துளசிச்செடி நிழலில் கண்டெடுத்த குழந்தை

This entry is part 26 of 42 in the series 1 ஜனவரி 2012

ஹெச்.ஜி.ரசூல்  முனைவர் செள..வசந்தகுமார் தேர்ந்த கல்வியாளர். இலக்கியவிமர்சகர். மொழியியலிலும், தத்துவத்திலும் ஆர்த்தம் நிறைந்த விவாதங்களை முன்வைப்பதில் தேர்ச்சி பெற்றவர். மு.வ.வின் படைப்புகளில் கல்வியியல் சிந்தனைகள் தலைப்பின்கீழ் முனைவர் பட்டம் பெற்றவர். கல்வியியல் துறையில் அதிக கவனம் செலுத்தி செயல்பட்டு வருவதால் இவரது ஏற்கெனவே வெளிவந்த இலக்கிய கல்வியின் பரிணாமங்கள், புதிய நோக்கில் தமிழ்பாடமும் கல்வியும், தாய்மொழியும் திறன்மேம்பாடும் என்பதான மூன்று நூல்களும் தமிழ் அடையாளத்தை முன்வைத்து அறிமுகமாயின. தற்போது இவரது ஆழ்ந்த வாசிப்புக்கும், ஆய்வுக்கும் சான்றாக தமிழ் […]

Delusional குரு – திரைப்பார்வை

This entry is part 25 of 42 in the series 1 ஜனவரி 2012

கற்பனைல நடக்கிறதயும், நனவில நடக்கிறதயும் பிரித்துப்பார்க்க இயலாத ஒருவனின் கதை இந்த (Delusional குரு) மௌனகுரு.(அப்டியே வெச்சுக்கலாம் அதான் நல்லது) “போலீஸ் அவர ஃபாலோ பண்றதாகவும், கண்காணாத இடத்துக்குக் கூட்டிட்டுப் போயி தன்ன என்கவுண்டர் பண்ண முயற்சிக்கிறதாகவும் , அவரா கற்பனை பண்ணிக்கிட்டு தன்னையும் குழப்பிக்கிட்டு, அதோட கூடவந்த இன்னும் ரெண்டு பேர தன் கண் முன்னாலயே போலீஸ் என்கவுன்ட்டர் பண்ணீட்டதாகவும் சொல்லிட்ருக்கார். இத சீக்கிரமே குணப்படுத்தீரலாம், நீங்க நினைக்கிற அளவுக்கு இது பெரிய பிரச்னையில்ல, கல்லத்தூக்கி […]

பட்டி டு சிட்டி – நூல் மதிப்புரை

This entry is part 21 of 42 in the series 1 ஜனவரி 2012

முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர் மா. மன்னர் கல்லூரி. புதுக்கோட்டை நூலாசிரியர்: சிவசக்தி இராமநாதன், வெளியீடு நந்தினி பதிப்பகம், சூர்யா பிரிண்ட் சொலுசன்ஸ்,534. காமராசர் ரோடு, சிவகாசி, 9842124415 விலை. ரு. 150 கிராமங்களில் இருந்து நகரங்களுக்குப் பெயரும் நாகரீக வாழ்க்கை என்பது தற்போது சர்வசாதாரணமாகிவிட்டது.  நாடுகள் கடந்துப் பெருநகரத்திற்குப் போகவேண்டிய உயரத்திற்குத் தற்போதைய இந்திய மக்களின் சூழல் வளர்ந்துவிட்டது. இருப்பினும் பிறந்த நாட்டை, பிறந்த தாய்மண்ணை வெளிநாடுகளில் பெயர்ந்து வாழும் இந்தியமக்கள் மறவாமல் இருக்கிறார்கள் என்பது […]

வாழ்ந்து முடிந்த வரலாறு – என்.எஸ்.ஜெகன்னாதன் – சில நினைவுக்குறிப்புகள்

This entry is part 10 of 42 in the series 1 ஜனவரி 2012

தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் ஒருநாள் காலை நேரத்தில் கிறிஸ்து கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் நண்பர் கிருஷ்ணசாமி தொலைபேசியில் அழைத்தார். கணையாழியின் வழியாக எல்லோருக்கும் நன்றாக அறிமுகமான என்.எஸ்.ஜெகன்னாதன் என்கிற என்.எஸ்.ஜெ. தில்லியிலிருந்து குடிபெயர்ந்து பெங்களூருக்கு வந்துள்ளார் என்கிற தகவலைச் சொல்லி “சாயங்கலாமா வரீங்களா? அவரப் போயி பாக்கலாமா?” என்று கேட்டார். அக்கணம் ”என்னைக் கேட்டால்” என்று அவர் கணையாழியில் தொடர்ந்து பல காலம் எழுதிவந்த பத்தியின் தலைப்புதான் உடடியாக நினைவுக்கு வந்தது. இலக்கியம், சமூகம், அரசியல், சமயம், பாராளுமன்ற […]

நினைவுகளின் சுவட்டில் – (81)

