நாம் பொருட்களின் மதிப்பை உயர்த்திக் காட்ட, தங்க முலாம் பூசிய பொருட்களை வாங்குவோம். பயன்படுத்துவோம். அவற்றை வீட்டில் பல பகுதிகளிலும் அலங்காரப் பொருட்களாக வைத்திருப்போம். ஆனால் 2001 முதல் ஹாங்காங்கின் தங்கக் கழிப்பறை வசித்திரங்களில் ஒரு விசித்திரம். 380 இலட்சம் ஹாங்காங் டாலர்கள் செலவில் இதை அமைத்தவர் லம் சாய் விங் என்பவர். இரு அறைகள் முழுவதுமே 380 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டு, கழிப்பிடமும் தங்கத்தால் உருவாக்கப்பட்டது. கைக்கழுவும் இடமும், கழிப்பறை பிரஷ்களும், காகிதத் தாங்கும் கொக்கிகளும், […]
அந்நிய ஆதிக்கத்தின் அடிமைத் தளையைக் களைய, வீறு கொண்டு எழுந்த இந்திய தேசத் தியாகிகளின் வரலாற்றில் , சுதந்திரப் போராளி திருமதி சுசேதா கிருபளானிக்கும் மிக முக்கிய இடமுண்டு! ஒரு இந்திய மாநிலத்தின் முதல் பெண் முதல் அமைச்சர் என்ற பெரும் பேற்றையும் பெற்றவர் சுசேதா அவர்கள். வங்காளக் குடும்பத்தைச் சேர்ந்த எஸ்.என்.மஜீம்தார் என்பவருக்கு 1906ஆம் ஆண்டு , ஹரியானா மாநிலம், அம்பாலா எனும் ஊரில் பிறந்தார். இவர் தந்தை அரசாங்க மருத்துவராகவும், தேசியவாதியாகவும் இருந்தவர். தில்லியிலுள்ள […]
வினாத்தொகுப்பு : பாரதி இளவேனில் {அன்பாதவன்} { மூன்றாம் பகுதி } ஆசிரியப் பணியில் மறக்கஇயலா சம்பவங்கள் —————? முப்பத்தெட்டாண்டு பணி குறித்து நிறையவே பேச வேண்டு ம். இடைநிலை ஆசிரியனா கப் பணியேற்ற எனக்கு உடனேயே பள்ளியில் இலக்கிய மன்றத் தலைவர் பொறுப்பும் ஆசிரியர் இயக்கப் பொறுப்பும் கிடைத்தன. ஆசிரியர் இயக்கத்தில் கொண்ட ஈடுபாடு மாநில இயக்கப் பொறுப்பாளர்கள் என்னை அறியவும் மதுரை, கோவை, சென்னை,ஆகிய நகரங்களில் நடைபெற்ற மாநில மாநாடுகளுக்கு மிதிவண்டியில் செல்லவும் வழிவகுத்தது. […]
தற்போது ‘டொராண்டோ’ வந்திருக்கும் கலை, இலக்கிய விமர்சகரான எழுத்தாளர் யமுனா ராஜேந்திரனை தமிழ் கலை, இலக்கிய உலகு நன்கறியும். கோவையில் பிறந்த யமுனா ராஜேந்திரன் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். அரசியல், கலை, இலக்கிய விமர்சகத்துறையில், மொழிபெயர்ப்புத் துறையில் ஓய்வற்று அவர் ஆற்றிவரும் பணி என்னைப் பிரமிக்க வைப்பதுண்டு. பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றிவருமிவரை எழுத்தாளர் ‘கனவுச்சிறை’ தேவகாந்தனின் இருப்பிடத்தில் சந்திக்கும் வாய்ப்பு இன்று – மே 17, 2012 – கிடைத்தது. இவர்களுடன் எழுத்தாளர் டானியல் […]
30 வருடங்களுக்கு முன் மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆனந்த விகடனில் “சொல்” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினார். பின்னாளில் அந்தக் கவிதை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்னும் அவரது நாவல் சினிமாவாக ஆன போது அதில் பாட்டாக வந்தது. அதில் வரும் ஒரு பத்தி இது: கும்பிடச் சொல்லுகிறேன்-உங்களை கும்பிட்டுச் சொல்கிறேன்- என்னைக் கொல்வதும் கொன்று கோயிலில் வைப்பதும் கொள்கை உமக்கென்றால்- உம்முடன் கூடி இருப்பதுண்டோ? இந்த பத்தியில் ஜெயகாந்தன் வெகு ஜனத்தின் மனப்பாங்கை […]
