துணி மாட்டும் கவ்விகளில் முனைப்பாய் தன் நேரத்தை விதைக்கிறது அந்தக்குழந்தை ஒன்றோடோன்றை பிணைத்து பிரித்து வீடு கட்டி மகிழுந்து ஓட்டி அரைவட்டம் தீட்டி கோபுரம் எழுப்பி எழுத்துகள் பரப்பி எண்கள் அமைத்து தம்பிப்பாப்பாவுக்கு கிலுகிலுப்பை செய்து பறவைக்கு இறக்கை பொருத்தியென…. நிமிடங்களுக்கு நிமிடம் மாற்றிமாற்றி சிருஷ்டிக்கிறது அதற்கானதொரு அழகிய உலகத்தில்… அழகிய உலகம் அவ்வப்போது தீர்ந்துபோவதுமுண்டு விளையாட்டு அலுத்துப்போகும் தருணங்களிலும் உலரும் துணி உதிராமல் இருக்க அம்மா பிடுங்கிச்செல்லும் தருணங்களிலும்
சமச்சீர் கல்விக்கு அடுத்தபடியாக புகைந்து கொண்டிருக்கும் பிரச்சனை, ஓமந்தூரார் அரசு எஸ்டேட்டில் கட்டப்பட்டுள்ள 1200 கோடி கட்டிடம் என்ன ஆகும் என்ற கேள்வி. இந்த விவகாரம் முதலில் தொடங்கியது தற்போதைய முதல்வரிடமிருந்து தான். ஏழு வருடங்களுக்கு முன்னால், 96 ஆண்டுகால பழமை வாய்ந்த குவீன் மேரிஸ் கல்லூரி இருந்த இடத்தில், புதிய தலைமை செயலகம் கட்ட ஜெயலலிதா முயன்ற பொது, பாரம்பரியம் மிக்க ஒரு கட்டிடத்தை இடிக்கக் கூடாது என்ற பொதுவான கருத்தால் அந்த முயற்சி தடைபட்டது. […]
மீன் சுவாசம் போல் உள்ளிருந்து வெடிக்கும் ஒற்றைப் புள்ளியில்தான் துவங்குகிறது ஒவ்வொரு உரையாடலும். குளக்கரையின் எல்லைவரை வட்டமிட்டுத் திரும்புகிறது., ஆரோகணத்தோடு. மேலே பெய்யும் மழையோ முள்க்ரீடம் பதித்து அவரோகணம் செய்கிறது குளத்தின் மேல். தத்தளிகிறது குளம் ஊசியாய்க் குத்தும் அபஸ்வரத்தின் குணங்களோடு. ஒளிய முடியாமல் தவிக்கும் குளம் மீன்களைத் துரத்துகிறது. ஒளியும் மீன்களாய் உள்ளோடிப் போகிறது உரையாடலும்.
கால் எவ்விப் பறக்கும் நாரை நாங்கள் விளையாடி ஓடிய திசையில் கடலலைகள் நுரைத்துத் துவைத்திருந்தன எங்கள் காலடித் தடங்களை அதே கடலும் கடலையும் சுவைத்த சுவை மொட்டுக்கள் நாவினுக்குள் உப்புப்படிந்த காற்றோடு கலந்து அப்பிக் கிடக்கிறது அலர்ந்த கூச்சல்கள் ஒற்றையாளாய் சிப்பி பொறுக்கியபோது ஒவ்வொருவர் காலடித்தடமும் கையில் மிருது ரேகையுடன். நீலவானம் சேமித்துக் கொண்டிருக்கிறது ஒவ்வொருவர் தேடல்களையும் மூழ்கியவர்கள் வரும்போது கூற.
