வளவ. துரையன் சிவன் கோயில்மணி கேட்டுவிழிப்பு வந்தது; இனிசிவனே என்றிருத்தல் ஆகாது என்றெழுந்தேன்.காப்பி கொடுக்கும்போதே நாளைகாப்பிப்பொடி இல்லை;மனைவியின் அவசரத் தீர்மானம்.செய்தித்தாள் படிக்கப் படிக்கச்செக்கச் சிவந்த வானமாயிற்று முகம்;பாலியல் வன்முறை, கடத்தல்,கொலை கொள்ளை, இலஞ்சம் கைதுவாகனவிபத்து…
வளவ. துரையன் அன்று வெள்ளை ஆடைஅணிந்த மகான் ஏற்றியது.இன்றும் அணையவில்லையாம்.வழிவழி வந்தவர்கள்தொடர்கிறார்களாம்.வாய்ச்சொல்லில் மட்டுமன்றுவள்ளன்மையிலும்இருக்கிறார்கள்.நாளாக நாளாகமரங்கள் பட்டுப் போகின்றன.குளங்கள் வற்றிப் போகின்றனமனங்கள் மரத்துப் போகின்றனசாலை ஓரத்தில்கையேந்துவரைப் பார்த்தால்கண்களை மூடுகிறார்.இன்றும்அணையா நெருப்புஅவரவர் வயிற்றுள்ளே!
ஜெயானந்தன் உடைந்து போன ஞாபக கண்ணாடிகளில் நழுவி சென்றது சித்திரை நிலா. போன நித்திரையில் ராமகிருஷ்ணன் வீடகன்று போனான். போனவன் வெளிச்சத்தையும் கொண்டு போய் விட்டான். வீடு இருளாகத்தான் காய்ந்து கிடக்கின்றது. இன்று வந்த …
ரவி அல்லது வாய்கள் தான்தீர்மானிக்கிறது.வார்த்தைகளின்வாசனைகளைமுகருமாறும்முகம் சுழிக்குமாறும்.அதன்ஏற்ற இரக்கசுதியில்தான்இயங்குகிறதுஉலகம்பிடி கயிற்றின்பின்னால்ஓடுவதாகமாடுகளற்றபொழுதும்மாறாமல்.கலைத் தோய்ந்துகாத்தமௌனத்தின் பொழுதானகண்டெடுப்பிற்குவடிவமிட முடியாதலயித்தலின் வாழ்க்கைதான்தள்ளிக் கொண்டேஇருக்கிறதுவார்த்தைகளைநோக்கிவாஞ்சைகள் கொண்டுவாழ்தலில் மகிழச்சொல்லி. -ரவி அல்லது.20/12/24.01:46ம.
ஆர் வத்ஸலா நடைபாதையில் காய்கறி வியாபாரம்கிழவிக்குடிரைவர் பொறுக்கிய காய்க்குகேட்ட பணத்தைவீசினார்காரில் வந்த கனவான்பொறுக்கி எடுத்த காசைசுருங்கிய கையால்டிரைவர் கையில் வைத்து விட்டுஅடுத்த ஆளை கவனித்தாள்கிழவி
ரவி அல்லது இரவெல்லாம்இருந்துவரைந்தேன்வண்ணமற்றுவாஞ்சையின்தூரிகையில்.வடிவமற்றேஒளிர்ந்ததுஇரவுபகலாகஅதனழகில். இப்படியிருந்தால்எப்படிக் காண்பதென்றார்கள்பகலைப்பார்வைக்குருடர்கள். பார்க்கும்பகலாக்கிக்கொண்டிருந்தேன்இவர்களுக்காகஇரவைபார்க்குமாவல் மேவ. விடிந்து விட்டதேஎன்றார்கள்எப்பொழுதும்போலகலக்கத்தில் . ம்ம்மபார்க்கலாம்என்றேன்பரவசம் சூழ. மறுபடியும்சொன்னார்கள்.இப்படி இருந்தால்எப்படிக்காண்பதென்றார்கள். நான்மறுபடியும்வரைந்தேன்.அவர்கள்பார்ப்பதாகமுயன்று கொண்டேஇருந்தார்கள்விழிகளுக்குதிரையிட்ட வண்ணமொருவினோதப்போக்கில்என்னை விளையாட விட்டு. -ரவி அல்லது.ravialladhu@gmail.com