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி, இவ்வையம் தழைக்குமாம் மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம் மூடக் கட்டுக்கள் யாவும் தகர்ப்பராம் ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம் அச்சம், நாணம் விடுத்து, நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடன் ஞானச் செருக்குடன் இருக்கும் பெண், ஆண்மக்களும் போற்றிட வாழ்வர் என்பதையும் கூறியுள்ளார். பெண் விடுதலை என்ற பேச்சு வந்தாலே அங்கே பாரதியைப் பார்க்கலாம். பட்டங்கள் […]
(குறிப்பு: கௌதம சித்தார்த்தன், முல்லை பெரியாறு பிரச்சனை குறித்து என்னுடைய கருத்தை பதிவு செய்து தரச் சொல்லிக் கேட்டிருந்தார். பல பேருடைய கருத்துக்களும் திரட்டி தொகுப்பு புத்தகக் கண்காட்சியில் கொண்டு வரப் போவதாகவும், ஆனால் அது என்ன காரணத்தினாலோ நூலாக வடிவம் பெறவில்லை எனது கட்டுரை இதோ) பட்டி வீரன் பட்டியில் வசிக்கும் 99 வயதான எனது பாட்டனாரான நா. தில்லைக் கோவிந்தன் 2005 இல் சந்தித்த போது மணல் திருட்டு , மணல் கொள்ளை என […]
கஞ்சி குடிப்பதற்கில்லார்-அதன் காரணம் இவை என்னுன் அறிவுமில்லார் பஞ்சமோ பஞ்சமென -நிதம் பதைபதைப்பார் மனம் துடிதுடிப்பார் நெஞ்சு பொறுக்குதில்லையே-இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்னும் சுப்ரமணிய பாரதியாரின் ஆதங்கமான பாடலை கடந்த வாரம் ஒரு பொது நல மனுவில் வணக்கத்துக்குரிய சுப்ரீம் கோர்ட்டின் கருத்து நினைவு படுத்தியது. ‘ப்ளாஸ்டிக் பைகள் அணு குண்டை விட ஆபத்தானவை” என்ற கருத்தை மேதகு நீதிபதிகள் கூறியுள்ளனர். குடி நீருக்கான நன்னீர் வாய்க்கால்கள், குழாய்கள், கழிவு நீர் ஜல […]
உலகத்தின் மக்கள் தொகையில் மிகச் சிறுபான்மையினராக சற்றொப்ப 0.25% எண்ணிக்கையில் இருக்கும் யூதர்கள், அறிவுத்திறனில் வல்லவர்களாக இருக்கிறார்கள். அமெரிக்கா மக்கள் தொகையில் 3% ஆக இருக்கும் யூதர்கள் அமெரிக்காவில் நோபல் பரிசு பெற்றவர்களின் எண்ணிக்கையில் 27%. கணினித் துறையில் மிகச் சிறந்த விருதுகள் பெற்றவர்களும் இவர்களே. ஏன், செஸ் விளையாட்டில் உலகச் சாம்பியன்களின் 50% யூதர்கள்தான். ஐரோப்பிய மக்கள் சமூகத்தில் யூதர்களின் அறிவுத்திறன் (அதாவது IQ ) முன்னிலை வகிக்கிறது. மிக அதிகமாக வன்கொடுமைகளை அனுபவித்த இனமாகவும் […]
அசோக மித்ரனின், 82வது வயதில், அவர் பிறந்த தெலுங்கு பூமி,தனது என்டிஆர் இலக்கிய விருதை கொடுத்து கொளரவித்துள்ளது. அசோகமித்ரனை, நினைக்கும் போது, பழக இனிமையானவர், எளிமையானவர், எல்லாவற்றிக்கும் மேலாக, அவர் இன்றுவரை நல்ல மனிதவராகவே வாழ்ந்து வருகின்றார். ஆந்திர மண்ணில் விழுந்த விதை, வாழ்வில் பல இடர்பாடுகளை தாண்டி, சென்னைக்கு வந்தவர். எல்லோரையும் வாழ வைத்த சென்னை, அசோகமித்ரனையும், கைவிடவில்லை. இன்று, தழிழ் மண்ணையும்-தெலுங்கு தேசத்தையும் இலக்கிய மூலமாக இணைத்தவர். சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை […]