மதத்தின் பெயரால் அத்துமீறல்

This entry is part 1 of 41 in the series 13 நவம்பர் 2011

ஏ. ஆர். கமாலுதீன்,சென்னை காலச்சுவடு அக்டோபர் இதழில் கடிதம் பகுதியில் வந்துள்ள செந்தியின் கடிதம் பற்றிச் சில உண்மைகளை தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது. செப்டம்பர் இதழில் வெளியான ‘அவர்களுடைய விருப்பங்களே எமக்குச் சட்டங்கள்’ ‘தனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு’ ஆகிய இரு கட்டுரைகளையும் இணைத்துப் பார்ப்பது அறியாமையின் உச்சகட்டம். இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் இறைவன் அருளித்தந்த வேதமான குர்ஆனும் அதற்கு விளக்கமாக வாழ்ந்து காட்டிய நபிகள் நாயகம் (ஸல்லலாஹி அலைவஸல்லம்) அவர்களின் வாழ்க்கையுமே சட்ட மூலாதாரங்கள். இதற்கு முரண்படும் எல்லாமே […]

ஜெயலலிதா எதை தேர்ந்தெடுக்கப்போகிறார் ?

This entry is part 21 of 41 in the series 13 நவம்பர் 2011

சந்திரபாபு நாயுடு முதல்வர்களுக்கெல்லாம் ரோல் மாடல் என பத்திரிக்கைகள் பாராட்டின. ஹைதராபாத்தை சைபராபாத் ( cyberabad ) ஆக, கணினி மயமாக்கி ஆந்திராவை வளர்த்து விட்ட்தாக அறிவு ஜீவிகள் பாராட்டினார்கள்.  நான் முதல்வர் அல்லன். முதன்மை செயல் அலுவலன் என கார்ப்பரேட் அதிகாரி போல அவர் பேட்டி கொடுத்தார். அவர் முதல்வராக இருந்த்து போதும். பிரதமராக வேண்டும் என அறிவு ஜீவுகள் கெஞ்சினார்கள். ஆனால் தேர்தல் வந்தபோது , தோல்வி அடைந்து வெளியேறிய அவர் , இன்று […]

இதுவும் அதுவும் உதுவும் – 4

This entry is part 37 of 41 in the series 13 நவம்பர் 2011

இரா.முருகன் சென்னையின் வேனல் கால முகம் யாது? தெரு ஓரத்தில் ஆலைக் கரும்பைப் பிழிந்து அழுக்குப் பனிக் கட்டிச் சீவலும், எலுமிச்சை சாறும் சேர்த்து நுரைக்க நுரைக்க கிளாஸ் டம்ளரில் நீட்டும் வண்டி. அதன் பக்கம் வியர்த்து விறுவிறுத்து, கையில் பிடித்த சூட்கேஸோடு காத்திருந்து, வாங்கிக் குடித்த பிறகு சிகரெட் பற்ற வைக்கும் மெடிக்கல் ரெப்ரசெண்டேடிவாக அந்த முகம் எனக்குத் தென்படும். டிசம்பர் பதினைந்திலிருந்து ஜனவரி பதினைந்து வரை குறுகி வரும் குளிர் காலத்தில் பாதி நகரம் […]

தொலைந்து கொண்டிருக்கும் அடையாளங்கள்

This entry is part 53 of 53 in the series 6 நவம்பர் 2011

மனிதனாக பிறந்த ஒவ்வொருவறுக்கும் பல அடையாளங்கள் வாழ்கையில் தேவைப்படுகிறது. இந்த அடையாளங்களே அவனது வாழ்கையின் பல பரிமாணங்களையும் நிர்மாணிக்கிறது. பல அடையாளங்கள் காலப்போக்கில் ஒருவரது வெற்றி தோல்விகளை வைத்து மாறும் தன்மை கொண்டது. ஆனால் சில அடையாளங்கள் என்றுமே மாறாது நிலைத்துதிருப்பவை. (அவை பரம்பரை பரம்பரையாக தொன்றுதொட்டு வரும் பண்பாடுகளான மொழி, இனம், மதம், தாய்நாடு, கலாசாரம், ஆண்மிகம் பாரம்பரியங்கள் ஆகும். மேலும் இவை ஒரு தாய்மையின் அடையாளங்களாகவே போற்றப்பட்டு வந்தன. எனவே இப்படிப்பட்ட அடையாளங்களை ஒருவன் […]

இந்தியா – குறைந்த விலை பூகோளம்

This entry is part 48 of 53 in the series 6 நவம்பர் 2011

இந்தியாவுக்கு விஜயம் செய்யும் மேலை நாட்டு உயர் அதிகாரிகள் பாடும் பல்லவிகள் உடைந்து போன பழைய ரிக்கார்டு போல அலுப்பூட்டுபவை. முதலில் இந்தியர்களின் ஆங்கில அறிவை புகழ்வார்கள். அடுத்தபடி இந்தியா உருவாக்கும் ஏராளமான விஞ்ஞான மற்றும் பொறியியல் பட்டதாரிகள் பற்றி ஓஹோ என்று புகழ்வார்கள். அடுத்தபடி இந்தியாவில் தொழில் ஆரம்பிக்க போவதாகவும் பல ஆயிர இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு என்பார்கள். பிறகு, மேலை நாட்டில் படித்த இந்தியர் ஒருவரை மேலாளராக அறிமுகப் படுத்திவிட்டு விமானம் பிடித்து அவர்கள் […]

