பழந்தமிழரின் சூழல் காப்புணர்வு

This entry is part 11 of 30 in the series 15 ஜனவரி 2012

முன்னுரை நாம் வாழும் பூமி எண்ணற்ற உயினங்களின் இருப்பிடமாகும். இப்பூமி தோற்றம் பெற்ற நாளிலிருந்து உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் மனித இனம் தான், மிகப்பெரிய அழிவை சேதத்தை பூமிக்கு ஏற்படுத்தியுள்ளது. சென்ற சில நூற்றாண்டுகளில் தொழிற்புரட்சியின் பெயரால் பூமியின் வளம் பெரிதும் சூறையாடப்பட்டுள்ளது.   பிரபஞ்சத்திலுள்ள 1235 கோள்களில் உயிரினம் வாழ்வதற்கேற்ற கோள் பூமி ஒன்றுதான். கோள்களின் தோற்றம் வயது.உயிர்ப்பு இவற்றைக் கணக்கிட்டு கிரேக்லாக் என்ற அறிஞர் பூமியின் மதிப்பு இந்தியமதிப்பில் 2இலட்சத்து16 ஆயிரம்இலட்சம் கோடி (3000டிரில்லியன் […]

“உள்ளம் கொள்ளை போகுதே…” – சு. வேணுகோபால் சிறுகதைத் தொகுதி “வெண்ணிலை”

This entry is part 10 of 30 in the series 15 ஜனவரி 2012

எழுத்தாளர் திரு சு. வேணுகோபால் அவர்களுக்கு இந்த வருடத்திய பாரதிய பாஷா பரிஷத் விருது அவரது வெண்ணிலை சிறுகதைத் தொகுதிக்காக வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள ஒருவருக்கு, அவரது தகுதியான புத்தகத்திற்கு இது வழங்கப்பட்டுள்ளது. எல்லோரிடமும் அன்போடும், பண்போடும் பழகக் கூடிய இனிய நண்பர் அவர். தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவன் என்கிற முறையில் என் சிறுகதைகளின் மீது, அக்கறை எடுத்துக் கொண்டு எப்படியான கருத்தோட்டம் மிகுமானால் அது இன்னும் தலைநிமிரும் என்பதாக விவரித்து அவர் எழுதிய நீண்ட கடிதம் அவர் […]

நானும் எஸ்.ராவும்

This entry is part 6 of 30 in the series 15 ஜனவரி 2012

இப்போதுபோல பிரபலம் ஆகாத நிலையிலேயே எஸ்.ராமகிருஷ்ணனை நான் அறிவேன். இதற்கும் கிரியா ஊக்கி பால்நிலவன் தான். அப்போதைய இலக்கிய தேடலில் பல, எனக்கு அறிமுகமில்லாத படைப்பாளிகளை அவர் எனக்கு பரிச்சயப் படுத்தினார். அந்த வரிசையில் வந்தவர்தான் எஸ்.ரா. நாற்பதுகளைக் கடந்து ஐம்பதைத் தொட்டுக்கொண்டிருக்கும் வயதில் இருந்த அவரை நான் பார்த்தபோது பெரிதும் சிலாகிக்கவில்லை. நமக்கு எப்போதுமே ஒரு ஜெயகாந் தன் பிம்பம் முன்னேராக ஓடிக்கொண்டிருக்கும். அதன் வழியாகப் பார்க்கும்போது எதுவும் பளிச்செனப் பதியாது. வழுக்கைத் தலையை மறைக்க […]

சிற்றிதழ் அறிமுகம்: சௌந்தர சுகன்

This entry is part 5 of 30 in the series 15 ஜனவரி 2012

சிறகு இரவிச்சந்திரன் ஓவியர் ஆதிமூலத்தின் புகைப்பட அட்டையுடன் வந்திருக்கிறது சுகனின் 296வது இதழ். தஞ்சையிலிருந்து தனியொருவன் முயற்சியாக வந்து கொண்டிருக்கும் இதழ். ஆசிரியர் என்று துணைவியின் பெயர் இருந்தாலும் முழு முயற்சி சுந்தரசரவணன் தான். என்ன பல ஆண்டுகளாக இதழின் பொருட்டே விளிக்கப்படுவதால் அவரும் சுகன் என்றே அழைக்கப்படுகிறார். மற்ற சிற்றிதழ்கள் போலல்லாமல் இது கொஞ்சம் அரசியல் பேசும். ஒரு நிலை எடுத்துக் கொள்ளும். சுகனின் பிடிக்காத பகுதி எனக்கு இது. ஆனால் உரிமை சுகனுக்கே. சிற்றிதழ் […]

ஜென் ஒரு புரிதல் – 27

This entry is part 1 of 30 in the series 15 ஜனவரி 2012

சத்யானந்தன் பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் “ரியோகன்” கவிதைகள் இவை. புற உலகை ஜென் எவ்வாறு காண்கிறது என்பதை “ஒரு நண்பனுக்கு மறுவினை” என்னும் கவிதையில் தெள்ளத் தெளிவாகக் காட்டி இருப்பதைக் காண்கிறோம். பௌத்தத்துக்கும் முந்திய சீன மறை நூலான “ஐ சிங்” பற்றிய இவரது கவிதை இவரது ஆழ்ந்த அறிவுக்கு அடையாளம். ஒரு வானம்பாடியின் கானம் ——————————– ஒரு வானம்பாடியின் கானம் என்னைக் கனவினின்று வெளியே இட்டு வரும் காலை ஒளிரும் ——————————— வசந்தத்தின் முதற் […]

