ராஜே: நீங்கள் படைப்பிலக்கியத்தில் ஏன் ஈடுபடவில்லை? இதே தானே அதுவும். யாரோ எழுதியதைப் பார்த்துவிட்டு ,அந்த சந்தோஷத்தை, அனுபவத்தை வெளியில் சொல்கிற உங்களால்….. வெ.சா: எழுதினது மாத்திரம் இல்லை. நடக்கிறது எதுவுமே அது எனக்கு சந்தோஷத்தை இல்லை ஏதோ தாக்கத்தைத் தந்தால், அதைப்பற்றி சொல்லணும் என்று தோன்றினால் சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால், யாரும் கேட்டால் சொல் கிறேன். அவ்வளவு தான். ராஜே: உங்களை யாரும் சிறுகதை எழுதுங்க என்று கேட்கவில்லையா? நாங்கள் கேட்கிறோம் ஒரு சிறு […]
கவியோவியத்தமிழன், பல வருடங்களாக, சிற்றிதழ் உலகில் அறியப்பட்டவர். அவ்வப் போது, தன் இலக்கிய தாகத்தின் வெளிப்பாடாக, சில இதழ்களை ஆரம்பிப்பார். அவர் ஆரம்பிக்கும் இதழ்கள் எல்லாமே, அதிர்வு தன்மை கொண்ட பெயர்களைக் கொண்டிருக்கும். பல வருடங்களுக்கு முன் அவர் அப்படி ஆரம்பித்து, நின்று போன இதழ் தான் ‘ மலம் ‘ அழகான கையெழுத்து கொண்ட நவீன ஓவியர் அவர். எல்லா ஓவியர்களுக்கும் அழகான கையெழுத்து இருப்பதில்லை. ஓவியர் ஆதிமுலத்தின் கையெழுத்து அப்படியானது. ஆனால் கவி, தன் […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com இன்றைய உலகில் இருபெரும் நிலைமைகள் காணப்படுகின்றன. ஏழ்மைநிலை, பணம் படைத்த நிலை என்பவையே அந்நிலைமைகள். உண்மையில் ஏழ்மை, ஏழை என்பன பல பொருண்மைகளில் வழங்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது. செல்வம் இல்லா வறுமைநிலையினை ஏழ்மைநிலை என்பர். ஏழ்மை நிலையில் இருப்பவனை ஏழை என்று அழைத்தனர். இவ்வேழை என்ற வறுமைநிலை குறித்து பல்வேறு கருத்துக்களை நமது முன்னோர்கள் வழங்கியுள்ளனர். ஏழை – பொருள் விளக்கம் ‘ஏழை’ என்பது செல்வமில்லா […]
ஜென் ஒரு புரிதல் – பகுதி-28 சத்யானந்தன் பகவத் கீதையின் ஆகச்சிறந்த தனித்தன்மை அது சொல்லப் பட்டிருக்கும் விதம் தான். (காந்தியடிகளுக்கே அதன் சில பகுதிகள் ஏற்புடையாதில்லை.) வேதாந்தம், இந்தியத் தத்துவ மரபு பற்றிய புரிதலுக்காக அதை வாசிப்பவர் விமர்சன நோக்கில் வாசித்தாலும் வாதப் பிரதி வாத அடிப்படையில் அது அமைந்திருப்பதைக் கண்டு வியக்காமல் இருக்க இயலாது. ஒரு நிலையில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறாயே என்று அர்ச்சுனன் கிருஷ்ணரைக் கேள்வி கேட்பதை நாம் காண்கிறோம். பெரியப்பா, […]
சிறகு இரவிச்சந்திரன் நேர்த்தி என்பது இயக்குனர் ஷங்கரின் தவிர்க்க முடியாத ஒரு தன்மை என்பது அவரது முதல் படமான ஜென்டில்மேனிலேயே பார்த்ததுதான். இது இன்னமும் பல பரிமாணங்களில் பட்டை தீட்டப்பட்டு எந்திரனில் வெளிப்பட்டது. அவர் ஒரு இந்திப் படத்தை மறுபடியும் எடுக்க இசைந்துள்ளார் என்ற போது பலரது மனங்களில் எழுந்த ஐயம் இதில் அவரது தனித் தன்மையையோ பிரம்மாண்டத்தையோ நுழைத்து விட்டாரென்றால் படம் சுவைக்காது என்பது தான். திரையுலகில் பலரும் கூட அவர் அப்படிச் செய்து […]
