ல மனிதவராகவே வாழ்ந்து வருகின்றார். ஆந்திர மண்ணில் விழுந்த விதை, வாழ்வில் பல இடர்பாடுகளை தாண்டி, சென்னைக்கு வந்தவர். எல்லோரையும் வாழ வைத்த சென்னை, அசோகமித்ரனையும், கைவிடவில்லை. இன்று, தழிழ் மண்ணையும்-தெலுங்கு தேசத்தையும் இலக்கிய மூலமாக இணைத்தவர். சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com தமிழகம் தந்த தலைசிறந்த கவிஞர்களுள் பாரதி, பாரதிதாசன் உள்ளிட்டோர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். இவர்களது வரிசையில் வைத்துப் போற்றத்தக்கவராக விளங்குபவர் பாரதிதாசனின் மாணவராகிய பட்டுக்கோட்டையார் ஆவார். பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை ஆகிய மூவரும் தமிழக வரலாற்றில் அடுத்தடுத்த சகாப்தங்களாக அமைந்துவிட்டனர் எனாலம். 1882-ஆம் ஆண்டில் பிறந்த பாரதியார் 1921-ஆம் ஆண்டு தமது 39-ஆவது வயதில் மறைந்தார். 1930-ஆம் ஆண்டில் தோன்றிய பட்டுக்கோட்டையார் 1959-ஆம் ஆண்டில் தனது […]
அண்ட்டால்யா – கொன்யா -துருக்கி மார்ச்-26 [துருக்கியைப்பற்றிய சிறுகுறிப்பு: 1923ம் ஆண்டிலிருந்து முஸ்தபா கேமால் ஒட்டொமான் பிடியிலிருந்து மீட்டு சுதந்திர துருக்கியை உருவாக்கினார். 1982ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் திருத்தி எழுதப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 550. ஐந்து ஆண்டுகளுக்கொருமுறை மக்களால் நேரடியான வாக்கெடுப்பில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இஸ்லாம் பெரும்பானமை மக்களின் மதம். கிறித்துவம், யூதம் போன்றவற்றுள் நம்பிக்கைகொண்ட மக்களும் நாட்டிலுண்டு. பல மொழிகள் பேசப்படினும் பெரும்பான்மையினரின் மொழி துருக்கி. நவீன துருக்கியின் தந்தையெனக் கருதப்படும் […]
தஞ்சாவூரிலிருந்து 25 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் இதழ் சௌந்தரசுகன். ஆசிரியை சுந்தரசரவணன். இதன் வெள்ளிவிழா ஆண்டும், 300வது இதழ் வெளியீட்டு விழாவும் மே மாதம் 5 , 6 தேதிகளில் தஞ்சையில் நடந்தது. 5 அமர்வுகள், ஒன்றரை நாட்கள் கூட்டம், 8 பக்க அழைப்பிதழ் என்று ஏகத்துக்குத் தடபுடல். முதல் அமர்வில் கவிஞர் கிருஷ்ணப்பிரியாவின் “ வெட்கத்தில் நனைகின்ற .. “ என்கிற கவிதைத் தொகுப்பு, அமிர்தம் சூர்யா தலைமையில், நிலாமகள் வெளியிட, நடைபெற்றது. இரண்டாவது அமர்வில் […]
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். இப்பகுதி எரிமலையில் தீக்குழம்பைக் கொட்டுவது போல் இருக்கலாம். நம்முடன் இருந்து பேசுகின்றவர் தந்தை பெரியார். பாரதி போல் கவிஞன் அல்ல. குடும்பத்தில் அவர் ஓர் “தந்தை”. .(தயவு செய்து எங்கள் உணர்வுகளை அரசியல் குட்டையில் கலந்து விடாதீர்கள். இது குடும்ப விஷயம் ..வாழ்க்கையில் பெண்ணின் நிலை, குடும்ப நலன்பற்றி எழுதுகின்றேன். அது சம்பந்தமாக மற்றவர்களின் கருத்துக்களையும், சில விளைவுகளையும் பதிய முயற்சிக்கின்றேன். எனக்கு அரசியல் வர்ணம் வேண்டாம்.) […]
கவிஞர் கனகசுப்புரத்தினம் என்கிற பாரதிதாசன் புரட்சிக்கவிஞர் என்றே அறியப்படுகிறார். அதில் எனக்கு எவ்விதமான கருத்து வேறுபாடும் இல்லைதான். பெண்ணடிமை தீரும் மட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவரல் முயற்கொம்பே (சஞ்.ப.சா. தொ.1) மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே! (பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி) என்றெல்லாம் பெண் விடுதலையைப் பேசியவர்தான் பாரதிதாசன். ஆனால் அது என்னவொ தெரியவில்லை, . பாரதிதாசனின் குடும்பவிளக்கு கவிதை வரிகளை வாசித்தப் பின் முதல் முதலாக எனக்கு ஏற்பட்ட […]