எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

This entry is part 26 of 45 in the series 26 பிப்ரவரி 2012

  எஸ்ராமகிருஷ்ணனுக்கு விருது கிடைத்ததற்காக பாராட்டு விழாவில் தமிழகக்த்தின் சூப்பர் ஸ்டார் கலந்து கொண்டார். பெருமைக்குரிய விஷயம் தான் இது. எழுத்தாளனுக்கு இப்படி ஒரு கௌரவம் தமிழ் நாட்டில் என்ன தவம் செய்தனை என்று பாடலாம். ஆனால் அந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து, ஞானசம்பந்தம் இன்ன பிற பிரபலங்கள் எஸ் ராமகிருஷ்ணன் படைப்பை ஆழப் படித்து ஆய்வு செய்து பெருமை கொண்டாட வந்தார்களா அல்லது சூப்பர் ஸ்டாரின் அருகாமையில் நானும் இருக்கிஏன் என்று ஆஜர் […]

வரலாற்றை இழந்துவரும் சென்னை

This entry is part 25 of 45 in the series 26 பிப்ரவரி 2012

பழம் பெருமை பேசி மகிழ்வதில் தமிழனுக்கு அலாதி இன்பம். தவறில்லை. ஆனால் பேச்சில் உள்ள ஆர்வம் அந்தப் பெருமைக்குக் காரணமான வரலாற்றுத் தடங்களை அழியாமல் பாதுகாக்கும் செயல் என்று வருகிறபோது எந்த அளவுக்கு இருக்கிறது என்று பார்த்தால் மனசு சோர்ந்துதான் போகிறது. கால ஓட்டத்திற்கு ஏற்ப வளர்ச்சி அவசியந்தான். ஆனால் ஒவ்வொரு சாதாரண ஊருக்குமேகூட ஒரு பின்னணியும் அதற்கென்றே ஒரு பிரத்தியேக வரலாறும் வடிவழகும் உண்டு. அது சிதைந்துவிடாமல் வளர்ச்சி அமைவதுதான் முறையாக இருக்கும். அதிலும் சென்னை […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 1

This entry is part 18 of 45 in the series 26 பிப்ரவரி 2012

சீதாலட்சுமி எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு ..- வாழ்வியலின் வழிகாட்டி —————————————————- எட்டயபுரத்தில் பெருமாள் கோயிலுக்கருகிலுள்ள தெருவில் ஓர் சிறிய வீட்டின் கொல்லைப் புறத்தில் ஒருவர் நின்று கொண்டு சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தார். காலைப் பொழுது. கிணற்றை யொட்டி ஓர் முருங்கை மரம், தள்ளி ஓர் வேப்பமரம், சில காட்டுச் செடிகள். சுற்றி வந்த கண்களுக்கு அக்காட்சி நிறைவைக் கொடுக்கவில்லை. வானத்தைப் பார்த்தார். காணி நிலம் வேண்டும். பத்து பதினைந்து தென்னை மரங்களாவது […]

பேஸ்புக் பயன்பாடுகள் – 3

This entry is part 13 of 45 in the series 26 பிப்ரவரி 2012

“என்னப்பா ஸ_ப்பரான டீ-சர்ட் போட்டிருக்கே..” “ஆமாம் சுரேஷ்.. எனக்கு பேஸ்புக் போட்டி ஒண்ணுல டீ-சர்ட் பரிசாக கிடைச்சது” “என்ன பேஸ்புக் போட்டியா? அதுல பரிசா? அது எப்படி?” “காதே பசிபிக் விமான நிறுவனம் பேஸ்புக்ல்ல சுனாமி வந்த ஜப்பான் பக்கமா வியாபாரத்தைப் பெருக்க ஒரு போட்டி நடத்தினாங்க. ஹாங்காங் மக்கள் ஜப்பான் பற்றிய போட்டோக்களையும், சுவையான அனுபவங்களையும், ஜப்பான் மக்கள் ஹாங்காங் பற்றிய போட்டோக்களையும், சுவையான அனுபவங்களையும் பேஸ்புக்கிலேயே பதிய வேண்டும். அதில் நல்லப் பதிவுகளுக்குப் பரிசுன்னு […]

ஜென் ஒரு புரிதல்- பகுதி 31

This entry is part 12 of 45 in the series 26 பிப்ரவரி 2012

இருபதாம் நூற்றாண்டில் வெளியான “குருவியின் வெற்றி” என்னும் கவிதைத் தொகுதி “ஷிங்கிசி தகஹாஷி” என்னும் ஜென் சிந்தனையாளரின் படைப்பாகும். சமகாலத்திய ஜப்பானியக் கவிஞர்களுள் இவர் முக்கியமானவர். இவரது கவிதைகளில் சிலவற்றை வாசிப்போம். ஓசையில் ஒரு வனம் _______________ மேலெழும் புகையில் பைன் மரம் அசைகிறது ஓசையில் ஒரு வனம் டஃபோடில் பூக்களை நதி ஒரு கண்ணாடி போலப் பிரதிபலிக்கும் இடத்தின் என் கால்கள் தாமே தோற்கின்றன ஒரு குளிர் காற்று ஸஸாங்கா பூக்களின் வெண்மை நினைவுகள் வெதுப்பான […]

நினைவுகளின் சுவட்டில் – (87)

