“சங்கீத் .. நீ ஒரு ‘பெக்’ எடுத்துக்கறியா?” என்றாள் லதா. “நோ.. லதா.. நான் ஒரு ட்ராப் கூட எடுத்துக்கறதில்லே. ஷேப் போயிடும். லாங்கர் ரன்ல அடிக்ஷனை அவாய்டே பண்ண முடியாது. ” “கமான். ஹியர் யூ ஆர் மை ப்ரெண்ட். நாட் மை கைனி. ஒகே?” “லுக் லதா. ஆஸ் அ டாக்டர் மட்டும் நான் இதைச் சொல்லலே. டூ யூ வாட்ச் யுவர் பிகர் இன் த மிர்ரர்?” லதா சில நொடிகளுக்குப் பிறகு […]
28. “அம்மாவும் ஜெகதீசனும் இடைக்குல பெண்மணி ஜெகதாம்பாள் பாதுகாப்பில் இருக்கிறார்கள்; அவர்களிருவரையும் அதிக நேரம் அந்நியபெண்மணியின் பொறுப்பில் விட்டு வைப்பதும் நல்லதல்ல. இன்னொருமுறை வருகிறேன். சாவகாசமாக உன்னிடம் சம்பாஷிக்க விஷயங்கள் இருக்கின்றன”, எனக்கூறி சித்ராங்கி செண்பகத்திடம் விடைபெற்றாள். – இதோ பக்கத்தில்தானே இருக்கிறீர்கள், ஒரு வண்டியை அனுப்பி அழைத்துவர ஏற்பாடு செய்யட்டுமா, என்ற சேடியின் வற்புறுத்தலுக்கு சித்ராங்கி கூறிய சமாதானம் அவளுக்கு நியாயமானதாகத் தோன்றியிருக்குமாவென்கிற அக்கைறையின்றி புறப்பட்டாள். வண்டிக்காரன் மாடுகளை இழுத்துப்பிடித்து, நாக்கில் சொடுக்குப்போட்டு ஏர்காலிலிருந்து சித்ராங்கின் […]
1929 ஜனவரி 30 விபவ வருஷம் தை 17 புதன்கிழமை பெண்டல்வில் ஜெயில் இருக்கப்பட்ட வீதியில் ஆஸ்டின் கார் மெதுவாக ஊர்ந்து வந்தது. கென்சிங்டனிலேயே இருக்கப்பட்ட டாக்சி தெலூக்ஸ் கம்பெனிக்கு ஆளனுப்பிச் சொல்லி தெரிசா வரவழைத்தது. டிராமில் வந்திருக்கலாம். கூட்டத்தைக் கண்டால் பயமாக இருக்கிறது. மனுஷர்களைப் பார்த்து உண்டான பயம் இல்லை இது. இடித்துப் பிடித்து வண்டியில் ஏறி, குளிர் காலம் என்ற சாக்கில் மாசக் கணக்கில் குளிக்காமல் உடுப்பு மாற்றாமல் திரிகிறவர்களின் உடம்பு வாடை பற்றிய […]
சங்கீதா……சங்கீதா…..ஏய்..சங்கீதா….இன்னும் அங்க என்ன பண்றே……? வா….சீக்கிரம்…..நீட்டி முழக்கினாலும் அந்தக் குரலில் வழக்கம் போல ஒரு கண்டிப்பு இருந்ததை சங்கீதாவால் உணர முடிந்தது. மாமி…நான் அப்பறமா வரேன்…..அம்மாக் கூப்பிட ஆரம்பிச்சாச்சு …..முதல்லயே சொல்லித் தான் அனுப்பினா கொடியில் காய்ந்த துணிகளை எடுத்தோமா … கட கடன்னு இறங்கி வந்தோமான்னு வா…வீடு… வீடா.. நின்னு கதை பேசாதேன்னு…….அவசர அவசரமாக போற போக்கில் என்னிடம் சொல்லிவிட்டு.. படிகளைத் தாவித் தாவி சிட்டாக இறங்கினாள் சங்கீதா. அவளது அம்மா என்ன சொன்னாலும் சரி…காலையில் […]
மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்கங்கள் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1 நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி : ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வியுற்ற வணிகத்துறையாளர். வறுமையி […]
