ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. உலகில் தோன்றிய ஆண், பெண் என்ற இரு இனங்களில் பெண்ணினம் மட்டும் கடும் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. தமிழ் மண்ணில் மட்டுமல்ல, இது உலகின் பொது நிலையாகும். . நாம் இப்பொழுது நம் தமிழ்மண்ணின் வரலாறு பார்க்கப் போகின்றோம். அதுவும் இந்த நூற்றாண்டு வரலாறு. பெண்ணின் நலம் காக்கப் பெண் மட்டுமல்ல ஆணும் உதவிக்குத் தோள் கொடுத்தான். வேர்களூம் விழுதுகளும் தெரியாமல் போனதாலோ அல்லது ஒருங்கிணைந்த […]
2-ஜி அலைக்கற்றை ஊழலின் தாக்கம்: 2-ஜி அலைக்கற்றை (2-G Spectrum) ஊழல் இந்திய ஜனநாயகத்தில் ஒரு பெரிய நில அதிர்வு போல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அந்த நில அதிர்வின் அலைகள் இன்னும் நின்றபாடில்லை. 2011-ல் டைம்( Time) இதழ் உலகளாவின தலையாய பத்து அதிகார முறைகேடுகளில் 2-ஜி அலைக்கற்றை ஊழலை வாட்டர்கேட் ஊழலுக்கு(Watergate scandal) அடுத்து இரண்டாம் இடத்தில் தரப்படுத்துகிறது (விக்கிஃபீடியா). மேல்தட்டு மனிதரிலிருந்து கீழ்த்தட்டு மனிதர் வரை 2-ஜி அலைக்கற்றை ஊழல் பற்றிப் பேசாமலில்லை; முதல் முறையாக, […]
சாதி பேதங்கள் உயர்வு தாழ்வுகள் பற்றிப் பேசுவது நல்லது தான். எல்லோருக்கும் மிகவும் பிடித்த விஷயம் என்ற ஒன்றே போதுமே. ஆனால் சாதிக்குப் புதிய அளவிகளும் தேவையே. கட்டுரையாசிரியரின் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் மூன்று விதமான சாதிகள் தென்படுகின்றன. எந்த அடிப்படையில் மூன்று சாதிகளாகப் பிரிக்க இயன்றது என்பது அந்த அந்த சாதி பற்றிப் படிக்கும் போதே தெரிந்து விடும். அ.மனிதர் என்னும் சாதி ————————— நேர்மறையான அடையாளங்கள்: 1.தன்மானம் போற்றுவார். அதே போல் யாரையும் அவமானம் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அக்கினி -5 தாக்கு கணையை வெற்றிகரமாக ஏவி நாங்கள் ஒரு வரலாற்று மைல் கல் நட்டதாக நான் அறிவிக்கிறேன். அதனால் நமது தேசம் தாக்கு கணைப் பொறி நுணுக்கத்தை கற்றுக் கொண்ட பெருமை அடைகிறது. இப்போது இந்தியா நீட்சி எல்லைத் தாக்கு கணை ஏவும் வல்லமை பெற்றுள்ளது. அது அடைந்த உச்ச உயரம் 600 கி.மீ. (480 மைல்). அதன் முக்கட்ட ராக்கெட்டுகள் திட்டமிட்டபடி இயங்கி குறிப்பிட்ட பளுவைத் […]
ஆர்யா பட்டாவின், விதை இந்திய மண்ணில், கிமு 476ல் விழுந்தது. அவர், தனது 23 வயதில், ஆர்யபாட்டியம் எழுதினார். கணக்கின் சுவாசக்குழுக்குள் விரலைவிட்டு ஆட்டியவர். அல்ஜீப்ராவின் இதய ஒலியை கேட்டறிந்தவர். வான சாஸ்த்திரத்தின் இலக்கணத்தை வகுத்துக் கொடுத்தவர். பிரம்ம குப்தா, வான சாஸ்த்திரத்தின் நூலை எழுதி, ஆர்யபட்டாவின் அறிவு தளத்தில் புகுந்து, வானசாஸ்திரத்தை உலகிற்கு எடுத்து சொன்னவர். பாஸ்கர ஆச்சார்யா கிமு 1114 ல், இந்திய மண்ணில் பிறந்தவர்.இவர், ஆர்யபட்டாவின், விதிகளை கடைப்பிடித்து, பூஜ்ஜியத்திற்கு, விடைக்கண்டுப்பிடித்து, இந்தியாவின் பெருமையை, […]
