அங்கண்மா ஞாலத்[து] அரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும்கொண்[டு] எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேற் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்! ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் இருபத்திரண்டாம் பாசுரம் இது. கடந்த பாசுரத்தில் “மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண் ஆற்றாது வந்து” என்று தாங்கள் போக்கற்று வந்ததைச் […]
சேயோன் யாழ்வேந்தன் விதை விதைத்து நீர் விட்டு முளைவிட்டதும் அரண் அமைத்து செடியாக்கி மரமாக்கினேன் அதன் நிழலில் அமர்ந்திருக்கும் பொழுதெல்லாம் நான் தான் அதை வளர்த்தவன் என்ற கர்வத்துடன் நிமிர்ந்து பார்ப்பேன். ஒரு நாள் மெல்லிய குரலில் மரம் என்னிடம் சொன்னது – விதையாக இருந்த காலத்திலிருந்தே நான் தான் உன்னை வளர்த்து வருகிறேன். seyonyazhvaendhan@gmail.com
ஊர்மிளாவிற்கு என்னமோ போலிருந்தது. இத்தனைக்கும் பார்த்து பழகியவன் தான் தினேஷ். ஏன் அப்படி சொல்லிவிட்டான்? ‘ நமக்குள்ளே ஒத்து வராது ஊர்மி.. ஸேம் வேவ் லென்த்..’ ‘எனக்குப் பிடித்ததெல்லாம் அவனுக்குப் பிடிக்கும். ஜெயகாந்தன், ரியலிஸ திரைப்படங்கள், டிராட்ஸ்கி மருது, மதன் ஜோக்ஸ்..’ அவனும் அவளும் ஒரே மென்பொருள் நிறுவனத்தில் ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். ஒரே ப்ராஜெக்ட்.. அவன் டீம் லீடர், அவள் டெவலெப்பர்.. முதல் வருடம் பேசவேயில்லை.. அது சரி.. ஆண் என்பதால் அல்ல.. அவள் […]
என்.செல்வராஜ் சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -1 கட்டுரையில் எஸ் ராமகிருஷ்ணன், வீ அரசு ஆகியோரின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு பற்றியும் , ஜெயமோகன் பரிந்துரை பட்டியலையும், சாகித்ய அக்காடமி வெளியிட்ட சிறுகதைத் தொகுதிகளையும் , என் பி டி வெளியிட்ட சிறுகதைத் தொகுதிகளையும் கீரனூர் ஜாகிர் ராஜாவின் பரிந்துரைகளையும் பார்த்தோம். காவ்யா பதிப்பகம் பல தமிழ் சிறுகதைகளின் தொகுப்புக்களை சிறந்த முறையில் வெளியிட்டுள்ளது. இந்த கட்டுரையில் மிக முக்கிய தொகுப்பான கதைக்கோவை -1 […]
இப்பவோ அப்பவோ என்று ஒரு குரல் (கமெண்டோ?) கேட்டது. நான் சிவுக்கென்று திரும்பிப் பார்த்தேன். கலகலவென்று சிரிப்பொலி. இடம் ஜெமினி பஸ் ஸ்டாப் ‘நின்றிருந்தவர்கள் ஐந்து பேர் இளைஞர்கள். பாவம்!’ அவர்கள் என்னைச் சொல்லவில்லை. ஏன், என்னைக் கவனிக்கக் கூட இல்லை. அவர்கள் தம்மில் மூழ்கிக் களித்துக் கொண்டிருந்தார்கள். வரவர நான் தான் ‘ஸென்ஸிடிவ்’ ஆகி வருகிறேன். வயிறு நிறையத்தான் பருத்து விட்டது. எப்படிக் கட்டினாலும் புடைவை எங்கேயாவது வழுக்கிக் கொண்டு […]
மாதவன் ஸ்ரீரங்கம் அவன் மூச்சடக்கி காத்திருந்தான். இரை கண்ணுக்குமுன்பாக நகர்ந்துகொண்டிருந்தது. ஒரு பன்றியை வேட்டையாடுவது அத்தனை சுலபமில்லை. மிகக்கடினமான அதன் தோலினை சாமான்யமாக எந்த அம்பும் ஊடுருவிவிடாது. அருகில் சென்றுதான் தாக்கவேண்டும். மிகத்தேர்ந்த பயிற்சிவேண்டும் அதற்கு. அது அவனுக்கு இருந்தது. தலைவி கற்றுக்கொடுத்திருக்கிறாள். நீர்நிலைகளெல்லாம் வற்றிவிட்ட இந்த வெப்பக்காலத்தில் இரைகிடைப்பதே பெரும்பாடு. இதில் கிடைத்த இரையையும் தப்பிக்கவிட்டு வெறுங்கையுடன் நின்றால் தலைவியின் கோபத்தை சமாளிக்கவே முடியாது. அவன் மெல்லமெல்ல நகர்ந்தான். வெம்மை தாங்காமல் காய்ந்து உதிர்ந்திருந்த சருகுகளில் […]
[Question & Answer] ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நீ தேடும் நேசம் முன்னூ கிக்கும் வேனில் வெப்பம்; பரிதி வெளிச்சம்; நீயே சொல் ! பனிக்குளிரில் மொட்ட விழ்ந்து பூக்கும் ஈர மண் ரோஜா மலர்களைப் பார்க்கி றாயா ? அழிக்கப் படும் ரோஜா மர வேர்கள் பனிக் காலத்தில் ! அகற்றி விடு அதை உடனே பாதத் திலிருந்து, அல்லா […]
ஒரு சிலரின் கைகளில் அல்லது உடலின் இதர பகுதிகளில் நிறைய கட்டிகள் உள்ளதை நீங்கள் பார்த்திருக்கலாம். இவை வலி தராத கட்டிகள். இவை கொஞ்சங்கொஞ்சமாக வளரும் கட்டிகள்.இவற்றைப் பிடித்து அழுத்தினாலும்கூட வலிக்காது. இதை ” நீயூரோபைரோமா ” என்று அழைப்பார்கள். இதை நாம் நரம்பு நார்க் கழலை என்று கூறலாம். இவை நரம்பு நார்களில் தோன்றும் கட்டிகள். நரம்பு நார்க் கழலைகள் பல வகையானவை.இவை தோலில் எழும் கட்டிகள். இவற்றை விரலால் அழுத்தினால் குழி […]