“ராஜேந்திரன் ஸார்..நான் யாருன்னு யூகிக்க முடியுதா?” “………..” “இது உங்க மொபைல் ஃபோன். இந்த நம்பரை ரெகக்னைஸ் பண்ண முடியுமா?” “……….” “இது உங்க ஒயிஃப் மஞ்சுளா அவங்க நம்பர் …இல்லீங்களா?” டாக்டர் ஒரு புகைப்படத்தை எடுத்து மேஜை மீது வைத்தார். “இந்த போட்டோல இருக்கறவங்களை ஐடென்டிஃபை பண்ணுங்க ஸார்”. பதிலில்லை. பொன்னம்மாள் படத்தின் மீது விரலை வைத்து “இது உங்க மதர் இல்லீங்களா?” “…………..” “அவங்க காலமாயிட்டாங்க….. உங்களுக்குத் தெரியுமா?” ராஜேந்திரனின் கண்களைக் கூர்ந்து நோக்கினார் […]
(1) “சார், கங்கிராஜுலேஷன்ஸ், நீங்க ரிட்டைர்டு ஆயிட்டதா சொன்னாங்க” பாலுசாமி அரசு மருத்துவ மனையில் என்னைப் பார்த்ததும் புன்னகை மலர இப்படி ஆரம்பித்தார் பேச்சை என்னிடம். நான் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதை உள் வாங்கிக் கொள்வதை இன்னும் ஒத்திப் போடுவதாய் “ போன மாதம் சார், ரிட்டைர்டு ஆனேன்” என்பேன். போன மாதமானாலென்ன’; போன தினமாலென்ன; மனம் அவ்வளவு வேகமாகவா மாறுதலுக்கு தயாராகிறது. பாலுசாமி நான் பணி செய்த துறையிலேயே எஞ்சினியராய்ப் பணி செய்து பத்து […]
பனசை நடராஜன், சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் கால் வைத்ததும் ஏதோ ஒரு புது கிரகத்தில் இறங்கியது போலிருந்தது மூன்று பேருக்கும். சிவா, குமரேசன், சேதுராமன். தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வசித்தாலும் படித்தது ஒரே தொழிற்கல்வி நிலையத்தில் (ஐடிஐ)., வெவ்வேறு காரணத்துக்காக இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களோடு வந்த மற்ற இருவரும் சிங்கப்பூரில் முன்பே வேலை பார்த்த அனுபவசாலிகள். அதனாலேயே கொஞ்சம் அதிகமாகவே எல்லாவற்றையும் விளக்கி சொல்லிக் கொண்டு வந்தார்கள். காலால்தான் நடக்கணும் வாயால்தான் சாப்பிடணும்னு மட்டும்தான் சொல்லலை. […]
மேமாதம் முதல் வாரமோ இரண்டாம் வாரமோ பொன்மலை ரயில்வே ஒர்க் ஷாப்பிற்கு விடுமுறை விடுவார்கள். ” மெஷினெல்லாம் ஓவர் ஆயிலிங்க் பண்ணனுமில்ல, அதுக்காகத்தான் இந்த ஒருவார லீவு ” என்றான் என் நண்பன் ராஜு. எனக்கு அவன் சொன்னது புரியவில்லை. அப்பாவிடம் ‘ ஒவர் ஆயிலிங்க் ‘ என்றால் என்ன என்று கேட்டபோது என்ன கோபத்தில் இருந்தாரோ தெரியவில்லை. ” ம்! உன் தலை ” என்றார். பக்கத்து வீட்டு கிருஷ்ணமூர்த்திக்குக் காலையில் நான் தின்றுகொண்டிருந்த கடலையைக் […]
இந்தி : மகாஸ்வேதா தேவி தமிழில் : முனைவர் தி.இரா.மீனா [ ஆங்கில மூலம்] குந்தியும் அந்த மலைவாழ் பெண்ணும் ஆசிரமத்தில் திருதராட்டினனையும் , காந்தாரியையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு குந்திக்கு இருந்தது. இந்தக் கடமையை குந்தி விரும்பியே செய்தாள்.வனத்தின் மத்தியிலான ஆசிரமம் இது. அன்றாட வழிபாட்டிற்காக தினமும் காட்டுக்குச் சென்று சுள்ளிகளை எடுத்து வருவது அவள் பணி. மதியம் தான் அவளுக்கு பிடித்த பொழுது. சுள்ளிகளைப் பொறுக்கி விட்டு சிறிது நேரம் அங்கேயே சுற்றி […]