(சிறுகதை தொடர் கதை ஆகுது … ! ) பக்கத்து வீட்டு ராஜேஸ்வரி அம்மாவின் தலையீட்டின் பிறகு ஆயிஸா ஒரு வாரம் நேரம் தவறாமல் வேலைக்கு வந்தாள். பிரச்சனை அத்தோடு சுமுகமாக தீர்ந்தது என்று நிம்மதியில் இருந்தேன். ..எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துச்சு…இப்போ என்னாச்சு…? பெரிசா ஒண்ணும் ஆகலை…..அத்தனை எதிர்ப்பையும் சமாளித்து வேலைக்கு வந்து கொண்டிருந்த ஆயிஷா…..சொல்லாமல் கொள்ளாமல் வருவதை மறுபடியும் நிறுத்தி விட்டிருந்தாள்…. பாவம் இப்போது என்ன பிரச்சனையோ..? யார் என்ன சொன்னார்களோ..? .என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருப்பதை […]
சுரும்பார்குழலி திருஞானசம்பந்தம் என்ற பெயரை 101வது முறையாக உச்சரிக்கவும், ஸ்பெல் பண்ணவும் சொல்லி, க்ளையண்ட் நச்சரிக்க, சலிப்பின் உச்சத்தில் இருந்த குழலி, வழக்கம் போல தனக்குப் பெயர் சூட்டிய பெரியவர்களை திட்டிக் கொண்டிருந்தாள். அமெரிக்க க்ளையண்ட்டான ஜேம்ஸ் வேறு என்ன செய்ய முடியும். இது போன்ற பெயரை முன்பின் கேட்டதும் இல்லை, உச்சரிப்பதும் எளிதும் அல்ல. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு எழுத்தாகச் சொல்லி, எஸ் ஃபார் சேம்ஸ் (s for sams, u for umbrella, r […]
ஒரு காலத்தில் ஒரு மரத்தில் நானே இருந்துவந்தேன். அதே மரத்தடியில் இன்னொரு பறவை, ஒரு தித்திரிப்பறவை, இருந்து வந்தது. அண்டை வீட்டுக்காரர்களாக இருந்ததால் எங்களிடையே பிரிக்க முடியாத அன்பு ஏற்பட்டது. சாப்பாடும், விளையாட்டும் முடிந்த பிறகு ஒவ்வொரு நாளும் நாங்கள் இருவரும் ஒன்று கூடுவோம். பிற்பகல் வேளையில் பல நீதி வாக்கியங்களைச் சொல்லிக் கொள்வோம். புராணம் முதலிய கதைகளைச் சொல்வோம். விடுகதை புதிர் போட்டுக் கொள்வோம். ஒருவர்க்கொருவர் பரிசு கொடுத்துக் கொண்டு விநோதமாகக் காலம் கழித்து வந்தோம். […]
“ராஜேந்திரன் ஸார்..நான் யாருன்னு யூகிக்க முடியுதா?” “………..” “இது உங்க மொபைல் ஃபோன். இந்த நம்பரை ரெகக்னைஸ் பண்ண முடியுமா?” “……….” “இது உங்க ஒயிஃப் மஞ்சுளா அவங்க நம்பர் …இல்லீங்களா?” டாக்டர் ஒரு புகைப்படத்தை எடுத்து மேஜை மீது வைத்தார். “இந்த போட்டோல இருக்கறவங்களை ஐடென்டிஃபை பண்ணுங்க ஸார்”. பதிலில்லை. பொன்னம்மாள் படத்தின் மீது விரலை வைத்து “இது உங்க மதர் இல்லீங்களா?” “…………..” “அவங்க காலமாயிட்டாங்க….. உங்களுக்குத் தெரியுமா?” ராஜேந்திரனின் கண்களைக் கூர்ந்து நோக்கினார் […]
(1) “சார், கங்கிராஜுலேஷன்ஸ், நீங்க ரிட்டைர்டு ஆயிட்டதா சொன்னாங்க” பாலுசாமி அரசு மருத்துவ மனையில் என்னைப் பார்த்ததும் புன்னகை மலர இப்படி ஆரம்பித்தார் பேச்சை என்னிடம். நான் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதை உள் வாங்கிக் கொள்வதை இன்னும் ஒத்திப் போடுவதாய் “ போன மாதம் சார், ரிட்டைர்டு ஆனேன்” என்பேன். போன மாதமானாலென்ன’; போன தினமாலென்ன; மனம் அவ்வளவு வேகமாகவா மாறுதலுக்கு தயாராகிறது. பாலுசாமி நான் பணி செய்த துறையிலேயே எஞ்சினியராய்ப் பணி செய்து பத்து […]