* ஒரு கறுமைப் பொழுதை ஊற்றிக் கொண்டிருக்கிறேன் இரவின் குடுவையில் வெளிச்சத் திரள் என சிந்துகிறாய் துயரத்தின் வாசலில் கைப்பிடியளவு இதயத்தில் அழுத்தும் நினைவு நாளங்களில் முடிச்சிட்டுக் கொள்கிறது எப்போதும் முடிவற்று விரியும் கோரிக்கை யாவும் **** –இளங்கோ
ஒவ்வொரு இழவு வீடும் பெருங்குரலோடுதான் துக்கத்தை வெளிப்படுத்த ஆரம்பிக்கின்றன.பெண்கள் ஒப்பாரி வைக்க ஆண்கள் அழுகையை அடக்கிக்கொண்டு வெளியில் போய் நிற்கிறார்கள் நாட்டமை போலும் ஒரு உறவினர் தொலைபேசி மூலம் தொலைதூர சொந்தங்களுக்கு செய்தி தருகிறார் அக்கம்பக்கம் முதலில் வந்து துக்கம் விசாரிக்க மெதுவாய் கூடுகிறது கூட்டம் இறந்தவரை நடுவீட்டில் வைத்து மாலையிட்டு மரியாதை செய்து சுற்றிலும் அமர்ந்து ஒப்பாரி வைத்து புகழ் பாடத் தொடங்குகிறார்கள் சுமார் ஒரு மணி நேரம் கழிந்தபின் அக்கம்பக்கம் அகலுகிறது சொந்த பந்தம் […]
கவனமற்று இருக்கின்ற அனைத்து இருப்பு கொள்கைகள் எழுகின்ற கேள்வியை பற்றிக்கொள்கிறது தன் முனைப்பு . கேள்விகள் அழகியல் தன்மை வாய்ந்தவை கூடுதலான மனத்திரை உடையவை முக்காலத்திலும் தொன்றுத்தொட்டு வழக்கம் உடையவை . அதன் விடையில் நிறைவு பெறாது அடுத்த நிலைக்கு ஆயுத்தப்படுத்தும் மற்றுமொரு கேள்விகள் தொடர்கின்ற அழகியல் இயக்கமாகிறது . தன் பகுப்பாய்வின் தீவிரத்தன்மை ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது கற்பனையின் வரையறைகள் . கேள்விகளும் பதில்களும் ஒன்றையே தேடுதலின் நோக்கமாக கொண்டுள்ளது அவை எப்பொழுதும் நிறைவு தன்மை […]
இதுநாள் வரை பிரிந்திராத மரக்கிளை விட்டு கிளம்புகிறது பழுத்த இலை ஒன்று ….. முடிந்துவிட்ட ஆயுள் எண்ணி பெருமூச்சொன்றை பிரித்தபடி தொடங்குகிறது அதன் இறுதிப்பயணம் …. விம்மிவெடிக்கும் அதன் துயரங்கள் யார் காதிலும் கேட்டிருக்க வாய்ப்பில்லை …. இலையை பிரிந்த சோகம் தாளாமல் சுழன்று சுழன்று மரக்கிளை வைக்கும் ஒப்பாரியை கவனிக்க யாருக்கும் இங்கே விருப்பமில்லை ….. இலையொன்று போனால் துளிர் ஒன்று முளைக்கும் என்கிற சமாதானத்தையும் மரக்கிளை ஏற்ப்பதாயில்லை . இதோ ! அழுதபடி ஓடும் […]
இணைந்திருந்த போதும் ஒரு தனிமையின் துயரத்தைத் தருவதாய் இருந்தது அது. புன்னகை முகம் காட்டி ஒரு பெண் திரும்பிச் செல்லும்போது அவள் பின் உடலை ரசிக்கத் துவங்குகிறாய். எதிர்பாராமல் லௌட் ஸ்பீக்கரில் அலறும் பாடலைப் போல நாராசமாயிருக்கிறது அது. இல்லாத பியானோவின் சோகக்கட்டைகளை அமுக்கவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது என்னுள் உன்னைப் பொறுத்தவரை அது ஒரு பிம்பத்தின் மீதான ரசனை என்னைப் பொறுத்தவரை அது அடுத்த உடலின் மீதான காமம். ஒரு வேட்டையை பிடித்த திருப்தியுடன் உன் […]