அன்று அம்மாவை எப்படியும் பார்த்து விடுவது என்று மனதில் உறுதியெடுத்துக் கொண்டான் கணேசன். இப்படித்தான் ஒவ்வொரு வாரமும் நினைத்துக் கொள்கிறான். ஆனால் போக முடியவில்லை. ஏதாவது வேலைகள் இருந்து கொண்டே இருக்கிறது. வேலைகளோடு வேலையாய், அதையும் ஒரு வேலையாய்க் கருதித்தானே சென்றாக வேண்டும். அப்படி ஒரு வேலையாய் நினைத்துச் செய்வதானால,; போக, பார்க்க என்று வருவதுதானே அது. அதில் விருப்பமில்லை இவனுக்கு. போனால் அம்மா கூட ஒரு நாள் முழுக்க இருந்தாக வேண்டும். இருக்க வேண்டும். அப்பொழுதுதான் […]
மக்களின் அன்றாட வாழ்வில் முக்கிய இடம் பெறுவது உணவு. இந்த சோற்றுக்காகத்தான் இத்தனை பாடு என்று எத்தனையோ ஏழை எளிய ஜனம் அனுதினமும் போராடிக் கொண்டிருக்கிறது. “ஒரு சாண் வயித்த நெப்புறதுக்கு என்ன பாடு படவேண்டியிருக்கு?” என்று புலம்புவதைக் கேட்டிருக்கிறோம். வெறும் சோறும் பச்சை மிளகாயும், வெறும் சோறும் வெங்காயமும் என்றும் நீரில் கலந்த, நீரில் கரைத்த சோறு என்றும் குடிபடைகள் பிழிந்து பிழிந்து உண்டு ஜீவிதம் கழிப்பதை உணர்ந்துதான் இருக்கிறோம். இதற்கு ஒரு படி மேலே […]
மணிக்கூண்டு சிக்னல். கடைவீதியின் மிக முக்கியமான ஒரு நாற்சந்தியின் சிக்னல். ஈரோட்டின் ஜவுளிச் சந்தை கூடுமிடத்திற்கு வெகு சமீபம் என்பதாலும், அன்று சந்தை நாள் என்பதாலும் கலகலவென்று தெருவெல்லாம், சரக்கு வண்டிகளும், இருசககர, நான்கு சக்கர வாகனங்களும் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன. சிக்னலில் சிவப்பு வண்ணம் வந்து அந்த மூன்று நிமிடம் காத்திருக்கும் பொறுமை கூட இல்லாமல் சிக்னல் விழுவதற்குள் அந்த இடத்தைக் கடந்துவிட வேண்டும் என்ற அவசரம் அத்துனை பேருக்கும் இருந்தது. எத்துனை விதமான மனிதர்கள், […]
26 – எனது புத்திரனை கணத்தில் பார்க்கவேணும். – நேரம் காலம் கூடிவரவேணாமா? அந்தரப்பட்டாலெப்படி? அரசாங்க மனுஷர்களிடத்தில் அனுசரணையாக நடந்துகொள்ள தெரியவேணும். உனக்கிங்கே என்ன குறை வைத்திருக்கிறோம்? நீ கேட்டதுபோல எல்லாம் நடக்கிறது. கமலக்கண்ணியென்று நம்பி உனது விண்ணப்பங்களை தங்குதடையின்றி பூர்த்திசெய்யவேணுமாய் மஹாராயர் ஆக்கினைபண்ணியிருக்கிறார். அதைக் கெடுத்துக்கொள்ளாதே. நாளையே உன்னை சிரசாக்கினைசெய்யவோ மரணக்கிணற்றில் தள்ளிப்போடவோ¡ எமக்கு எத்தனை நாழிகை ஆகும்?. கண்விழித்தபோது பகலுக்கு முதுமை தட்டியிருந்தது வெகுதூரத்தில் யாரோ இருவர் உரையாடுவதைபோலக் கேட்ட குரல்கள் இப்போது அண்மையில் […]
1927 மார்ச் 13 அக்ஷய மாசி 29 ஞாயிற்றுக்கிழமை சட்டென்று பக்கத்து முடுக்குச் சந்துக்கு நேராக மட்ட மல்லாக்காகத் திறந்து வச்சிருந்த மரக் கதவு கண்ணில் பட்டது. அதுக்கு அண்டக் கொடுத்துத்தான் என் மூட்டை முடிச்செல்லாம் வச்சது. அந்தத் திட்டி வாசல் வழியாக தலை தப்பிச்சது தம்பிரான் புண்ணியம் என்று ஒரே ஓட்டமாக ஓடின போது காலில் இடறிய மூட்டைகளைக் கையில் தூக்கிக் கொண்டேன். ஆயுசு முழுக்க சம்பாதிச்சதும், விற்று வரச் சொல்லி துரை கொடுத்ததும், உடுதுணியும் […]