நீ வாழும் உலகம் என்பது என்ன? அவ்வுலகில் வாழும் போது, நீ எதிர்கொள்ளும் நேர்மறை எதிர்மறை விஷயங்கள் யாவை. அவற்றைப் புரிந்து கொள்வதும் அவற்றிற்கேற்ப வினயாற்றலுமே வெற்றியை நோக்கி இட்டு செல்லும். தன்னை அறிவதும்,தன்னைச் சுற்றியுள்ளவர்களை அறிவதும், சூழலை அறிவதும், சுற்றத்தை அறிவதும், காடு, மலை, கழனி, மேடு, பள்ளம், வயல், வரப்பு, மாடு, மயில், மான், புலி, சிங்கம், கரடி, புல், பூண்டு, பூச்சி, புழு மற்றும் இந்த மண் என எல்லாவற்றிற்குமான அறிதல் தான் […]
சாதிப் பிரிவுகள் எதுவும் ஹிந்து சமய ஸ்ருதிகளிலோ ஸ்மிருதிகளிலோ குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஹிந்து சமூகத்தில் எப்படியோ பல நூறு சாதிகள் உட்பிரிவுகளுடன் காலங் காலமாக நடைமுறையில் இருந்து வருகின்றன. வருணாசிரம தர்மத்துக்கும் சாதிகளின் கட்டமைப்புக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது என்று திரும்பத் திரும்ப நிரூபித்தாலும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இரண்டையும் ஒன்று படுத்திக் காட்டும் போக்கு இருந்துகொண்டுதான் உள்ளது. ஒவ்வொரு சாதியிலும் பல உட்பிரிவுகள் இருப்பதிலேயிருந்தே குண கர்ம விசேஷப் பிரகாரம் பிரிவுகள் அமைந்த வர்ணாசிரமத்துக்கும் சாதி அமைப்பிற்கும் […]
ஆன்டரூ நியுபெர்க்கும் மார்க் ராபர்ட் வால்ட்மானும் இணைந்து எழுதிய “நாம் நம்புகிற விஷயங்களை நாம் ஏன் நம்புகிறோம்?”நூலின் அடிப்படை கருத்துகளையும் ஆய்வுகளையும் நாம் சென்ற பதிவில் பார்த்தோம். இந்த புத்தகம் பற்றியும் பொதுவாக நியுபெர்க் முன்வைக்கும் ஆய்வையும் அதன் தர்க்கங்களையும் பற்றிய கேள்விகளையும் அதற்கு அவர் தரும் பதில்களையும் இங்கே பார்க்கலாம். கேள்வி : நாம் நம்புகிற விஷயங்களை நாம் ஏன் நம்புகிறோம்? நம்பிக்கை நான்கு முக்கிய விஷயங்களைச் சார்ந்திருக்கிறது – புலனறிவு, உணர்சசிகள், அறிதல், சமூக […]
அ. ஜெயபால் தமிழகத்தில் நாடோடிகள், மானிடவியல் கோட்பாடுகள், அடையாள மீட்பு, தலித்துகள்-பெண்கள்-தமிழர்கள் , ஆதி மருத்துவர் போன்ற அடித்தள ஆய்வு சார்ந்த நூல்களை தமிழுலகிற்கு கொடுத்திருக்கின்ற வல்லினம் பதிப்பகம், ஜூலை 2006 ல் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் (இனவரைவியல் ஆய்வு) என்ற ஓர் ஆழமான நூலை தந்திருப்பதன் மூலம் தன்னுடைய இருப்பை வெளிபடுத்தியிருக்கிறது. இந்நூல் நாட்டார் வழக்காற்றியலின் சிரத்தையான ஆய்வாளர் ஆ. தனஞ்செயன் அவர்களின் பனிரெண்டு கட்டுரை தொகுப்புகள் ஆகும். 19 ஆம் நூற்றாண்டில் உருப்பெற்ற ‘Folklore’ […]
புறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை வாய்மையால் காணப் படும் சென்னை வாழ்க்கை ஆறு மாதங்கள்தான். ஆனால் கிடைத்த அனுபவங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவுகளைச் சுமந்து வருகின்றன.. 1962 வரை, அதாவது பிள்ளைப் பிராயத்தி லிருந்து கிடைத்த பயிற்சிகள், அனுபவங்கள் எல்லாம் என் வாழ்க்கைப் பயணத்திற்கு அஸ்திவாரம். சென்னையில் வரலாற்று நாயகிகளை நேரில் பார்க்கவும் மகிழ்ந்தேன். பெண்ணின் முன்னேற்றத்திற்குப் பெண்ணின் உழைப்பை நேரில் கண்ட பொழுது வியந்தேன். அவைகளை விளக்கமாகப் பின்னர் கூறுகின்றேன். இப்பொழுது நான் சென்ற பயிற்சி […]