ரஜக் தாஸ், மனோஹர் லால் சோப்ரா, மிருணால் காந்தி சக்கரவர்த்தி என்றெல்லாம் 1953 நினைவுகளைப் பற்றி எழுதும்போது, அந்தக் காட்சிகளும் அவர்கள் குறும்பு நிறைந்த முகங்களும் இன்னமும் மனத்தில் திரையோடுகின்றன. சின்ன உத்யோகம் தான். குறைந்த சம்பளம் தான். கடுமையான வெயிலும், மழையும், ஒரு ஸ்வெட்டராவது வேண்டும் குளிரும், ஹோட்டல் சாப்பாடும் எல்லாம் எங்கோ தூர தேசத்தில் தூக்கி எறியப்பட்ட வாழ்க்கை என்று அம்மாவும் அப்பாவும், தங்கை தம்பிகளும் நினைக்கலாம் தான். ஆனால் அந்த நாட்கள் […]
இரைச்சலில்லை வருடிச் செல்லும் காற்று மண்ணைத் தின்னும் புழுவாக காலநதியில் கால் நனைத்துக் கொண்டிருந்தது மனம் நேற்றைக்கும் இன்றைக்கும் வித்தியாசம் இருப்பதால் தான் வாழ முடிகிறது இரைக்கு ஆசைப்பட்ட மீன் உலையில் கொதிப்பது போல இன்பத்துக்கு ஏங்கும் உள்ளத்தால் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கிறோம் கண்ணைப் பார்த்து பேச முடியவில்லை இப்போது உள்ளேயும் சாக்கடை வெளியேயும் சாக்கடை பெண்ணின் நினைப்பு லேசில் விடாது போலிருக்கு பீஷ்மரைப் போல் வாழ யாருக்குத்தான் ஆசை இருக்காது நேற்று வந்தான் […]
எங்கிலும் அவன் ஒளிந்தே இருக்கிறான் காலை பொழுதின் கதிரினூடே கிளம்பி மாலை மயங்கியும் கூட அவனின் உறக்கங்கள் துவக்கபடவேயில்லை அடர் வனங்களின் தருவின் இடுக்குகளில் வீழ்ந்து கிடந்த இலையொன்று கதைத்து கரைத்தது அவனின் எண்ணற்ற வெற்றி பொழுதுகளை சுழன்றடித்த பெருங்காற்று கிளப்பியது எரிந்து போன சாம்பல் நினைவுகளை பெருந்தீவின் பாரமென ஒளிந்து நின்ற பெருங்கனவின் சார்பை ஒத்தே இருந்தன அந்த இலையின் ஒரு புறம் .. மறு புறமோ எங்கோ வழக்கொழிந்த அவன் ஒட்டிக்கொண்டு இருக்கிறான்.. மரணமென […]
ஹெச்.ஜி.ரசூல் தமிழ்நாடுகலை இலக்கியப்பெருமன்றம் திருவண்ணாமலைக் குழுவின் சார்பில் மாற்றுத்திரை 2011 குறும்பட,ஆவணப்பட திரையிடல் நிகழ்வும் கருத்தரங்க அமர்வுகளும்திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் 2011 ஆகஸ்டு 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெற உள்ளது. இணைப்பு நிகழ்ச்சிநிரல்
காட்டிடையே வருவோர் போவோரின் விரல்களை எல்லாம் துண்டுதுண்டாய் வெட்டி நறுக்கி மாலையாக்கிப் போட்டுத் திரிந்த அங்குலிமாலாவின் துரத்தல் தொடர்கிறது. புத்தன் அகப்படவில்லை போதிமரத்தடியில் கிடைத்த ஞானத்தை எல்லோருக்கும் வாரிவழங்கி வெற்றிடமாய் போனேன் வருத்தப்பட்டு உரையாடிக் கொண்டிருந்த புத்தனின் கழுத்தில் சயனைடு பாட்டில்கள் தொங்கின இங்கொரு மண்டபத்தின் இடிபாடுகளுக்கிடையே புத்தன் பிணமாக கிடைத்தான். ஹெச்.ஜி.ரசூல்
இன்னமும் சரியாய் பேச்சு வராத மூன்று வயது பையன் சமீபத்திய திரைப்படப் பாடலொன்றைப் பாடிக்கொண்டிருந்தான். அடுத்த மாதம் நர்சரி போக வேண்டியவனை இழுத்துப் பிடித்து உட்கார வைத்து புத்தகம் ஒன்றைக் காட்டி ‘ஏ’ ‘பி’ என்று சொல்லச் சொன்னாள் அம்மா. நழுவித் துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டிருந்தான் பையன் இன்னொரு பாடலைப் பாடியபடி. o செல்வராஜ் ஜெகதீசன்