* கை நீளுதலை யாசகம் என்கிறாய் யாசித்து பெறுவதாக இருப்பதில்லை எனக்கு தேவையான பார்வை பேசாதிருத்தல் அமைதி என்கிறாய் பேசி அடைவதாக இருந்ததில்லை நான் பெற்ற மௌனம் மரணித்தல் வரம் என்பாய் எதன் பொருட்டு தவம் இருந்தேனோ அதிலில்லை யாசகமோ ஒரு மௌனமோ குறைந்தபட்சம் ஒரு பார்வையோ ***** –இளங்கோ
சுற்றி வரும் சக்கரத்தின் மையப்புள்ளியில் வீற்றிருக்கிறேன் நான் சற்றுப் பதமாகவும் கொஞ்சம் இருகலாகவும் எந்த உருவமுமற்றதோர் நிலையில் ஏகாந்தம் துணையாய்க் கொண்டு சற்றுப் பொறுத்து வந்த ஓர் முழு வட்ட சுழற்சியில் மெல்ல நிலை பிறழா வண்ணம் எழுந்து ஓரமாய்ச் சாய்கிறேன்.. அருகிலேயே வளைந்து நெளிந்து சற்றே அகன்றபடி சாய்மானமாக … வியாபித்தே இருக்கிறேன் கொஞ்சம் பொறுத்தே அப்புறப்படுத்தப்பட்ட அப் பாண்டத்தின் எங்கோவோர் மூலையில் “நான்” கரைந்தோ… இல்லை முற்றிலுமோ … …. முற்றிலுமாக அழித்து போவேனா […]
எப்போதும் மௌனமாய் இருப்பதே உசிதமென இருந்து விட்டேன். யாரிடமும் பேசுவதில்லை. தவிர்க்க முடியாத தருணங்களில் ஓரிரு வார்த்தைகளை தானமாய் விட்டெறிவேன்.. என் கண்களைக் கூட பேசவிடாது குனிந்து விடுவேன். வெளியே எல்லோரும் நானிருக்குமிடம் அமைதியின் உறைவிடமென உற்சாகமாய் சொல்லிச் சென்றார்கள். நாட்கள் செல்ல செல்ல என் மௌன முகத்தின் அகத்துள் உச்சமாய் கூச்சல்.. சதா சலசலப்பும் உச்சந்தலையை குத்தும் உட்கலவரம். காதுகளற்ற அகத்தின் முகத்துள் கலவரக் காயங்கள். இரக்கமின்றி இன்னும் இறுகி இருக்கிறது வெளியே மௌனம்.
திரிபு வார்த்தைகளும் தத்துவார்த்த பிழைகளும் தின்மச் சொற்களும் தந்த ரணங்களை சுமந்து இடர் சூழ்ந்த இவ்வுலகில் பொருள் தேடி அலைகிறேன்…. துயரம் சொல்லொணாத் தவிப்புடன் உடல் நிறைக்க இறுகிப்போன சக்கையாய் மனம்…. நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால் தன்னந்தனியாய் தவிக்கும் அழுகையின் நிறம் மீளாத்துயருடன் பின் தொடரும் நிழலாய் நினைவுதிர்த்து போகின்றது……
எழும்பூரிலிருந்து ரயில் புறப்பட்டதும் எதிர் சீட் குழந்தை பாடத் தொடங்கினாள் `இரும்பிலே இருதயம் முளைக்குதோ’ செங்கல்பட்டு நெருங்கும்போது பாட்டு மாறத் தொடங்கியது `அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா’ என்று என் விருப்பமாகக் கேட்டேன் `ஏ பார் ஆப்பிள் ‘ பாடச்சொல்லி. ஒரு நிமிடம் யோசித்து விட்டு `அந்தப் பாட்டு மிஸ் வீட்டு அலமாரிக்குள் இருக்கிறது ‘என்றது குழந்தை குலுங்கி குலுங்கி சிரித்தது ரயில். – நிஷாந்தன்