இதுவும் அதுவும் உதுவும் -3

This entry is part 37 of 53 in the series 6 நவம்பர் 2011

வாழ்க்கை வரலாறுகள் படிக்க சுவாரசியமானவை – அவற்றில் மெயின் கதாபாத்திரமாக வருகிறவர்களுக்கு. சுயசரிதம் இன்னும் விசேஷமானது. உயிரோடு இருக்கும்போதே கடியாரத்தின் முள்ளைப் பின்னால் நகர்த்தி, பழைய காலண்டரை சுவரில் ஆணியடித்து மாட்டி, ஏற்கனவே நடந்ததை எல்லாம், இப்படி நடந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நாம் நினைக்கிற படி மாற்றி அமைப்பது. இங்கே ஒரு காந்தி, அங்கே ஒரு லூயி பாஸ்டர் இப்படி விரல் விட்டு எண்ணக் கூடியவர்களின் நேர்மையான சுயவரலாறுகளின் எண்ணிக்கை, வாழ்க்கை வரலாற்று புத்தகங்களை ஒட்டுமொத்தமாகக் […]

நானும் நம்பிராஜனும்

This entry is part 32 of 53 in the series 6 நவம்பர் 2011

நம்பிராஜன் என்கிற விக்கிரமாதித்யன் நம்பியை நான் சந்தித்தது ஒரு சுவையான அனுபவம். இருபது வருடங்களாக இடைவெளீவிட்டு விருட்சம் சிற்றிதழை நடத்திக் கொண்டிருக்கும் அழகியசிங்கர் என்கிற சந்திரமௌலியும் ரிஷி என்கி ற பெயரில் கவிதை எழுதிவரும் லதா ராமகிருஷ்ணனும் கொஞ்ச காலம் நடத்திய ‘ பொருனை ‘ என்கிற இலக்கிய அமைப்பின் கூட்டம் ஒன்று ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு கிண்டி ஸ்டேட் வங்கியின் மாடியில் நடந்தது. பல இடங்களிலிருந்து கவிஞர்கள் அங்கே ஒன்று கூடியிருந்தார்கள். கிழக்கு பதிப்பகம் பா.ராகவன் […]

‘மூங்கில் மூச்சு’ சுகாவின் “தாயார் சன்னதி” கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை

This entry is part 11 of 53 in the series 6 நவம்பர் 2011

-ராமலக்ஷ்மி எழுத்து என்பது ஒரு சிற்பத்தைப் போல ஒரு கல்வெட்டைப் போல தான் வாழ்ந்த காலத்தை வருங்காலத்துக்கு எடுத்துச் செல்லும் ஆவணமாக அமைந்து போகையில் எழுதப்பட்ட காலத்தில் கொண்டாடப்பட்டு மக்கள் மனதில் இடம் பெறுவதையெல்லாமும் தாண்டி வருங்காலம் வியந்து போற்றுவதாக உயர்ந்து நின்று விடும். கவனிப்பற்று போகும் அத்தகு எழுத்துக்கள் கூட பின்னாளில் எவராலேனும் புதையல் எனக் கண்டெடுக்கப்பட்டதும் நடந்திருக்கிறது. ஆனால் ஆசிரியர் சுகாவுக்கு சக காலத்திலேயே அந்த அங்கீகாரத்தை ஆனந்த விகடன் தந்திருந்தது ‘மூங்கில் மூச்சு’ […]

தமிழ் மகனின் வெட்டுப்புலி- திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கிய பதிவு

This entry is part 4 of 53 in the series 6 நவம்பர் 2011

திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கிய பதிவு கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ் நாடு பெரும் சமூக மாற்றங்களை, அரசியல் மாற்றங்களை, கண்டிருக்கிறது. இம்மாற்றங்களின் விளைவாக வாழ்க்கை மாறியுள்ளது. வாழ்க்கை மதிப்புகளும் மாறியுள்ளன. ஆனால் இந்த அரசியல் போராட்டங்களோ அவற்றின் பின்னிருந்த உந்துசக்திகளோ பார்வைகளோ மாறிய வாழ்க்கை இலக்கியத்தில் , கலைகளில் பதிவு பெற்றதில்லை. காரணம் இவை எவற்றிலும் உண்மை இருந்தது இல்லை. சத்தம் பெரிதாக இருக்கலாம். ஆனால், ஆழ்மனதில் ரத்தத்தில் கொதிநிலையில், அனுபவத்தில் இல்லாத […]

கதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…

This entry is part 3 of 53 in the series 6 நவம்பர் 2011

நாகரத்தினம் கிருஷ்ணா எதிர்பார்த்தைதைப்போலவே சாலைமுழுவதும் பனிமூடியும் பனிஉறைந்தும் வாகனஓட்டத்தை கடுமையாக்கியிருந்தது. வாகன ஓட்டியின் சாமர்த்தியத்தாலேதான் விபத்தின்றி கடைசியில் ஸ்டாலின் இருப்பிடத்தை அடைய முடிந்தது. அங்கே போனபோதுதான் தெரிந்தது, கட்சியின் முக்கிய தலைவர்களின் வாகனங்கள் அனைத்தும் வரிசை கட்டி நின்றன. நிகிடா குருஷ்சேவ்க்கு புரிந்துகொண்டார். ஏதோ முக்கிய ஆலோசனைக்காகவே தலைவர்கள் அனைவரையும் கட்சியின் முதன்மைச் செயலர் அங்கே வரவழைத்திருக்கவேண்டுமென்பது அவரது ஊகம். அது நியாயமானதுங்கூட. தலைவர்கள் வரிசையில் குருஷ்சேவுக்கான அப்போதைய இடம் அநேகமாக ஏழோ எட்டோ, அப்படிப்பார்த்தால் இவருக்கு […]