This entry is part 3 of 45 in the series 26 பிப்ரவரி 2012

இல்லஸ்ட்ரேட்டட் வீகலி ஆஃப் இந்தியா எனக்குப் பரிச்சயம் ஆகி நான் படிக்கத் தொடங்கியபோது சி.ஆர்.மண்டி என்பவர் அதன் ஆசிரியராக இருந்தார். பொதுவான அரசியல் சமூகம் பற்றிய கட்டுரைகளும் அது சம்பந்தமான படங்கள் நிறைந்தும் அதில் இருந்தன. அது போக, இந்தியாவில் அப்போது தெரியவந்த ஓவியர்களின் ஓவியங்களூம் அவ்வப்போது முழுப்பக்க அளவில் அதில் வந்தன. அது மாத்திரமல்ல.இன்னம் இரண்டு விஷயங்கள் வீக்லியை ஒரு பகுதி மக்களின் அபிமான பத்திரிகையாகவும் ஆக்கின. ஒன்று அதில் அந்தக் காலத்து ஆனந்த விகடனில் […]

அ. முத்துலிங்கம் – ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல்

This entry is part 2 of 45 in the series 26 பிப்ரவரி 2012

ஈழத் தமிழ்க்குரல் என்றுமே ஒரு வேதனையும் போராட்டமும் கொந்தளிக்கும் குரல் தான். என்றுமே. அதுவும் உரத்த குரலாகத் தான் இருந்து வந்துள்ளது. அப்படித்தான் இருப்பதும் சாத்தியம். அது வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து வெளிக்கிளர்வது. வேறு எப்படியாகவும் அது இருக்க முடியாது. இன்றும் சரி, இலங்கை சுதந்திரம் பெற்று, சேனனாயக தமிழருக்கு குடியுரிமை மறுக்கத் தொடங்கி, பின் வந்த பண்டாரநாயக சிங்களத்திற்கு முதலிடம் கொடுக்கத் தொடங்கிம், பின் அடுத்தடுத்து வந்த தமிழ் இனத்தையே குறி வைத்த அடக்கு முறை அடுத்தடுத்து […]

தமிழகத்தின் ஹம்ஸா கஷ்காரியும் சவுதி அரேபியாவின் மனுஷ்யபுத்திரனும்

This entry is part 30 of 31 in the series 19 பிப்ரவரி 2012

// இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் சம்பந்தமான பிரச்சினைகளில் எடுக்கப்படும் நிலைப்பாடுகள் பல சமயங்களில் பெரிதும் சுயசார்புகளை மையமாகக்கொண்டிருக்கின்றன. இவை ஒருபிரச்சினையின் ஆதாரமான கேள்விகளை பலவீனமடையச் செய்துவிடுகின்றன. பாதிக்கப்படும் நபர்களின் பின்புலங்கள் முரண்பாடுகளைக் காட்டிலும் முக்கியமானவை ஒரு சமூகத்தில் அரசு எந்திரத்தின் அதிகாரத்திற்கும் சிவில் உரிமைளுக்கும் இடையிலான பிரச்சினைகள். இந்த உரிமைகளை நாம் ஒருமுறை பாதுகாக்கத் தவறினால் அவற்றை மீண்டும் அடைவது கடினம். இங்கு பத்திரிகையாளர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் பல சயங்களில் இரட்டை நிலைப்பாடுகளே இருக்கின்றன. ஒடுக்குமுறை சார்ந்த பிரச்சினைகளில் […]

ஐசிஐசிஐ வங்கியின் மென்பொருள் பாதுகாப்பானதா…?

This entry is part 25 of 31 in the series 19 பிப்ரவரி 2012

இந்திய வங்கிகளின் ஆன் லைன் வசதியில் ஐசிஐசியை நவீனமாகவும் அதன் பயனீட்டாளர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு உபயோகிப்பதற்கு இலகுவாகவும் அதன் இணையமூல சேவையில் முன் நிற்கிறது. ஆனால், அதில் சில முறை தவறான தகவல்கள் வருகின்றன,,, அது பற்றி எழுதினாலும் பதில் வருவதில்லை… மென்பொருளின் கவனிக்கப்படாத, சீராக எழுதப்படாத உத்திரவுகள் பல குழப்பங்களையும் இழப்புகளையும் ஏற்படுத்தவே செய்யும். உலகமே திரண்டு ஒப்பாரி வைத்த Y2K விஷயம் பற்றி சற்றும் அக்கறையின்றி தவறான அதுவும் மிக மிகத் தவறான தகவல் […]

இஸ்லாத்தின் உடனான மார்க்ஸிய உரையாடல்

This entry is part 22 of 31 in the series 19 பிப்ரவரி 2012

முனைவர் ந.முத்துமோகனின் மார்க்சிய உரையாடல்கள் 1254 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு நூல். பெருங்கதையாடல்போல் உடனடிப் பார்வைக்கு குறுக்கும் நெடுக்குமாக விவாதங்கள் அலைபாயும் ஒரு கலைக்களஞ்சியமாக உருவாகி உள்ளது. முத்துமோகனின் ஆய்வியல் பயணத்தில் இந்தியத்தத்துவமரபு, ஐரோப்பியத்துவ மரபு, தமிழ்தத்துவமரபு ஊடாட்டம் கொள்கின்றன. எமிலிதர்கைமும், மாக்ஸ்வேபரும் மதம்பற்றி பேசியதை உரையாடல் செய்கின்றன. தத்துவங்கள், மதங்கள், அமைப்பியல், பின்நவீனத்துவம், பின்காலனியம் சார்ந்த விவாதங்களை மார்க்ஸிய பின்புலத்தோடு வாசகனிடத்தில் உரையாட முன்வருகின்றன. எதிர்க்கதையாடல்களின் ஒலிகளை தன்னுள் நிரப்பி வைத்த எழுத்து உண்மை, […]