பேராசிரியர் எஸ். பசுபதி அவர்களின் பிரிவுத்துயர் பகிர்வு

This entry is part 9 of 11 in the series 19 பெப்ருவரி 2023

குரு அரவிந்தன். பேராசிரியர் பசுபதி அவர்களை கனடாவில் தான் முதன் முதலாகச் சந்தித்தேன். அமைதியான, சிரித்த முகத்தோடு எல்லோரோடும் அன்பாகப் பழக்ககூடிய ஆழ்ந்த இலக்கிய அறிவு கொண்ட மனிதராக அவரை என்னால் இனம் காணமுடிந்தது. அதன்பின் அவரை அடிக்கடி ரொறன்ரோ தமிழ் சங்கத்தில் சந்திப்பதுண்டு, அவரது உரைகளையும் கேட்டிருக்கின்றேன். அதுமட்டுமல்ல, அவரோடு ஒருநாள் உரையாடியபோது, அவர் தன்னை எனது வாசகன் என்று சொல்லி என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்திருந்தார். ரொறன்ரோவில் நடந்த ஒரு நிகழ்வில், சிந்தனைப்பூக்கள் எஸ். பத்மநாதன் […]

வரிதான் நாட்டின் வருமானம்

This entry is part 3 of 11 in the series 19 பெப்ருவரி 2023

முனைவர் என்.பத்ரி                ஒரு அரசுக்கு வருமானம் என்பது அந்நாட்டின் மக்கள் செலுத்தும் பல்வேறு வரிகள் மூலம் கிடைக்க கூடிய வருவாயை குறிக்கிறது. அதை கொண்டு தான் அரசு தன்னுடைய மக்களுக்கான நலத்திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்த முடியும்.இந்நிலையில், ஒரு நாட்டின் வரி வருவாய் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒரு நாட்டின் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் உத்தேச வருவாய் எவ்வளவு இருக்கும் என்பது மிகவும் தெளிவாக குறிப்பிடப்படும். அதில் குறைவு ஏற்படின் மக்களுக்கான நலத்திட்டங்கள் […]

பொறாமையும் சமூகநீதியும்

This entry is part 16 of 17 in the series 12 பெப்ருவரி 2023

தாமஸ் சோவெல் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாக பொறாமை கருதப்பட்டு வந்திருக்கிறது. இப்போது அது முக்கியமான அரசியல் அறமாக ஆகியிருக்கிறது. அதற்கு தற்போதைய புதிய பெயர் “சமூக நீதி” வரலாற்று ரீதியில் நடந்த அநீதிகளால் சில குழுவினர் ஏழையாக இருப்பதை வைத்து எழையாக இருக்கும் எல்லா பேருக்கும் வரலாற்று ரீதியான அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று பொத்தாம்பொதுவாக அடித்துவிடுகிறார்கள். உலகத்தின் பல பகுதிகளில் ஆரம்பத்தில் மிகுந்த ஏழையாக இருந்த பல குழுவினர், கடுமையான உழைப்பின் காரணமாகவும், வலி நிறைந்த […]

33 வருடங்களாக அஞ்னாத வாசம் செய்த தமிழர்கள்

This entry is part 14 of 17 in the series 12 பெப்ருவரி 2023

குரு அரவிந்தன் இராமாயணத்தில் இராமபிரான் 14 ஆண்டுகள் அஞ்னாத வாசம் இருந்ததாகச் சொன்னபோது பக்தர்கள் கதிகலங்கிப் போனார்கள், இந்தக்கதை பழைய வரலாற்றில் இடம் பெற்றிருந்ததால் அந்த சம்பவம் முக்கியம் பெற்றிருந்தது. ஆனால் அதைவிட அதிக காலம் அதாவது 33 வருடங்கள் வடஇலங்கைத் தமிழ் மக்கள் அஞ்னாத வாசம் இருந்ததைக் கேள்விப்பட்ட போது யூரியூப் தொலைக்காட்சி நண்பரான தணூரன் என்பவர் கண்கள் கலங்கி நின்றதைக் காணமுடிந்தது. ‘முதன் முதலாக இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்திருக்கின்றேன், காரணம் நான் […]

படித்தோம் சொல்கின்றோம்: மதுரையின் முழுமையான வரலாற்றை பேசும் அ. முத்துக்கிருஷ்ணனின்  தூங்கா நகர் நினைவுகள்