This entry is part 8 of 42 in the series 1 ஜனவரி 2012

ஒரு நாள் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது ஹோட்டலின் உள்ளே நுழைந்தவர்கள் மூன்று நான்கு பேர் நாங்கள் தமிழில் பேசிக்கொண்டிருந்தது கேட்டு எங்கள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தனர். புதிதாக தமிழ் நாட்டில் ஏதோ ஊரிலிருந்து புதிதாக வந்திறங்கிய தோற்றம் தெளிவாகத் தெரிந்தது. வந்தவர்கள் எங்களைப் பார்த்து முகம் மலர புன்னகை ஒன்றை வீசினர். “ஏதோ பேச்சுக்கு, “புதுசா வந்திருக்கீங்களா?” என்று எங்களில் ஒருவர் கேட்க, “ஆமாங்க, இங்க நிறைய நம்மாட்கள் இருக்காங்களாங்க? என்று கேட்டார் வந்தவர்களில் பெரியவர். “நிறைய […]

‘‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’’

This entry is part 4 of 42 in the series 1 ஜனவரி 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      இறைவன் படைத்த உயிரினங்களுள் மிகவும் உன்னதமானவன் மனிதனாவான். அம்மனிதன் பண்பாலும், நடத்தையாலும் உயர்நிலையை அடைதல் வேண்டும். இறைவன் மனிதன் உயர்ந்த வாழ்வு வாழ வேண்டும் என்று விரும்பியே உலகில் அவனுக்கு உதவியாக இயற்கையையும், உயிரினங்களையும் படைத்தான். ஆனால் மனிதன் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு அவற்றையெல்லாம் விடுத்துப் பல்வேறு கீழான குணங்களைக் கைக்கொண்டான். இத்தகைய கீழான எண்ணங்கொண்ட மனிதனை நல்வழிப்படுத்த நமது முன்னோர்கள் […]

சூபி கவிதை மொழி

This entry is part 29 of 29 in the series 25 டிசம்பர் 2011

பீர்முகமது அப்பாவின் பாடல்வரிகள் சிலவற்றை வஹாபிய நண்பர்கள் சர்ச்சைக்குரியதாய் முன்வைத்தார்கள். இதுநாள்வரை இப்பாடல்வர்களுக்கான விளக்கங்கள் யாராலும் சொல்லப்படாததற்கு காரணம் அவை இஸ்லாமிய இறையியலுக்கு எதிராக உள்ளதுதான் என்பது போன்று இவ்விவாதங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன. தமிழ் சூபிக்கவிஞர்களின் மொழியையும், கலாச்சார நிலைபாட்டையும் புரிந்து கொள்வதில் இன்னும் தெளிவுகள் உருவாக வேண்டும். தற்போது சர்ச்சைக்கு ஆளாக்கப்பட்ட சில கவிதைவரிகளுக்கான சில வாசிப்புகளை கவனிப்போம். 1) நீயே புவிக்குள் ரஸூலாக வந்தாய். முதல்நிலை அர்த்தம் ரஸுல் என்பதன் பொருள் இறைத்தூதர். தூதர் […]

ஜென் ஒரு புரிதல் – பகுதி 24

This entry is part 5 of 29 in the series 25 டிசம்பர் 2011

  நடு வயதைக் கடந்த பிறகு விரும்பியதைச் சாப்பிட முடியவில்லை என்னும் மனக் குறை அனேகமாக எல்லோருக்குமே இருக்கிறது. இது ஒரு பானைச் சோற்றில் ஒரே ஒரு பருக்கை தான். மனக் குறைகள் நிறையவே இருக்கின்றன. அவை என்றுமே தீராதவை. புதிது புதிதாக வளர்பவை. குறைகளும் ஆசைகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இவை இரண்டும் ஒன்றாக இருந்தே தீரும். ஒரு மனதின் சம நிலை மிகவும் பாதிக்கப் படுவது இந்த இரண்டினால் தான். மாற்றுத் திறனாளிகள் […]

பழமொழிகளில் பல்- சொல்

This entry is part 3 of 29 in the series 25 டிசம்பர் 2011

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      பல பொருள்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. பூ-நார், நகம்-சதை, அண்ணன்-தம்பி, நெருப்பு-புகை, என்பன போன்று பல ஒன்றுடன் ஒன்று இணைந்து வரும். மேற்கூறிய சொற்களைப் போன்றே பல்லும் சொல்லும் என்ற இரு சொற்களும் ஒன்றற்கொன்று தொடர்புடையனவாக அமைந்துள்ளன. இவ்விரு சொற்களையும் பழமொழிகளில் வைத்து நமது முன்னோர்கள் வாழ்க்கைக்கு உரிய பல்வேறு கருத்துக்களையும் நமக்கு வழங்கியுள்ளனர். பல்லும்-சொல்லும் ஒரு மனிதனின் வாயில் பல் […]

நினைவுகளின் சுவட்டில் (83)

This entry is part 2 of 29 in the series 25 டிசம்பர் 2011

Life பத்திரிகையில் அன்னாட்களில் வெளிவந்த இன்னொரு கட்டுரைத் தொடர் மிக முக்கியமானதும், அதிர்ச்சி தருவதுமாக இருந்தது,. அது நான்கைந்து இதழ்களுக்கு வந்தது என்று நினைவு. ஒவ்வொரு இதழிலும், அந்த பெரிய அளவிலான பத்திரிகையிலும் ஆறேழு பக்கங்களுக்கு அக்கட்டுரை நீண்டது. தலைப்பு எனக்கு நினைவில்லை.  The Great Purges, என்று இருக்கவேண்டும். அல்லது The Great Stalinist Trials என்றும் இருக்கலாம். இன்று எனக்கு சரியாக நினைவில் இல்லை. இந்தத் தொடர் வந்தது ஸ்டாலினின் மறைவுக்குச் சற்று முன்னரா […]