புத்தகச் சந்தை 2012 – ஸ்கூப் சுவாரஸ்யங்கள்

This entry is part 21 of 40 in the series 8 ஜனவரி 2012

ஆட்சி மாறி விட்டதே, அதனால் சென்னையின் மையப்பகுதியில், அண்ணா சாலையில், காயிதே மில்லத் கல்லூரி மைதானத்தில், இந்த முறை சந்தை இருக்கும் என்று எதிர் பார்த்தேன். பொய்த்து விட்டது. வழக்கமாக டிசம்பர் கடைசி வாரத்தில் ஆரம்பிப்பார்கள். இம்முறை சனவரி ஐந்து. அதே தமிழ் மைய மைதானம். அப்படித்தான் சொன்னார்கள்.. தமிழ் மையம் காஸ்பர் பரிந்துரைப்படி கடந்த ஆட்சியில் செயிண்ட் ஜார்ஜ் பள்ளி மைதானம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக.. சென்னை மைலாப்பூரிலிருந்து இங்கு வருவதே கடினம். என் கதை இன்னமும் சோகம். […]

நன்றி உரை

This entry is part 16 of 40 in the series 8 ஜனவரி 2012

(30.4.2011 அன்று மாலை வாதங்கள் விவாதங்கள், தொகுப்பு வெளியிடப்பட்ட தருணம் கடைசியில் நான் நன்றி கூறு முகமாகச் சொன்னது, இங்கு சற்று ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. ) முஸிபத் கபீ அகேலே நஹி ஆத்தி என்பார்கள். நம்மூரிலெ கூட கேட்டை மூட்டை செவ்வாய் என்று ஏதோ சொல்வார்கள். கஷ்ட காலம் என்று வந்தால் அது தனியாக வராது. நீங்கள் எல்லாம் மூன்று மணி நேரமா உட்கார்ந்திருக்கிறீர்கள். கடைசியில் நான் நன்றி சொல்ல வேண்டும். அதைத் தவிர்க்க முடியாது. இவ்வளவு […]

சிற்றிதழ் அறிமுகம் : சங்கு

This entry is part 13 of 40 in the series 8 ஜனவரி 2012

. முப்பது வருடங்களுக்கு மேலாக கடலூரிலிருந்து வந்து கொண்டிருக்கும் சிற்றிதழ். சுப்பிரமணியம் என்கிற தமிழாசிரியரின் ஆர்வத்தால் கொணரப்படும் இதழ். அவர் வளவ. துரையன் என்கிற புனைப்பெயரில் எழுதுகிறார். சிறகு ஆரம்பித்த காலத்தில் இருந்து சங்குக்கும் எனக்கும் தொடர்பு உண்டு என்றாலும் பெரிதாக என்னை ஈர்க்க வில்லை இதழ் என்று தான் சொல்ல வேண்டும். வாசகனின் சுவாரஸ்யத்தைக் கூட்டாத வடிவமைப்பு, நெருக்கமான அச்சிட்ட வரிகள், ஒரு படைப்புக்கும் இன்னொரு படைப்புக்கும் இல்லாத இடைவெளி என்று நெருக்கடியாக வெளிவந்து கொண்டிருந்தது […]

ஜென் ஒரு புரிதல் -26

This entry is part 5 of 40 in the series 8 ஜனவரி 2012

பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த “யுவான் மெய்” யின் கவிதைகள் இவை: (கொள்கை என்னும் கவிதை ஜென் தத்துவத்தின் தனிச்சிறப்பை உணர்த்துவது ) மலை ஏறுகையில் ——————– நான் ஊதுபத்தி ஏற்றினேன் நிலத்தைப் பெருக்கினேன் ஒரு கவிதை வருவதற்காகக் காத்திருந்தேன் பிறகு நான் சிரித்தேன் மலையின் மீது என் உதவியாளர்கள் மீது ஊன்றியபடி ஏறினேன் மேகத்தின் பிசுறுகளை எவ்வளவு அப்பக்கம் தள்ளி விட்டது பார் நீல வானம் அதன் கலையில் என்னால் ஆசானாக முடியுமா? மீண்டும் நீர்வீழ்ச்சி அவதானிப்பில் […]

அகநானூறு உணர்த்தும் வாழ்வியல் அறன்கள்

This entry is part 3 of 40 in the series 8 ஜனவரி 2012

முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனித வாழ்க்கை உயர்வானது, அரிதானது. வாழ்தல் என்பது இயற்கை மனிதனுக்கு அளித்த பெருங்கருணை. காற்றும் நீரும், வெப்பமும் அள்ளக் குறையாமல் காலம் காலமாக வழங்கிவரும் இயற்கைப் பேராற்றல்கள். அவற்றின் வழி அனைத்து வசதிகளும் பெற்ற மானுடரிடம், இவ்வியற்கை ஆற்றலைச் சமமாகப் பகிர்ந்து வாழ்வை அனுபவித்து வாழாமல், தங்களுக்குள் சமயம், மொழி, இனம். சாதி போன்றவற்றால் வேறுபட்டு மனித உறவுகளைப் பிரித்தனர். வாழ்தல்; என்பதன் பொருள் […]