A Life Full Of Love பியானோவின் நோட்ஸுடன் தொடங்கிப்பின் அதே நோட்ஸ்களை வயலின் இசையோடு தொடரும் தீம் ம்யூஸிக், கொஞ்சம் சைனீஸ் டச்சுடன் ஒலிக்கத்தொடங்கி , தொடர்ந்தும் நம்மை கூடவே அழைத்துச்செல்கிறது. ரஹ்மான் சொல்லுவார் அதிகமா சைனீஸோட இசையில சிந்துபைரவி ராகம் கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்துவாங்கன்னு, அதோட அவங்க இசையின் அடிப்படையும் அதுவாவேதான் இருக்கும், கொஞ்சம் விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க இதுல சிந்துபைரவி டச் இருக்கான்னு. இன்னும் தொடர்ந்தும் கேக்கும்போது எனக்கு யானி’யோட Tribute-ம் , […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனிதனின் வாழ்வு சுற்றுச் சூழலைப் பொருத்தே அமைகின்றது. மனிதன் சூழலைக் கெடுக்காது இயற்கையுடன் இயைந்து இணைந்து வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால்தான் மனிதன் இவ்வுலகில் மகிழ்வான வாழ்வை வாழ இயலும். நம்மைச் சுற்றியுள்ள சுற்றுச் சூழலைப் பா பாதுகாத்து நிறைவான வாழ்வை வாழ வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்ட நம்முடைய முன்னோர்கள் அத்தகைய நற்சிந்தனைகளைப் பழமொழிகள் வாயிலாகப் பாங்குற மொழிந்துள்ளனர். வீடும் வெயிலும் மண்ணிற்கு அழகு […]
கடந்த 30.4.2011 அன்று வெங்கட் சாமிநாதன்: வாதங்களும் விவாதங்களும் என்ற் புத்தக வெளியீட்டை ஒட்டி சென்னை வந்திருந்த வெங்கட் சாமிநாதனை ஒரு நாள் மாலை கே.எஸ் சுப்பிரமணியம் வீட்டில் சந்தித்து அளவளாவியதில் ஒரு பின் மாலை கழிந்தது. கலந்து கொண்டவர்கள் திலீப் குமார், எம்.ராஜேந்திரன், கே. எஸ். சுப்பிரமணியம், எஸ் சாமிநாதன், பின் வெ.சா வின் நெடு நாளைய நண்பர் துரை ராஜ். அந்த அளவளாவலின் ஒரு பகுதியைக் கீழெ காணலாம். திலீப் குமார்: சாமிநாதன், நேற்று […]
ஹெச்.ஜி.ரசூல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்துறையும் கீற்று வெளியீட்டகமும் இணைந்து சூபிஞானி பீர்முகமது அப்பா குறித்த இலக்கிய உயராய்வுபன்னாட்டு இருநாள் ஆய்வரங்கைநெல்லை பல்கலைக்கழக அரங்கில் 2012 ஜனவரி 9 – 10 தேதிகளில் ஏற்பாடு செய்திருந்தது. துவக்கவிழாவிற்கு தமிழியல்துறைத்தலைவர் பேரா.முனைவர் சு. அழகேசன் தலைமைஏற்றார். பேரா. முனைவர் பே.நடராசன் வரவேற்பு சொல்லிட பண்பாடு ஆய்வாளர் முனைவர் தொ.பரமசிவன் தமிழ்மண்ணில் சூபிய வரலாறு சார்ந்த கருத்தரங்க மைய உரையை நிகழ்த்தினார். முதல் அமர்வுக்கு சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பேரா.கா.முகமது […]
கவி காளமேகத்தின் பாடல்கள் பகடிக்குப் பேர்போனவை. ஆனால் அக்காலத்தில் அதற்கு சிலேடை என்றும் இரட்டுற மொழிதல் என்றும் வழங்கப்பட்ட்து. அவருடைய பகடியின் மை படியாத எதுவுமே உலகில் இல்லை. பாம்பு, படகு, தென்னை, கடவுள் என மண்மீதுள்ள எல்லாவற்றையும் பாடல்களுக்குள் கொண்டுவந்து வைத்திருக்கிறார். நயமான வரிகளால் நம்பகத்தன்மை மிகுந்த உவமைகளோடு பகடிகளை முன்வைப்பது அவர் பாட்டுமுறை. ஒருமுறை அவர் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்றதாக ஒரு கதை உண்டு. தரிசனம் செய்துவிட்டு மண்டபத்தில் வந்து அமர்ந்தாராம். அங்கிருந்த ஒரு […]