This entry is part 10 of 20 in the series 29 ஜனவரி 2023

முருகபூபதி தனது வாழ்நாட்களில் பெரும்பாலான பொழுதுகளை பயணித்துக்கொண்டே கடந்து செல்லும்  எழுத்தாளர், களப்பணியாளர், மனித உரிமை ஆர்வலர்,  மொழி பெயர்ப்பாளர், தேர்ந்த  வாசகர், தானும் இயங்கி, மற்றவர்களையும் இயங்கவைக்கும் ரஸவாதம் கற்றவர்,          அ. முத்துக்கிருஷ்ணன். எங்கள் அவுஸ்திரேலியாவின் நிரந்தர  இலக்கிய விருந்தினர்.  மெல்பனில் வாசகர் வட்டம் அமைப்பதற்கு தூண்டுகோளாகவிருந்தவர். இன்றளவும் அதன் பணிகளில் இணைந்திருப்பவர்.  உறவாடுவதற்கு எளிமையானவர்.  இத்தனை சிறப்பியல்புகளை கொண்டிருப்பவரின் மற்றும்  ஒரு வரவு,  தூங்கா நகர் நினைவுகள்.  மதுரையின் முழுமையான வரலாற்றையே இதனைப் படித்து […]

காங்கேசந்துறை குருநாதசுவாமி கோயில் குடமுழுக்கு

This entry is part 5 of 20 in the series 29 ஜனவரி 2023

குரு அரவிந்தன் காங்கேசந்துறை குருநாதசுவாமி கோயிலின் கும்பாபிஷேகம் சென்ற வியாழக்கிழமை 2023, தைமாதம் 26 ஆம் திகதி சிறப்பாக நடந்தேறியது. இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களில் கும்பாபிஷேகம் நடப்பது ஒரு சாதாரண பாரம்பரிய நிகழ்வுதான். ஆனால், இலங்கையில் இப்போது, அதாவது யுத்தத்திற்குப் பின்னாக நடக்கும் இத்தகைய கும்பாபிஷேகங்கள் காலத்தால் முக்கியமாகப் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். காரணம் யுத்தகாலத்தில் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இருந்த அனேகமான தமிழ் மக்கள் இடம் பெயர்ந்திருந்தார்கள். இக்காலத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களில் […]

மகாத்மா காந்தி மரண நினைவு நாள் [1869-1948]

This entry is part 4 of 20 in the series 29 ஜனவரி 2023

சி. ஜெயபாரதன், கனடா [ சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ] அறப் போர் புரிய மனிதர்ஆதர வில்லை யெனின்தனியே நடந்து செல் ! நீதனியே நடந்து செல் ! இரவீந்திரநாத் தாகூர் http://youtu.be/QT07wXDMvS8 பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.மகாத்மா காந்தி முடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மை யுற்றார்! கி.மு.399 இல் […]

நிமாய் கோஷ் – ஆவணப்படம் – புத்தகம் வெளியீட்டு விழா. திருச்சி சங்கங்கள்

This entry is part 11 of 11 in the series 15 ஜனவரி 2023

நிமாய் கோஷ் – ஆவணப்படம் – புத்தகம் வெளியீட்டு விழா. திருச்சி சங்கங்கள்

சிறக்கட்டும் விவசாயிகள் வாழ்வு

This entry is part 9 of 11 in the series 15 ஜனவரி 2023

முனைவர் என்.பத்ரி            ‘சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால், உழந்தும் உழவே தலை’என்பது வள்ளுவன் வாக்கு.விவசாயிகளை போற்றும் வகையில் வள்ளுவன் உழவுக்கென்றே ஒரு அதிகாரத்தை ஒதுக்கி குறள்களை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.உலகில் எண்ணற்ற தொழில்களை மக்கள் செய்து வந்தாலும்,மனித இனம் உயிர் வாழ உணவைத்தரும் விவசாயத்தொழிலே மிக முக்கியமானதாகும்.ஒவ்வொரு தைத்திங்கள் முதல் நாளன்றும் விவசாயிகள் தமது விவசாயம் செழிக்க உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்  விதத்தில் சூரியனுக்கும்,கால்நடைகளுக்கும் சிறப்பு வழிபாடுசெய்வது தமிழர் பண்பாட்டில் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. விவசாயிகளின் […]

பாலியல் சமத்துவம் இன்னும் நூறாண்டு காத்திருக்கணும்..

This entry is part 6 of 11 in the series 15 ஜனவரி 2023

சுப்ரபாரதிமணியன் பெண்கள் வேலைக்குப் போவதாக இருந்தாலும் பொருளாதார நிலையில் அவர்கள் மேற்பட்டிருந்தாலும் அவர்களுடைய நிலைமை இப்படித்தான் இருக்கிறது. . இந்தியாவில் பாலின சமத்துவம் அடைவதற்காக இன்னும் 90 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று சர்வதேச தொழிலாளர் நல ஆணையத்தின் சமீபத்திய ஆய்வு என்று தெரிவித்திருக்கிறது.. இது கூட ஒரு வகையில் வன்முறையாக மாறிவிடுகிறது.. ஏடிஎம்மை பெண் பயன்படுத்த ஆண்கள் வைக்கும் தடை அல்லது அது என்னிடமே இருக்கட்டும் என்று சொல்வது இதெல்லாம் ஒரு வகை பாலின சமத்துவ […]